Reading_Marathon2024
#24RM050
Book No:26/100+
Pages:163
இது உங்களுக்காக
-டாக்டர் பரத்சந்த்ரா
தமிழில் ரா.கி.ரங்கராஜன்
தீவிர இலக்கியத்தை படிக்கும்போது சற்று ரிலாக்சேஷன்காக தன்னம்பிக்கை புத்தகங்களையும் தேடுவது உண்டு.மேல்நாட்டு புத்தகங்கள் துவங்கி தமிழ்நாட்டில் உள்ள தன்னம்பிக்கை புத்தகங்களும் அடிக்கடி வாசிப்பேன். அப்படித்தான் இந்த புத்தகமும் கண்ணில் பட்டது. இந்த புத்தகத்தை வாசிப்பதற்கான முதல் காரணம் மொழி பெயர்த்தது ரா.கி ரங்கராஜன் அவர்கள். இந்த புத்தகம் முழுக்க முழுக்க மாணவர்களுக்கு மற்றும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய புத்தகம்.
தன்னம்பிக்கை ஓவர் டோஸ் ஆகும்போது கொஞ்சம் திகட்டி விடும் இந்த புத்தகத்தில் சில இடங்களில் அவ்வாறு இருப்பினும் மற்ற இடங்களில் எல்லாம் எதேச்சையான இயல்பான ரியாலிட்டியை ஒட்டி சில கருத்துக்களை சொல்லி உள்ளனர். தன்னம்பிக்கை புத்தகங்களின் பெரிய பலமே அதில் சொல்லப்படுகின்ற சிறுகதைகளும் சம்பவங்களும் தான். இந்த புத்தகங்களிலும் சில இடங்களில் மின்னுகின்றன.
மாணவர்களில் வாசிக்கும் போது
கோர்வையாக வைத்துக் கொள்ளாமல் தனித்தனியே வாசிப்பது தான் மனதில் இல்லாமல் போகிறது. ஆகவே எதனுடன் ஆவது தொடர்பு படுத்தி நினைவு கொள்ள வைக்கும் உத்தியை சொல்கிறது. ஒவ்வொரு நாளும் அதிக நேரம் வாசிக்கும்போது மறதியும் உடன் வருகிறது. அதற்கு விஞ்ஞானி எடின்பாஸ் அவர்கள் மறதி வளைவு என்று பெயர் சூட்டினார் .மறதிக்கான மருந்தாக மீண்டும் மீண்டும் நினைவு கூறும் திறனை அல்லது மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப படிக்கும் திறனை பற்றி அதில் சொல்லியிருக்கிறார்.
மற்றவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ள தவறுகளை ஒப்புக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அதற்கு உதாரணமாக டேல் கார்னகி என்ற எழுத்தாளர் பூங்காவிற்கு நாயுடன் சொல்கிறார். அங்கே உள்ள காவலாளி நாய்க்கு அனுமதியில்லை எனறு திருப்பி அனுப்புகிறார். 7 நாட்கள் கழித்து மீண்டும் நாயுடன் செல்கிறார் மீண்டும் அதே காவலாளி பணியில் உள்ளார். அவர் திட்டும் முன்பு
" நான் வந்தது தவறு தான், நீங்கள் சொல்லியும் நான் வந்து விட்டேன். என்னை கைது செய்யுங்கள்" என்று கேட்கிறார். அதற்கு அந்த காவலாளி மனம் உருகி பரவாயில்லை. நீங்கள் உள்ளே நாயுடன் சென்று வாருங்கள்.யாருக்கும் தொந்தரவு தராமல் என்று கூறுகிறார். எதிரில் இருப்பவரிடம் நியாய பாவத்துடன் தங்கள் உறவினை தொடர வேண்டும். எதிரில் இருப்பவர்கள் சரி சரி என்று ஆமாம் என்று சொல்ல வைப்பது ஒரு டெக்னிக் தான் என்கிறார். அவர்களின் உள்ளார்ந்த உயர் சிந்தனை தூண்டுவதன் மூலம் பெருந்தன்மையை நம் மீது காட்டவும் வழிவகுக்கிறது.
ஆலோசனைகள் கீழ் மட்டத்திலிருந்து வரவேண்டும். ஒரு ஓட்டல் நிர்வாகி கூட்டம் நடத்துகிறார். அதில் ஊழியர்கள் தொடர்ந்து விடுப்பு எடுப்பது தொடர்கிறது .இதற்கு என்ன செய்யலாம் என்பதை ஊழியர்கள் அனைவரையும் உட்கார வைத்து கேட்கிறார். அதில் ஊழியர் சங்கத் தலைவர் கொஞ்சம் காலத்திற்கு அத்தியாவசியமானவர்களுக்கு மட்டும் விடுப்பு அளிக்குமாறு ஆலோசனை சொல்கிறார். அதனை கேட்டு சேர்மன் மற்றவர்களிடம் இந்த ஆலோசனை சரிதானா? என கேட்கிறார் .ஊழியர்கள் அனைவரும் ஆமோதிக்கின்றனர். அன்றிலிருந்து சில மாதங்கள் ஒரு ஊழியரும் விடுப்பு எடுக்காமல் வருகின்றனர். ஹோட்டல் நிர்வாகம் சரியாய் சரியான திசையில் பயணிக்கிறது. இதற்கான முடிவில் அவர் சொல்வது எந்த ஐடியாவாக இருந்தாலும் அது எதிராளி சொல்வதாக இருக்கட்டும். தனது ஐடியாவுக்கு மதிப்பு இருக்கிறது என்பதனை அவர் ஒப்புக்கொள்ளும் போது நிர்வாக வசதிக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் ஒரு நற்பண்பு இருப்பதை அது காட்டும் என்கிறார்.
ஒரு நிறுவனத் தலைவர் ஊழியர்களை முதலில் எவ்வாறு அழைக்க வேண்டும் பதவியை சொல்லியா அல்லது ஒருமையில் அழைப்பதா என்று பலருக்கு குழப்பம் இருக்கும் .ஆனால் ஒரு சம்பவத்தில் ஒரு நிறுவனத்தின் மேலாளர் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். பெயர் சொல்லி வேலையை செய்யவில்லை சொல்கிறார் .உரிமையோடு அவர் பெயர் சொல்லி அழைப்பதை ஒவ்வொரு ஊழியரும் பெருமிதம் அடைகின்றனர்.
ஒரு குழு புகைப்படத்தில் முதலில் யாரை தேடுவோம் நம்மைத்தான் சந்தேகமே இல்லை .ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தான் முதலில் நேசிக்கிறான். அவன் தான் ஹீரோ பிறகு தான் மற்றவர்களுக்கு. நம்மைத்தான் முதலில் முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நிறுவனத் தலைவர் அலுவலகத்தில் நுழையும் போது முதலில் அவர்தான் அனைவருக்கும் வணக்கம் வைக்கிறார். ஏன் என்று கேட்டதற்கு நான் வைப்பதற்கு முன் அவர்கள் வைத்துவிட்டால் நான் அவர்களுக்கு வைப்பது போல ஆகிவிடும். ஆதலால் முதலில் நான் தான் அனைவருக்கும் வணக்கம் வைப்பேன் என்ற ஒரு நல்ல பழக்கத்தை குறிப்பிடுகிறார்.
நம்மில் பலர் நமக்கு பிடித்தது தான் மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்ற மேதமைத்தனத்தில் இருப்பதால்தான் மற்றவர்களின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள இயலவில்லை. நமக்கு சாக்லேட் பிடிக்கும் என்பதால் மீன்பிடிக்கச் செல்லும் போது மீனுக்கும் அது பிடிக்கும் என தூண்டிலில் சாக்லேட் வைத்தால் எந்த ஒரு மீனும் சிக்காது. ஆகவே மீனுக்கு என்ன பிடிக்கும்.. புழு தான் தூண்டிலில் வைக்க வேண்டும். அதுபோலத்தான் மற்றவர்களின் அன்பையும் மதிப்பையும் பெறுவதற்கு சரியான வழி தெரியாமல் தடுமாறுகிறோம். மற்றவர்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பதனை முதலில் ஒருவர் தெரிந்து வைத்திருந்தால் தான் அவரை முதலில் நண்பராகவே நாம் வைத்துக் கொள்ள முடியும்.
எந்த காரியத்தை முதலில் செய்வது.. நம்முடைய பாக்கெட்டில் 500 ரூபாய் முதல் 50, பத்து ரூபாய் நோட்டுகள் இருக்கின்றன. அவை காற்றில் பறக்கும் போது சிதறி விடுகின்றன .இப்போது முதலில் நாம் எந்த நோட்டினை முதலில் எடுப்போம். சந்தேகமே இல்லாமல் 500 ரூபாய் நோட்டை தான் .வாழ்க்கை இந்த தத்துவத்தை தான் நாம் கடைபிடிக்க வேண்டும். எந்த காரியத்தை முதலில் கவனிக்க வேண்டும் ,எந்த பிரச்சனையும் முதலில் தீர்க்க வேண்டும் என்று தெரிந்து கொண்டாலே போதும். ஏதாவது ஒன்றை நீங்கள் பற்றிக் கொள்ளாவிட்டால் ஏதாவது ஒன்று உங்களை கீழே தள்ளிவிடும் என்ற சீன பழமொழி கூறுகிறது
நம்முடைய கண்ணோட்டமும் மனோபாவம் மிகவும் முக்கியம் என்பதை குறிக்கும் ஒரு சொல்லாடல் ரசிக்க வைக்கிறது .சிறைக்குள் இருக்கும் இரண்டு கைதிகள் ஜன்னல் வழியே பார்க்கிறார்கள். ஒருவன் பார்வையை தாழ்த்திக் கீழே பார்க்கிறான். மற்றவன் பார்வையை உயர்த்தி வானத்தைப் பார்க்கிறான். வெளி உலகம் எல்லாருக்கும் ஒரே மாதிரியானதுதான். அதை எப்படி பார்க்கிறோம் என்பதுதான் முக்கியம். உலகம் மாறுவது கிடையாது உங்கள் கண்ணோட்டம் மாறுவதால் உலகம் மாறி இருப்பதாக தெரிகிறது. நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அப்படி ஆகிறீர்கள் என்று சொல்கிறார்.
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சிலசில சம்பவங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றன. உண்மையில் வாசிப்பு அனுபவம் என்பது பெரிய புத்தகங்களை விட சிறிய புத்தகங்கள் கிடைக்கும் சில சொற்றொடர்கள் நம்முடைய வாசிப்பவத்தை மேம்படுத்தும்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment