Saturday, 30 November 2024

கோகுல் பிரசாத்


பிறர் அறியாத ஆயிரமாயிரம் விஷயங்களை நீங்கள் இவ்வாழ்க்கையில் கடந்து வந்திருக்கிறீர்கள். உங்களை அதிர்வுக்குள்ளாக்கிய, உருமாற்றிய, சுக்குநூறாக்கிய, உங்களது ஆளுமையைக் கட்டமைத்த, படிப்பினையை வழங்கிய எண்ணற்ற அனுபவங்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இவை அத்தனையும் சேர்ந்ததுதான் உங்களது இன்றைய ‘சுயம்.’

எனவே, எதேனும் ஒரு சூழலில் எதிர்வினையாகவோ உணர்ச்சியாகவோ நீங்கள் வெளிப்படுத்துகிற உங்களது சுயத்தின் சின்னஞ்சிறு பகுதியை மட்டும் எடைபோட்டு யாராவது மதிப்பிடும்போது, முத்திரை குத்தும்போது, நீங்கள் யார் என்பதை நினைவுகூருங்கள். அவை உங்களது பல்வேறு முகங்களுள் ஒரு முகம் மட்டுமே. நீங்கள் எத்தனை எத்தனை சவால்களைத் தாண்டி வந்திருக்கிறீர்கள் என்பதை எண்ணி ஒரு புன்னகையுடன் அவர்களைப் புறந்தள்ளுங்கள். முடங்கிவிடாமல் உங்களது லட்சியப் பாதையில் தொடர்ந்து முன்னேறுங்கள். நீங்கள் யாருக்கும் எதையும் விளக்கி நிரூபிக்க வேண்டிய கட்டாயமில்லை. 

ஒருவரின் முழுமையான அகத்தையோ சுயத்தையோ யாராலும் அறிய முடியாது என்பதை நினைவில்கொள்ளுங்கள். மற்றவர் கண்டிராத நூறு நூறு கொந்தளிப்பான புயல்களின் ஊடாக நீங்கள் எதிர்நீச்சல் போட்டு இவ்விடத்தை அடைந்திருக்கிறீர்கள். ஏற்கெனவே பல்வேறு முறை உங்களுக்கு நீங்களே நிரூபித்தது போதும்.

- கிர்ஸ்டன் கார்லே.

No comments:

Post a Comment