Wednesday, 20 November 2024

சவிதா


வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் மிகச் சரியாக முடிவெடுக்கும் திறன் யாருக்கும் கிடையாது. ஆனால், தப்போ, சரியோ முடிவை அவரவரே எடுத்துப் பழக வேண்டும். 
தவறெனில் அதற்கான பின்விளைவுகளை அவரே சமாளித்துக் கொள்ள வேண்டும். That is called Responsibility. என் சாலையை நான் தேர்ந்தெடுத்துக் கொள்வேன். அதில் மகிழ்ச்சியடைவேன் என்பதுதான் சுயம். 

எப்போதும் முடிவை இன்னொருத்தரிடம் விட்டுவிட்டு உன்னால்தான் இப்படியானது என்று மற்றவர்களுக்கு குற்றவுணர்வை உண்டாக்குவதில் கிஞ்சித்தும் லாபமில்லை. நல்ல முடிவென்றால் தன்னால்தான் எனவும், தவறென்றால் இன்னொருவரை கைகாட்டி தப்பித்துக் கொள்வதும் கோழைத்தனம். தனக்கான முடிவை, தனக்கான தேர்வைக் கூட ஒரு மனிதன் செய்து கொள்ளாமலிருப்பது கையாலாகாத்தனமில்லையா? 

சிறுவயதிலிருந்து இதை குழந்தைகளுக்கு பழக்குங்கள். உங்களிடம் வந்து விளையாட்டா, படிப்பா எனக்கேட்டால் படிப்புதான் உனக்கு நன்மை தரும் என்று அறிவுரை வழங்காமல், எதுவென நீயே முடிவு செய் என்று சொல்லுங்கள். இப்படிப்போனால் கஷ்டம் வரலாம். . நிச்சயம் அதை நீ தனியேதான் சமாளிக்க வேண்டும் என்பது மட்டுமே நம் அறிவுரையாக இருக்க முடியும்.

-சவிதா

No comments:

Post a Comment