கற்றதும் பெற்றதும்-41
*மணி
சிந்திப்பவன் மனிதன்,
சிந்திக்க மறுப்பவன்
மதவாதி,
சிந்திக்காதவான்
மிருகம்,
சிந்திக்க பயப்படுகிறவன்
கோழை.
-தந்தை பெரியார்
#ஆதிக்க சாதிகளுக்கு மட்டும் அவர் பெரியாரா?
-ப.திருமாவேலன்
பெரியார் குறித்த எத்தனையோ புத்தகங்கள் வந்துள்ளன.
வே.ஆனைமுத்து,கருணானந்தம், பெரியார் திரட்டு, பெரியார் குடியரசில் எழுதிய கட்டுரை தொகுப்பு என பல புத்தகங்கள் உள்ளன.ஆனால் திருமாவேலன் எழுதிய இப்புத்தகம் அனைத்திலும் மாறுபட்டு ஆய்வு நோக்கில் பெரியார் குறித்த கருத்தாழமிக்க தகவல்கள் பொதிந்த கட்டுரை தொகுப்பாய் வந்துள்ளது.16 தலைப்புகளில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்
# அயோத்திதாசர் மீது பொறாமை பட்டு தான் புத்த மதத்தில் பெரியார் சேரவில்லை என்று பொய் பிரச்சாரமும்.. புத்த மதத்தில் சேர சொன்ன டாக்டர் அம்பேத்கரிடம் மறுத்த பெரியார் "இங்கே இருந்தால் தான் வெளிப்படையாக விமர்சிக்க முடியும் என்று எதார்த்தமான பதிலைச் சொன்னதும் புத்தகத்தில் உள்ளது.
*தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏமாற்றம் அளித்தாரா?
*தீண்டாமையை பிராமணர்களால்தான் புகுத்தப்பட்டது என்பதை இன்னும் எவ்வளவு காலம் தாழ்த்தப்பட்டோர் நம்பிக்கொண்டிருப்பார்கள்?
*வைக்கம் போராட்டம் போன்று தமிழகத்தில் பெரியார் ஏன் நடத்தவில்லை?
*பெரியார் ஏன் இறுதிவரை இந்து மதத்தில் தொடர்ந்தார்? உள்ளிட்ட கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து கூறப்படும் 90 குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை தக்க ஆதாரத்துடன் திருமாவேலன் விளக்கியிருக்கிறார்.
# பொதுவாக உண்மை வரலாற்றினை தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்க வேண்டும்.இல்லையெனில் சிறிது காலத்தில் திரிக்கப்பட்டுவிடும். அதற்கு தக்க விபரங்களை கூறி சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டிய கடமையை இப்புத்தகம் முன்னெடுத்துள்ளது.
#தீண்டாமை
பிராமண,ஷத்திரிய,வைசிய,சூத்திர என பிரித்துள்ளனர்.அதில் சூத்திரருள் பஞ்சமர் என குறிப்பிட்ட சாதியினரை தாழ்வாக நடத்துக்கிறோம்.அதாவது சூத்திரன் வகையினிலேயே உள்ளே தாழ்த்தப்பட்டவராக பஞ்சமரை கருதுகிறோம்."ஒருவர் தனக்கு கீழ் இருப்பவரை தீண்டத்தகாதவர் எனக் காண்பது போல் தான்,மேல் உள்ளவருக்கு தான் தீண்டத்தகாதவராகவும் இருக்கிறார்.இந்த இழிவையும் கொடுமையையும் நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இது போன்ற தீண்டாமை வியாதி ஒவ்வொரிடத்திலும் பரவுகிறது.இது போல் தீண்டாமை கொடுமைகளை,காரணத்தை பல்வேறு தரப்பினருக்கு புரியும் வகையில் 1937 ஆம்பூர் ஆதிதிராவிடர் மாநாட்டில் பெரியார் பேசியது விவரிக்கப்பட்டுள்ளது.
#1929க்கு பிறகு தீண்டாமைக்கு எதிராக தீர்மானங்கள் இல்லை எனும் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் 32 பதிவுகளை கட்டுரையாசிரியர் தொகுத்திருக்கிறார்.
#அயோத்திதாசரின் புகழை மறைக்கவில்லை.அயோத்திதாசர் புத்தரை வழிகாட்டியாக துணை கொண்டார்.இவ்விடயத்தில் பெரியார் உடன்படவில்லை.ஆனால் அவர் முன்னோடியாய் திகழ்ந்ததை பெரியார் பல இடத்தில் கூறியிருக்கிறார்.
#அயோத்திதாசர்,ஜி.அப்பாதுரை, எம்.சி.ராஜா,இரட்டைமலை சீனிவாசன்,சகஜானந்தர் போன்றோர்களை இருட்டடிப்பு செய்யவில்லை..பெரியார் பாராட்டியதை பல்வேறு ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
#வைக்கம் போராட்டத்துக்கு விரிவான விளக்கத்துடனும்,தமிழகத்தில் ஆலய நுழைவு போராட்டத்தினையும்,1971ம் ஆண்டு கர்ப்பகிரகத்துக்குள் நுழைவேன் என பெரியார் நாள் குறித்த நிலையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டதை நினைவு கூர்கிறார்.
#மனதை கவர்ந்த வரிகள்:
@என் அபிப்ராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமையுண்டு;ஆனால் என் அபிப்ராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு
@ எதிரியை அடக்கணும், அவனை ஒழிக்கணும் என்றால் நாம் அவனை வெறுக்கணும். கூண்டோடு நம்மை அவன் ஒழித்தாலும் சரி என்று துணிந்து இறங்கினால் தானே அவன் பயப்படுவான்
@ இந்த தேசத்தில் தீண்டாமை எனும் கொடுமையை விளைவதற்கு பிராமணர்- பிராமணர் அல்லாத சாதி இந்துக்கள் அனைவருமே காரணமாவர்
#கற்றது
பொதுவாக பெரியாரின் புகழ் பாடும் நூலாகவோ, அக்காலத்திய நிகழ்வுகளை புனைவுகளோடு சொல்லும் வரலாற்று நூலோ அல்ல.பெரியாரின் மீது எழுப்பபட்ட கேள்விகளுக்கு,
சர்ச்சைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக பல்வேறு தகவல்களை திரட்டி அவற்றுள் சிறந்ததை இப்புத்தகம் கொடுக்கிறது.ஒவ்வொரு பக்கத்தினையும் நுணுகி ஆய்ந்து படிக்கும்படியும் இத்தொகுப்பு இருக்கிறது.அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.பொதுவாக ஒவ்வொரு பெரியார் பிறந்த நாளிலும் மு.வ வின் இவ்வரியை பதிவிடுவேன்
ஜாதியை ஒழிக்க முடியாது.,
புறக்கணிக்க கற்றுக் கொள்
-மு.வ
-தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment