Friday, 27 November 2020

ஜல்லிக்கட்டு (மலையாளம்)*மணி



லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில், 2019ல் வந்த மலையாளத் திரைப்படம் 'ஜல்லிக்கட்டு'. தற்போது, சிறந்த அயல்நாட்டு / சர்வதேசத் திரைப்படம் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாகப் போட்டியிட 'ஜல்லிக்கட்டு' தேர்வாகியுள்ளது.
இதுவரை மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய மூன்று இந்திய படங்கள் தொடர்ந்து தற்போது ஜல்லிக்கட்டு ஆஸ்கருக்கு செல்கிறது.
ஹரீஷ்.எஸ் எழுதியிருந்த ‘மாவோயிஸ்ட்’ என்கிற சிறுகதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம்.

அப்போது பார்க்கத் தவறிய படத்தை நேற்று பார்த்தேன்.ஒரு மணி நேரம் முப்பது நிமிடங்கள் படம்.தலைப்பை பார்த்து ஏதோ மாடு பிடி கதை என்பதை ஊகிக்க வேண்டாம்.

#கதை

இடுக்கி மாவட்டத்தில் கறிக்கடை நடத்தி வருபவர் வர்க்கி.படத்தின் டைட்டிலின் போதே விடியலில் ஒவ்வொருவரும் கண் விழித்தவுடன் அடுத்து செல்லும் இடம் கறிக்கடைக்குதான்.எருமைக்கறி பிரியர்களான அவர்கள் தினசரி சாபிடுவது தான் வழக்கம்.அய்யே ச்சீ னு முகம் சுளிக்க வேண்டாம். அவர்கள் வழக்கம் அது.

ஒரு நாள் அதிகாலை எப்போதும் போல் எருமை வெட்ட போகும் போது
உதவியாளர் கயிற்றை விட திடீரென ஊருக்குள் மூர்க்கத்துடன் ஓடுகிறது.
தகவலறிந்தவுடன் ஒவ்வொரு வீட்டின் ஆண்மகனும் பிடிக்க கிளம்புகின்றனர்.ஊருக்குள் துவம்சம் செய்தவுடன் காட்டுக்குள் போகிறது.ஒவ்வொருவரும் எப்படியாவது அதை பிடித்து கொன்றுவிட துடிக்கும் அன்னவெறி கண்ணையானாக துரத்துகிறார்கள்.

காட்டில் ஒரு கிணற்றில் விழுகிறது.
கயிறு கட்டி தூக்கும் போது ஒருவர் உயிரிழக்கிறார்.மீண்டும் எருமை தப்பித்து ஓடுகிறது. இறுதியில் பிடிபட்டதா இல்லையா என்பதே கதை

#கதை

*எது கிராபிக்ஸ் எருமை, எது உண்மை எருமையென கண்டுபிடிக்க முடியாதது நல்ல டெக்னிக்

*கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு ஓடி ஓடி உழைத்திருக்கிறது. பதுங்கி இருந்து எருமையைப் பார்ப்பது, இரவின் விளக்கொளியில் ஓடி வருவது,குதிரை வேகத்தில் கேமரா பயணிக்கிறது.

*இந்த ஒன்லைனின் இடையில் ஒரு பெண்ணிற்காக ஆண்டணி குட்டச்சன் மீது சந்தன மரம் வெட்டுவதாய் சிறைக்கு அனுப்புவதும், திரும்பி வந்து பழிவாங்குவது வருகிறது.

*பாடல் இல்லாதது,ஹீரோ, ஹீரோயின் இல்லாதது மிகப்பெரிய ப்ளஸ்.ஊர் மக்கள்தான் ஹீரோ.

*மணிஓசை கேட்கும் சோன்பப்படி விற்கும் போது, ஒளிந்திருக்கும் போது கொடுத்த கடனுக்கு வட்டி கேட்பது ரசனை

*ஆனால் ஓரிருவாய் ஓடும்போது இறுதியில் அத்தனை மனிதர்கள் வருவார்களா? கிணற்றிலிருந்து வந்த எருமை எப்படி தப்பித்தது?
எருமைக்கு அத்தனை பலம் இருக்குமா என நம்மை யோசிக்க வைக்கிறது?

*எருமைத் துரத்தும் ஒவ்வொரிவரின் மனநிலையையும் படத்தின் இறுதியில் மூதாதையராக காட்சிப்படுத்தியது அழகியல்

இதிலென்ன இருக்கிறது..
இதெல்லாம் எப்படி விருதுக்கு போகும் என நினைக்கும் முன்
அந்த ஊரின் கலாச்சாரம் என நினைத்தால் படம் பார்க்கலாம்

-மணிகண்டபிரபு

No comments:

Post a Comment