'எல்லாவற்றிற்கும் மேலாக பொய்ம்மையை விலக்கு! எல்லாப் பொய்ம்மைகளையும். குறிப்பாக உன்னோடு நீ சொல்லிக் கொள்ளும் பொய்ம்மையை.
உன் சொந்தப் பொய்ம்மையை எப்போதும் கவனித்துக் கொண்டே இரு. ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும், வெறுப்பை விலக்கு. மற்றவர் மீதும் உன் மீதும் கொள்ளும் வெறுப்பை.உனக்குள் வெறுப்புத் தோன்றினால், அதைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் அதைக் கழுவிக் களைந்து விடலாம்.
அச்சத்தை அகற்று.
அச்சம், பொய்களின் விளைவு.
அன்பைச் சாதிக்கும் போது, உன் அற்பமான சுயநலம் கண்டு அஞ்சி விடாதே.
சில சமயங்களில் நீ தவறாகச் செயல்பட்டால் அதற்காக மிகவும் கலவரப்பட்டு விடாதே.
இதைவிட உறுதிப்பாடான எதையும் என்னால் சொல்ல முடியாது.
பொய்யான நேசத்தை விட மெய்யான நேசம், கடினமானதும், பயங்கரமானதும் ஆகும்!
கற்பனை நேயம், உடனடியான சாகசச் செயல்களை உருவாக்கும். அவை அனைவர் கண்களுக்கும் புலப்படும்.'
- தஸ்தயேவ்ஸ்கி
No comments:
Post a Comment