கற்றதும் பெற்றதும்-35
*மணி
நான் எப்போதும் நினைத்து கொள்ளும் நகைச்சுவை கதை-கல்கி யுடையது
நான்குநேரி ஜீயருக்கு திருநெல்வேலியில் ஒரு கிளைமடம். அங்கே இருந்த தாத்தாச்சாரிய சாமிகள் குளத்தில் விழுந்து கால் ஒடிந்துவிட்டது. குப்பனை அழைக்கிறார்கள். ”டேய், நீ என்ன பண்றே , ஓடி நான்குநேரிக்குப் போய் ஜீயர் சன்னிதானத்தைப் பார்த்து இப்டிச் சொல்றே. எப்டிச் சொல்லுவே? ”ஸ்ரீஸ்ரீஸ்ரீ உபய வேதாந்த மகா கனம் ராமானுஜதாச அண்ணா தாத்தாச்சாரியார் ஸ்வாமிகள் ஸ்ரீ புஷ்கரணியிலே திருப்பாதம் வழுக்கி விழுந்து திருக்கால் ஒடிந்து ஸ்ரீமடத்திலே திருப்பள்ளிக் கொண்டிருக்கிறார்’ அப்டீன்னு சொல்லணம் புரியறதோ?”
சரி என்று குப்பன் ஓடிப்போய் நான்குநேரி மடத்தில் ஜீயரைக் கண்டு சுருக்கமாகச் சொன்னான் ”மொட்டைத்தாதன் குட்டையிலே விழுந்தான்”
"கதை என்பது இயல்பாக எளிமையாக ஆழமான உண்மையை ஒரு மேம்போக்காக சொல்லும் ஒரு வித்தையாக பார்க்கப்படுகிறது. சிறுவயதிலிருந்தே கதை கேட்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று அவ்வகையில் பிரபஞ்சனின் கதை புத்தகம் ஒன்று
#கதைமழை
-பிரபஞ்சன்
ஜுனியர் விகடனில் தொடராய் வந்தபோது வாரந்தோறும் படித்துவிடுவது.துளியாய் விழுந்து, பின் தொடர் மழையாய் நீர் விழுவது போல, பிரபஞ்சனின் அனுபவத்தை தூறலாய் தூவி, பின் உலக கதைகளை கூறுவார்.2013ம் ஆண்டு திருப்பூர் புத்தகத்திருவிழாவில்தான் ஆன்டன் செகாவின் குமாஸ்தாவின் மரணம் கதை சொன்னது இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நிறுத்தி நிதானமாய்..மழையாய் பார்த்து அருந்தும் தேநீர் போல பிரபஞ்சன் சார் கதை சொல்லுவது தனி ரகம்.கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
#ஒரு தும்மலால் உயிர்நீத்த குமாஸ்தாவின் மரணக்கதை போல எழுத்தாளர் ஜெயந்தன் கதையை கூறி இருப்பார்.
" தாசில்தார் குமாரய்யாவின் பியூன் முனுசாமி ஒரு சின்சியர் சேவகர். "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்" என பெருமையாய் நினைக்குமளவு விசுவாசம்.
ஒருநாள் தாசில்தார் மாற்றப்பட்டுவிட்டார். விழா நடந்தது தாசில்தாருக்கு.. ஒரே சோகம் முனியசாமிக்கு. தன்னைவிட்டு எப்படி பிரிந்திருப்பான் என்று கலங்கினார் பழைய தாசில்தார் குமரய்யா. அப்போது புதிய தாசில்தார் வந்து விட்டார் என்றதும் தன் தலையில் வைத்திருந்த அவர் பெட்டியை தூக்கி போட்டு விட்டு, புதிய தாசில்தாரை பார்த்து ஓடினான் பியூன் முனியசாமி. திகைத்துப்போய் நின்றார் பழைய தாசில்தார் குமரையா.
" மாடுகளுக்கு கொம்பு என்பதை மறந்து பல்லாயிரம் ஆண்டுகளாயின. மனிதர்கள் தாங்கள் மனிதர்கள் என்பதை ஓட்டு போடும் போது மட்டும் புரிந்து கொள்வார்கள் என முடித்திருப்பார்.
# திருடுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஆசையிருக்கும். ஆனால் அந்த பயம் தான் நம்மை திருட விடாமல் செய்கிறது என்பார் எஸ். ராமகிருஷ்ணன். அதுபோல பிரபஞ்சம் இக்கட்டுரையில் திருட்டைப் பற்றி சொல்லும்போது திருட்டு செயல்பாட்டில் இருக்கும் சாகசம்தான் பலரை அதை ரசிக்கச் செய்கிறது. மணியன்பிள்ளை சுயசரிதைதை விளக்குகிறார்.
"புதிய கார் வாங்கி ஓட்டி செல்லும் ஒருவனிடம் லிப்ஃட் கேட்கிறான் ஒருவன். அவன் தொழில்முறை திருடன் என அறிமுகம் செய்துகொள்கிறான். ஒரு புறம் பயம் இருந்தாலும் அவனை சாதாரணமா நினைக்கிறான். சிறுது நேரத்தில் திருடனின் கையில் லைட்டர், மோதிரம் டிரைவிங் லைசென்ஸ் என காரோட்டியின் பாக்கெட்டில் இருந்ததை அவனுக்கே தெரியாமல் எடுத்திருப்பது கண்டு வியக்கிறான்.
இடையில் போலீஸ்காரர் ஒருவர் வண்டியை நிறுத்தி பெயர் மற்றும் முகவரியை ஒரு தாளில் குறித்துக் கொள்வார்.பின் கார் கிளம்பிய சிறிது நேரத்தில் போலீஸ்காரர் குறித்து வைத்திருந்த அந்த இரண்டு தாள்களை எடுத்து காரோட்டியிடம் கொடுக்கிறான்.
உண்மையில் நீ ஒரு விரல்வித்தகன் என்கிறான் காரோட்டி. என பிரிட்டிஷ் கதையை கூறி பின் தமிழிலும் புதுமைப்பித்தன் எழுதிய சங்குதேவன் தர்மத்தில் திருடனின் கண்ணியத்தை கூறுகிறார்.
#சிலப்பதிகாரத்தில் மாதவியின் மனநிலை மிக நுட்பமாக பதிவு செய்கிறார். நான் என்ன குற்றம் செய்தேன் என்று மாதவி கேட்கும் கேள்வி கோவலன் பதில் அளிக்க முடியாததை பதிவு செய்கிறார். மனைவிக்கு பின் வந்தவளை "மாற்றாள்" என்பர்.மாதவியின் மனநிலை மற்றும் நேர்மையை செகாவ் ன் "நடிகை" கதையுடன் ஒப்பிட்டு கூறுவார்.
# யாருமற்றவர்களின் கதைகள் அதிகம் வந்துள்ளது அவ்வகையில் ஜெர்மன் கதையை நம்முடன் பகிர்கிறார் பிரபஞ்சன்.
" அந்த அலுவலகத்தில் பியூனாக வேலை பார்க்கிறார் ஜோசப். அலுவலகத்தில் குமாஸ்தா ஒருவர் காலமாகிவிட்டார் இந்த சீட்டை காட்டி பூமாலை,செலவுகளுக்கு விருப்பம் உள்ளவர்களிடம் பணம் வாங்கி வா என்று அனுப்பினார் மேனேஜர். அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு ஊழியரிடமும் சென்று வசூலிக்கிறான்.இவ்வாறு பணம் வசூலிப்பது தான் இவன் முக்கிய வேலை. ஒருநாள் ஜோசப் இறக்கிறான். வாழையடி வாழையாக வந்த இன்னொருவன் இவனுடைய மரணத்துக்கு வசூல் செய்கிறான் இவ்வாறு யாருமற்றவர்களின் கதைகள் எல்லாருக்கும் பாடமாக விளங்குகின்றன என்பார்.
# திருடுவது பற்றி பிரபஞ்சன் கூறும்போது.. திருடுவது மிகவும் கடினமான வேலைதான். என் காலத்து அரசியல் கூட தொண்டு என்கிறார்கள்,சேவை என்றோ, தொழில் என்றோ, ஒப்புக் கொள்வதில்லை. திருட்டு எவ்வளவு கஷ்டமான வேலை. இருட்டில் நடக்கவேண்டும். கல்லில் மோதி நகம் சிதையும். பூட்டைச் சத்தம் வராமல் உடைக்க வேண்டும். கால்கள் வழியாக வீட்டுக்குள் முட்டிக் கொள்ளாமல் நடக்க வேண்டும். அலமாரிகள் தான் மக்கள் உயிரை சேமிக்கிறார்கள். அங்குள்ள ரகசிய அறைகளை திறக்க வேண்டும். .அறைகளில் இருந்தால் அதிர்ஷ்டம் இல்லையெனில் சிரமம் என்பார்.
இத்தொடர் விரைவில் முடிந்துவிட்டாலும் இது மிகச்சிறந்த தொடர்பாக வந்திருந்தது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment