மழை பெய்துகொண்டிருக்கும்போது
மழையைப்பற்றி
எதுவும் தெரியாது எனக்கு
மழையைப்புரிந்துகொள்ள வேண்டும் என்றால்
மழை விடவேண்டும் சீக்கிரமே
அன்பே
என்னை நீ அறிந்துகொள்ள
நான் உனக்கு இல்லாமல்
போக வேண்டுமா?
இல்லாமலிருப்பது என்றால்
எவ்வளவு நேரம்
எவ்வளவு தூரம்?
மழையை நேசிக்காதவர்களே இல்லை
மழை எப்போதுவிடும் என்று
நினைக்காதவர்களே இல்லை
மனுஷ்ய புத்திரன்
# நான் இப்போது
ஒரு கஸல் பாடிக் கொண்டிருக்கிறேன்.
குரல் ஹரிஹரனுடையது.
வரிகள் அப்துல் ரஹ்மானுடையது.
கண்ணீர்மட்டும் என்னுடையது.
**கல்யாண்ஜி**
# பென்சில் சீவுவது என்றால் எனக்கு
ரொம்பப் பிடிக்கும்.
அதைக் கையில் எடுக்கும் போது நானும்
அதைப் போல்
எடையற்றவன் ஆகிவிடுகிறேன்.
ஒரு சிறுதாளில்
அவ்வளவு பேச்சு பேசும் முன்னால்
எவ்வளவு மெளனமாய் இருக்கிறது
இந்தப் பென்சில் -
- தேவதச்சன்
No comments:
Post a Comment