கற்றதும் பெற்றதும்-44
*மணி
#கண்டவை,கேட்டவை,அறிந்தவை ஆகிய அனைத்தையும் பகுத்தறிவுப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்
-பொலிபியஸ்
#விடுபூக்கள்
-தொ.பரமசிவன்
தொ.ப வின் இக்கட்டுரை தொகுப்பிலிருந்து நான் ரசித்த பதிவுகள்
நீராடுதல் குறித்து சொல்லும்போது "குளித்தல்" என்ற சொல்லையே நீராடுவதை குறிக்க இன்று பயன்படுத்தி வருகின்றனர். இது பொருட்பிழையான சொல்லாக்கம். குளித்தல் என்ற சொல்லுக்கு தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பதல்ல பொருள்; சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலை குளிர வைத்தல் என்பதே அதன் பொருளாகும்.குளிர்த்தல் என்ற சொல்லை நாம் குளித்தல் என தவறாக பயன்படுத்தி வருகிறோம்."குள்ளக்குளிர குடைந்து நீராடி" என்றார் ஆண்டாள். அச்சிடப்பட்ட தமிழ் இலக்கியம் முழுவதும் இதை நாம் தவறாக பயன்படுத்தி வந்துள்ளோம்.கிருமி கொல்லி மஞ்சளும் வேப்பிலையும் ஆகும்.இது பூப்பு நீராட்டு விழாவினை மஞ்சள் நீராட்டு என வழக்கில் குறிப்பிடுகிறோம்.
#தரைக்கு கீழ் விளையும் கிழங்குவகைகளான வள்ளி, வெங்காயம்,பூண்டு போன்றவற்றை பார்ப்பனர் உண்பதில்லை.பெருந்தெய்வ கோயில்களில் அவை அனுமதிப்பதில்லை.அவை பிறப்பினால் கீழ்ப்பட்டவை எனும் குறியீடும் உண்டு.
# பூக் களால் கட்டப்பட்ட மாலைகளில் பல்வேறு வகையான வேறுபாடுகள் உணரமுடியும். நெருக்கமாக கட்டப்பட்ட பூமாலைகள் 'பிணையல்' என்று பெயர். சற்று இடைவெளி கட்டவிடப்பட்டால் கண்ணி என்றும், கண்ணியை விட சற்று நெருக்கமாக கட்டப்பட்டது சரம் என்றும்,தொடுக்கப்பட்ட பூச்சரத்திற்கு தொடையல் என்றும், மனைகளிலும் மண்டபங்களிலும் தொங்கவிடுவது தொங்கல் என்றும் கூறப்படுகிறது.
இவையன்றி மணமாலை-மணத்தின் போது மாலை மாற்றுதல்,
பிணமாலை,நீர்மாலை-இறப்பின்போது பிள்ளைகள் நீர்ச்சடங்கின் போது..இடப்படும்.
#தம்பி உடையான்
தனக்குப் பின் பிறந்தவனை தம்பி என குறிப்பிடுவது வழக்கம். நல்லதம்பி,சின்னத்தம்பி,ஈழத்தில் சிவத்தம்பி,நன்னித்தம்பி என. ஆனால் தமிழகத்தில் கீழக்கரை இசுலாமியரிடம் செய்குத்தம்பி, சக்குத்தம்பி, பெயர் காணப்படுகிறது.வள்ளல் சீதக்காதி தந்தை பெயர் பெரியதம்பி மரைக்காயர்.இவர்கள் சேதுபதி மன்னர்களின் தம்பி என்ற வகையில் அழைக்கப்படுகிறார்கள்
சேதுபதி அரசமரபை நிலைநிறுத்த இஸ்லாமியர் உதவினர். இதற்கு கைமாறாக கீழைக்கரை சங்கு,
சிப்பி சேகரிக்க கச்சத்தீவு போன்ற பகுதிகளில் உரிமை பெற்றுக்கொண்டனர்.அதோடு தம்பி என்ற பெயரினையும். ஒன்றுவிட்ட தம்பி (அதாவது மூத்தோர் சொத்தில் பங்குரிமை இல்லாத) எனும் உறவு பொருளாகும்.
#பண்பாட்டின் வாழ்வியல்
*உலகத்தலைமையினைக் கொண்டாடும் இந்தப்பெயர் வழக்கில் பெண் பெயராக இருப்பது உலகநாயகி,ஆண்பெயர் உலகநாயகன் என இல்லை.உலகநாதன் என்றே காணப்படுகிறது.
#ராசராசனை இன்னும் கொண்டாடுவதேன்
தஞ்சைக் கோயிலின் சிறப்பை கூறிய தொ.ப.. ராசராசன் தில்லையிலே அவன் காலத்திலேயும் நிலைபெற்றிருந்த பார்ப்பன மேலாதிகத்துக்கு எதிராகவே இக்கோவிலைக் கட்டியிருக்கிறான்.
தேவார திருப்பதியங்களைப் பாட 48பேரை நியமித்தார்.
#கற்றதும் பெற்றதும்
"எழுத்தாளர்களுள் நல்ல வரலாற்றாளர்கள் கிடைப்பது அரிது,அதிசயம் என்பார் ராபின்சன்.இவ்வரிகளுக்கு முழுதும் பொருந்துவது தொ.ப வுக்கு மட்டுமே.
தொ.ப வின் புத்தகங்கள் அனைத்துமே பண்பாட்டு விழுமியங்களையும்,அதிகம் அறியாத தகவல்களை தாங்கி நிற்பவை.ஆய்வு நோக்கில் ஒருவிபரத்தை கூறி அதன் பிண்ணனியில் சங்க நூல்களை மேற்கொள் காட்டி இருப்பார். ஒருவரலாறு எழுதுவதற்கு கல்வெட்டுச்சான்று மட்டும் போதாது,இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென பேராசிரியர் கே.கே.பிள்ளை கூறுவார்.எந்த வித பண்பாட்டு ஆதாரத்தையும் நுணுக்கமான ஆராய்ச்சிக்கு உட்பட்டே தொ.ப பதிவு செய்துள்ளார். சமூக பண்பாடு வளர்ச்சி அடைவதற்கு தன்னைத்தான் அறிந்துகொள்ளும் ஆற்றலும்,தன்னை வெளிப்படுத்துகின்ற ஆற்றலும் இருக்குமாயின் அச்சமூகம் வளர்ச்சி அடையும்.இத்தகவல்களை அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கவும், பரப்பவும் வேண்டும்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment