Thursday, 27 September 2018

படித்தது

[14/07, 10:39 pm] SATHIS W: 'பாத்துமாவின் ஆடு'

பஷீர் எழுதிய இந்தக் கதை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு காலகட்டத்தில் நடந்தே தீரும் என்பது எழுதப்படாத விதி.
விசயம் யாதெனில். பஷீரைப் போல அந்த ரணமான தருணங்களை ஒரு நகைச்சுவையுணர்வோடு நம்மாலும் கடந்து செல்லக்கூடிய மனச்சூழல் நமக்கு வாய்க்குமா என்பது தான்.

எந்த மனநிலையில் இந்தக் கதையை வாசிக்கிறோமோ அதை அப்படியே பிரதிபலிக்கிற கண்ணாடியைப் போன்ற ஒரு கதை.

கதை மாந்தர்கள் அத்தனை பேரின் சிறுமைத்தனங்களுக்குள்ளும் சிக்கிக்கொண்டு வருந்தாமல், ஒரு ஆட்டுக்குட்டியின் குறும்புத்தனத்துக்குள் தன்னை நுழைத்துக்கொள்வார்.

உண்மையில் பாத்துமாவின் ஆட்டில் வரும் கதை மாந்தர்கள் எல்லோரும் பஷீரைக் காயப்படுத்தியவர்கள். எல்லோரும் என்றால் அவரின் குடும்பத்தினர். ஆனால் அவர்கள் எல்லோரையும் மேன்மைப்படுத்தி எழுதியிருப்பார். மறுபுறம், இந்த ஆடு அதற்கேயுண்டான சேட்டைகளை அவ்வப்போது செய்துகொண்டிருக்கும். ஆனால் அதற்குத் தன் புத்தகங்களைத் தின்னக் கொடுப்பார்.கதை நெடுக அந்த ஆடு தின்பது எல்லாம் பஷீர் மனிதர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பாத மனக்குமுறல்களைத்தான் என்பது வாசகனுக்கே வெளிச்சம்.

மீண்டும் மீண்டும் பஷீரைத்தான் வாசிக்க வேண்டியிருக்கிறது. மீண்டும் மீண்டும் பஷீரைத்தான் நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பிரபாகரன்
[14/07, 11:12 pm] SATHIS W: எழுத்தைத் தொழிலாகக் காணவேண்டாம். வேறெதாவதை தொழிலாக வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் குழி தோண்டுங்கள்; ஆனால் எழுத்தினை உங்களின் ஓய்வு நேரப் பொழுதுபோக்காகக் கருதுங்கள். என்னைப் பொறுத்தவரை எழுத்து ஒரு பொழுதுபோக்கு. தொழிலால் நான் ஒரு விவசாயி.

- வில்லியம் ஃபாக்னர்.
[15/07, 7:41 am] TNPTF MANI: ஒரு சந்திப்பிலேயே நம்
ஆயிரம் சந்திப்புக்களின் இனிப்பை
அருந்த விரும்புகிறேன்,நான்.
சிறு சிறு இலைகளாக பெரியமரம் ஒன்று நிற்பதைப் போல
சிறுசிறு கயிறுகளால் மாபெரும் சர்க்கஸ்
ஒன்று நடந்துகொண்டிருப்பதைப் போல.

மேலும்
நாம் சந்திக்கத்தான் வேண்டுமா
ஒருதுளி சாலையில் பெய்யவும்,முழு
மழையும்
மறைந்துவிடுகிறது.

- தேவதச்சன்
[15/07, 7:43 am] TNPTF MANI: தோல்வியும் வெற்றியும் மனநிலைகள்தான்.ஆனால் இதை உணர்வதை நிர்வகிப்பதற்கு இன்னொரு மனநிலை வேண்டும்
-லா.ச.ரா
[15/07, 7:45 am] TNPTF MANI: சூரிய நமஸ்காரம்

புல்லை நகையுறுத்திப்
பூவை வியப்பாக்கி
மண்ணைத் தெளிவாக்கி
நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளியாக்கி
விந்தை செய்யும் சோதியினை
காலைப் பொழுதில்
கண் விழித்து
நான் தொழுதேன்

-பாரதியார்
[15/07, 7:47 am] TNPTF MANI: ஒரு புதிய ஐடியா என்பது ரொம்ப மென்மையான பொருள்.

ஒரு கேலிச்சிரிப்பு அதைக் கொன்றுவிடும்
ஒரு கொட்டாவி அதைச் சாகடித்துவிடும்
ஒரு குத்தல் பேச்சு அதைக் குத்தி வீழ்த்திவிடும்
ஒரு முறைப்பு அதன் மூச்சை நிறுத்திவிடும்

-படித்ததில் பிடித்தது
[15/07, 8:12 am] TNPTF MANI: அன்றே துவை
ஆறுமுன் உண்
இஞ்சி சேர்
ஈ ரசி
உடலே சொத்து
ஊதியம் மிகேல்
எச்சில் மருந்து
ஏதாகிலும் செய்
ஐ என்
ஒருதுணை பேண்
ஓர்மை இனிது
ஒள ஐ
ஃ கவிதை

-படித்தது
[16/07, 7:00 pm] TNPTF MANI: நீ இந்த பூமியை
காலால் முத்தமிடுவது போல்
நடந்து செல்வாயாக

-ரூமி
[17/07, 6:59 am] TNPTF MANI: பயணம்...

“காலையில்
அய்யராத்து ஹோமத்தில்
கலந்துட்டு,

மதியம்
பஷீர் பாயின் பிரியாணி
விருந்தை முடிச்சிட்டு,

இரவு பீட்டர் தாத்தா
சாவில்
துக்கம் அனுசரித்தது...

சாமியானா பந்தல்..!”

- காஞ்சனா ராம்
[17/07, 7:05 am] TNPTF MANI: "சொன்னான்" என்பதும் 'கூறினான்' என்பதும் நிற பேதங்கள் காட்டும் சொற்கள்
-சுந்தர ராமசாமி
[17/07, 7:20 am] TNPTF MANI: நீங்கள் வெகுதூரம் செல்ல வேண்டுமானால் மிக அருகிலிருந்தே துவங்க வேண்டும். மிக அருகில் என்பது உங்களிடமிருந்தேதான்.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி
[17/07, 7:56 am] TNPTF MANI: விவசாயி ஒருவன் உருக்கமாக வேண்டியதற்கு மதிப்பளித்துக் கடவுள் அவன் முன் தோன்றினார்.
“எனக்கு நல்ல மனைவியைக் கொடுத்ததற்கு நன்றி கடவுளே... ஏன் அவளை இவ்வளவு கருணை பொழியும் உள்ளத்தோடு படைத்தாய்?” என்று கேட்டான்.
கடவுள் சொன்னார்: “அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்.”
“ஏன் அவளை இவ்வளவு நல்ல சமையல்கலை நிபுணராகப் படைத்தாய்?”
“அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்.”
கடைசியாக அவன் கேட்டான்: “எல்லாம் சரி கடவுளே... ஆனால் அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய்?”
கடவுள் சொன்னார்:
“அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்.”

-தாருண்யன் ரவி
[17/07, 10:46 am] TNPTF MANI: நதி அமைதியாக உறைந்திருக்கிறது.
மலைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன
-ஜென்
[17/07, 10:49 am] TNPTF MANI: முப்பது நாள்களில் ஒரு நாள்கூட
ஒரு மாதத்திடம்
பொய் சொன்னதில்லை;
ஒரு மாதம்கூட ஒரு வருடத்திடம்
பொய் சொன்னதில்லை
அதனால்தான்
காலம் - இன்னும் காலமாகாமல்
வாழ்கிறது
காலத்துள் வாழ்பவன்
பொய்சொல்லிக் காலமாகிறான்!
-தமிழன்பன்
[17/07, 11:04 am] TNPTF MANI: கருப்பு, கறுப்பு - இவற்றில் எது சரியான சொல் ? நிறத்தைக் குறிக்க எதைப் பயன்படுத்த வேண்டும் ? இவ்வையம் தற்போது தலைவிரித்தாடுகிறது. இதை முழுமையாகவே உங்களுக்கு விளக்கி விடுகிறேன்.

கருப்பு என்று ஒரு சொல் இருக்கிறது. அதற்கு என்ன பொருள் என்றால் ‘பஞ்சம், வறுமையான காலகட்டம்’ என்பதுதான் பொருள்.

கறுப்பு என்பதற்கு என்ன பொருள் ? கரிய நிறத்தைக் குறிப்பது கறுப்பு. கறு என்ற வினையடியாய்த் தோன்றிய தொழிற்பெயர்தான் கறை. இன்னொரு பொருள் சினம், வெகுண்டெழுதல். கறுத்தான் என்றால் சினந்தான் என்று பொருள்.

காரிருள், கரி, கருமை, கருகிய.... இவை அனைத்தும் கறுப்பைக் குறிப்பதால் கருப்பு என்பது சரியாக இருக்காதா ? பார்ப்போம்.

கறுப்பு என்பது நிறப்பெயர். கருமை என்பது பண்புப்பெயர். பண்புணர்த்தும் சொற்கள் மை விகுதி பெற்றுவரும் என்று அறிவோம். கறுமை என்று வராது. கருமை என்று வரும்.

சிவப்பு என்று ஒரு நிறப்பெயர் இருக்கிறது. அதன் பண்புணர்த்தும் சொல் சிவமை என்றா வருகிறது ? இல்லை. செம்மை என்று வருகிறது. வெளுப்பு, வெள்ளை என்ற நிறத்தின் பண்புக்கு வெண்மை என்ற சொல் பயில்கிறது. பச்சைக்குப் பசுமை. ஆக, கறுப்பு என்ற நிறத்தின் பண்பினை உணர்த்தும் சொல்லாகக் கருமை என்று வரும். ஒரு நிறப்பெயரின் பண்பை உணர்த்த வேறு சொல் பயிலும் என்பதை ஏற்றுக்கொண்டால் இந்த ஐயம் முடிவுக்கு வந்துவிடும்.

கருமைக்கு வினையடி வேர் கருகுவது. ஏதேனுமொன்று கருகினால் அது கருமையடைந்துவிடும். அந்த நிறம் கறுப்பு. கரிதல் என்றால் கருகுதல், தீய்தல். அதன் விளைவுதான் கரி. கரிபிடித்த பாத்திரம் கறுப்பாக இருக்கும்.

கருமை என்னும் பண்புப்பெயர் ஏராளமான புணர்ச்சிச் சொற்களை உருவாக்குகிறது. காரிருள், கார்மேகம், காரேறு (கறுப்புக் கிடா) என எண்ணற்ற சொற்கள் உள்ளன. கருமை என்னும் சொல் பண்புப் பெயர்ப் புணர்ச்சியில் கார் என்று ஆகும். எப்படி ?

காரிருள் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதை எப்படிப் பிரிக்கலாம் ?

கருமை + இருள் = காரிருள். இது எப்படிப் புணர்ந்தது ?

ஈறுபோதல் விதிப்படி, ஈற்றே உள்ள மை விகுதி கெட்டு கரு + இருள் என்று நின்றது. ஆதிநீடல் என்ற விதிப்படி காரு + இருள் என்றானது. ஆதி என்றால் முதல். நீடல் என்றால் நீள்வது, நெடிலாவது. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்ற விதிப்படி காரு+இருள் என்பதில் வருமொழி ‘இ’ருள் வந்ததால் கா‘ரு’-வில் உள்ள உகரம் விட்டுவிட்டு ஓடியது. இப்போது எஞ்சுவது கார்+இருள். உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி, இதுவே காரிருள் என்று புணர்ந்தது.

ஆக, கருமை என்ற பண்பும் கருகுதல் கரிதல் என்ற வினைகளும்தான் இச்சொற்களின் வேர்கள். கருமை என்னும் இந்தப் பண்புப் பெயர் ‘கருப்பு’ என்றாகி நிறப்பெயராகத் தோன்றாது. 

ஆக, கறுப்பு என்பதே நிறப்பெயர் என்பதை அறிக. உணர்க. தெளிக. ஆள்க. 

இந்த நிறத்தைக் குறிக்கும் வினைச்சொற்கள் ‘கரிந்தது, கறுத்தது’ எனப் பயிலும். இதுவே எச்சமாகப் பயில்கையில் கரிய, கறுத்த என்று வரும். இவையெல்லாம் நம்மைக் குழப்புபவை. வினைவேர்ச்சொற்களையும் அவற்றின் பொருள்களையும் அறிந்தபின் நம்மைக் குழப்பம் அண்டாது.

இன்னொரு எடுத்துக்காட்டைப் பாருங்கள். கரியவன் என்றொரு சொல் இருக்கும். அது கறுப்பாய் உள்ளவனைக் குறிக்கும். இதுவும் பண்புப் பெயர்ப் புணர்ச்சியால் தோன்றிய சொல்தான். கறுப்பு கருப்பு குழப்பத்தை மிகுவிப்பது. ஆனால் இச்சொல் கருமை என்னும் பண்புப் பெயர்ப் புணர்ச்சியால் தோன்றுவது.

கருமை + அவன் = கரியவன்

ஈறுபோதல் விதிப்படி மை கெட்டு ‘கரு அவன்’ என்றானது. இடை உகரம் இய்யாதல் என்ற விதிப்படி கரு-வில் உள்ள உ கெட்டு இ ஆனது. கரு கெட்டு கரி ஆனது. கரி+அவன் என்று ய் என்னும் உடம்படு மெய் தோன்றி கரி+ய்+அவன் = கரியவன் என்று ஆனது.

கறுப்பனைக் குறிக்கப் பயிலும் கரியவன் சொல்லில் இடையின ரி இருப்பதால் கருப்பு என்று கருதிக்கொள்கிறோம். ஆனால், அது கருமை என்ற சொல்வழியே நிகழ்ந்த பண்புப் பெயர்ப் புணர்ச்சி என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

- கவிஞர் மகுடேசுவரன்
[18/07, 6:51 am] TNPTF MANI: யானை தன்னை அறிந்து கொள்ளவே இல்லை. யாரோ கொடுக்கிற வாழைப்பழத்திற்காக அது தனது தும்பிக்கையை தூக்கி ஆசீர்வாதம் செய்கிறது. பாகன் தரும் சோற்றுக் கவளங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது. யானை வாழ்வதற்கான இடம் கோவில் இல்லை. ஆனால், யானை பழகிவிட்டிருக்கிறது."

"*ஜெயித்தவர்கள் உலகோடு பேரம் பேசத் துவங்கிவிடுகின்றனர்

-எஸ்.ரா
[18/07, 6:54 am] TNPTF MANI: என்றைக்கு மனிதன் தன் எதிரியின் மண்டையில் பாறாங்கல்லால் அடிக்காமல்,வாயினால் திட்ட ஆரம்பித்தானோ அன்றைக்குத்தான் நாகரிகம் ஆரம்பமாயிற்று
-p
[18/07, 6:59 am] TNPTF MANI: தண்ணீர் கொதிப்பதற்குதான் நேரம் தேவைப்படுகிறது. ஆவியாவதற்கல்ல..
புரிதலும் தயாராவது அப்படித்தான்
-நாகூர் ரூமி
[18/07, 9:35 pm] THANGAM: மழை சங்கீதம். என் வீடு ஒழுகுகிறது.

-பிரபஞ்சன்
[19/07, 7:04 am] TNPTF MANI: கொள்கை என்பது கருத்துக்களை முகமூடிகளாக மாற்றும்.அவற்றை அணிபவர்களை மட்டும் முகமூடிகள் மறைப்பதில்லை.நிஜத்தையே அவர்களது பார்வையிலிருந்து மறைத்து விடுகின்றன"

-ஆக்டேவியோ பாஸ்
[19/07, 7:16 am] TNPTF MANI: நடக்கும் போது மனம் சமநிலை அடைந்துவிடுகிறது. இயற்கையின் அற்புதம் போல நடக்கும்போது  மனம் அமைதிபெறும வித்தையை அநுபவப்பட்டவர்கள்தான் உணரமுடியும்.”

-படித்தது
[19/07, 7:17 am] TNPTF MANI: சட்டை

என்னிடம் கையிருப்பதால்
அதுவும் கை வைத்திருந்தது
என் கழுத்துக்காக அது கழுத்து வைத்திருந்தது
என் உடம்புக்காகவே அது உடம்பு வைத்திருந்தது
(நான் அதற்காக ஏதாவது வைத்திருந்தேனா?)
ஆனாலும்
என்னைத் ’தேவதேவன்’ என்றல்ல,
ஒரு மனித உடல்
என்று மட்டுமே அது எடுத்துக்கொண்டிருந்தது
ஆகவே மனித உடல் எதையுமே
அது ஏற்றுக்கொண்டது
(இதன் பெயர்தான் மனிதாபிமானமா?)

எனக்காக அது பாக்கெட் வைத்திருந்தது
என் பணத்தை அது பாதுகாத்தது
என் உடம்பை அது கவனித்துக்கொண்டது

நான் அதற்காக
ஏதாவது செய்யணுமே எனத் துவங்கி
அதை சோப்புப் போட்டு சுத்தமாக்கினேன்
அதுவும் எனக்காக இருந்ததில் சோர்ந்து போனேன்

தனக்கென ஏதும் கேட்காத சட்டையுடன்
எங்ஙனம் வாழ்வேன்?

அதன் கைகளுக்காகவே என் கைகள்
எனக் கூறிச் சந்தோஷப்பட்டேன்
அதன் கழுத்துக்காகவே நான் என் தலையை
வைத்திருக்கத் துணிந்தேன்
அதன் உடம்புக்காகவே என் உடம்பு
அதைச் சுமந்து செல்லவே என் கால்கள்
இல்லாத அதன் உயிருக்காக
என் உயிர்

- தேவதேவன்
[19/07, 8:25 am] TNPTF MANI: குடும்பம் என்பது என்ன?
ஒருவன் தானாக ஏற்றுக்கொண்ட சுமை
-கநாசு
[19/07, 10:23 am] TNPTF MANI: என்னுடைய இதயம் துடிப்பது போல்
என்னுடைய எச்சிலின் சுவையை
நான் உணர்வதைப்போல்
என்னுள் இருக்கும் கோபத்தை
நான் உணர்ந்திருக்கிறேன்.
காயப்படுதலைவிட கோபப்படுதல் எளிதானது.
என்னுடைய உடல்
எவ்வளவு தண்ணீரால் நிரம்பியிருக்கிறதோ
அவ்வளவு கோபத்தாலும் நிரம்பியிருக்கிறது.
......

- மார்லன் ரிக்ஸ்
தமிழில் கிரீஷ்/ விடுபட்டவை நூல்/ கருப்புப் பிரதிகள்
[19/07, 9:07 pm] TNPTF MANI: 'ஆண்களுக்கு ஆசையைவிட ஆணவம்தான் அதிகம். ஒரு இடத்தில் தோற்றுப் போகாமல் இருப்பதற்காக  கொல்லவும் சாகவும்கூடத் தயாராக இருப்பார்கள். தான்  எங்கும் தோற்காதவன் என்று நினைக்கும் ஆணவத்திற்காக எதை வேண்டுமானாலும் இழப்பார்கள்'

- ஜெமோ
[20/07, 6:53 am] TNPTF MANI: தவறு செய்வோரைப் பாதுகாத்துக் கொண்டே வந்தோமானால் இறுதியில் உலகம் பூரா முட்டாள்களே நிரம்பியிருப்பார்கள்
- ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்
[20/07, 6:54 am] TNPTF MANI: உன்னைப்பற்றி
யாருமே பேசவிரும்பாதபோது
உன்னைப்பற்றி
யாருக்குமே எதுவும் தெரிந்திருக்காதபோது
உனக்கு உன்னைப்பற்றித் தெரிந்திருந்தால்
நீயே முதலில் பேச வேண்டும்.

- மார்லன் ரிக்ஸ்
கிரீஷ்/ விடுபட்டவை நூல்
கருப்புப்பிரதிகள் வெளியீடு
[20/07, 7:02 am] TNPTF MANI: தமிழ் எழுத்தாளன் – 745

இலக்கியம் ஒருவரைப் பண்படுத்துமா?

உயர்ந்த இலக்கியம் அதைச் செய்கிறது. தன் முதிய வயதில் டோல்ஸ்டோய் எழுதிய நீண்ட கதை ‘The Death of Ivan Ilyich’ அறம் பற்றி பேசுவது. இவான் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஒருவருக்கும் தீங்கிழைக்காத சாதாரண வாழ்க்கை அவருடையது. அவர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து காயம் பட்டு தீர்க்க முடியாத நோயாளியாக படுக்கையில் படுத்துவிட்டார். மருத்துவர் அவரிடம் உண்மை பேசுவதில்லை. மனைவி வேண்டா வெறுப்பாக நடந்துகொள்கிறார். ஒருவரும் அவருக்கு உண்மையாக இல்லை, ஒரேயொரு வேலைக்காரனைத் தவிர. அவர் கடவுளைப் பற்றியும், வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றியும், அறத்தைப் பற்றியும் தன் இறுதி காலத்தில் சிந்திக்கிறார். வாசக மனங்களையும் உண்மையை நோக்கி நகர்த்துகிறார்.

அமெரிக்க பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் மேலாண்மை பாடத்தின்போது இந்தக் கதை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது மனிதனை சிந்திக்க வைக்கிறது. வாழ்வின் அர்த்தம் பற்றிய தெளிவை உண்டாக்குகிறது. மேம்படுத்துகிறது.

- அ.முத்துலிங்கம்

வாசிப்பவற்றை எந்த அளவுக்கு மனதில் கொள்கிறோம், அவற்றை எந்தெந்த வாழ்க்கைத் தருணங்களில் நினைவுகூர்கிறோம், பொருத்திப் பார்க்கிறோம்; இவை முக்கியம். யதார்த்த வாழ்வில் நான் சந்தித்த சில விந்தையான சிக்கல்களை அணுக புதுமைப்பித்தன், அசோகமித்திரன் போன்றோரின் சிறுகதைகள் உதவியிருக்கின்றன. மன அமைதி அல்லது சாந்தம் என்பது பண்படுதலின் ஓர் இன்றியமையாத பரிமாணம் என்றால், இலக்கியத்தால் பண்படுத்தப்படுகிற பேறு சில சமயங்களில் எனக்குக் கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

- பெருந்தேவி

அரசை, மத நிறுவனங்களை, மக்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளைப் புண்படுத்துகிறது என்ற காரணத்துக்காக தடைவிதிக்கப்பட்ட நூல்கள் பற்றிய குறிப்புகள் வரலாறு நெடுகிலும் பதிவாகியுள்ளது. ஆனால், இலக்கியம் ஒருவரைப் பண்படுத்துமா என கேட்டால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றுதான் சொல்வேன். ஏட்டுக் கல்வி அற்ற எளிய மனிதர்கள் பலர் மிகுந்த நீதியுணர்வோடும், அறம் குறித்த தன்நிச்சயத்தோடும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். இரண்டு மூன்று மொழிகள் கற்ற பண்டிதர்கள் சிலர் மனிதநேயம்கூட இல்லாமல் வெறுப்பைக் கொட்டி எழுதிவருவதையும் பார்த்ததுண்டு. இயல்பிலேயே கண்ணியமும் மனச்சான்றும் அமையப் பெற்றவர்களை வேண்டுமானால் மேலும் பண்படுத்துவதாக இலக்கியம் அமையுமே தவிர அத்தன்மைகளைக் கொண்டிராதவர்களை இலக்கியம் உணர்வுபூர்வமாகத் தீண்டுவதில்லை என்றுதான் எனக்குப் படுகிறது.

- க.மோகனரங்கன்

(‘தி இந்து’ ஜூன் 2018)
[20/07, 7:03 am] TNPTF MANI: கடிகாரம் சரியாக இயங்கவில்லை
சரி பண்ணித் தரவும்

இயங்கவில்லையா எப்படித் தெரியும்

ரயிலை அடிக்கடி தவற விடுகிறேன்
ஆறிப்போன உணவை உண்ண அமருகிறேன்
திரைப்படம் துவங்கியபின் நுழைகிறேன்
முடியும்போது செய்திகளைத் திருப்புகிறேன்
திரும்ப வரும்போதுதான் தபாலை வாங்குகிறேன்
நான் போகுமுன் தாலி கட்டி விடுகிறார்கள்
அப்போதுதான் மூடிய கடைமுன் பையுடன்
நிற்கிறேன்

நான் கடிகாரங்களை சரி செய்து தருபவன்
நீங்கள் வேகமாக நகருங்கள்.

# பூமா ஈஸ்வரமூர்த்தி
[20/07, 7:09 am] TNPTF MANI: ஒரு சுற்றறிக்கை
கடைசிக் கையெழுத்தைத்
தேடுகிறது.
-ஞானக்கூத்தன்
[20/07, 8:24 am] TNPTF MANI: விலகி பாருங்கள் பாரமாக இருந்திருந்தால் தேடி வரமாட்டார்கள்..

-படித்தது

No comments:

Post a Comment