பயணவழிகளில் சன்னலின் வெளியே தோன்றி மறையும் காட்சிகளைப் போல கணநேரத்தில் நம் வாழ்விலிருந்து மறைந்துவிட மனிதர்கள் எப்படியோ பழகிக்கொள்கிறார்கள். பயணம் மீண்டும் அதே பாதையில் நம்மைச் செலுத்துகிறது. அதே சன்னல், அதே வேகம், அதே கணநேரத் தோற்றம், அதே கண நேர மறைவு. மனிதர்கள் வந்து வந்து போய்க்கொண்டேயிருக்கிறார்கள். நிறுத்தங்களற்றதாகவும், பரிமாறல்களற்றதாகவும் பரிணாம வளர்ச்சியை எட்டிவிட்ட இந்தப் பயணத்தை வாழ்க்கை என்று சொல்ல முடியுமா தெரியவில்லை. கனவு என்று உண்மையைச் சொல்ல மனமில்லாமல் வாழ்க்கை என்று ஒரு புனைப்பெயரைச் சூட்டி மிக நீண்ட ஒரு கனவில் மிதந்து திரிகிறோம்.-சேரவஞ்சி
No comments:
Post a Comment