[13/07, 7:17 am] TNPTF MANI: சுந்தரராமசாமியின் இரண்டு முகங்கள் சிறுகதையில்..
*மணி
"ஒரு சித்தாள் பெண்ணின் வாழ்க்கை சித்தரிக்கப்படுகிறது.இரும்புச்சட்டியை தலையில் ஒரு கையையும்,மறுகை ஏணியை பற்றியபடி ஏறுகிறாள்.உடலை தூக்கிக்கொண்டு நடக்க முடியாமல் திட்டு வாங்குகிறாள்.
சிறிது நாளாக அவளை காணவில்லை.விசாரித்ததில் அந்தப்பெண் பிரசவத்தில் இறந்துபோய்விட்டாள்.அவளுக்கு பிறந்த பிள்ளையை காப்பாற்ற அவள் தங்கை அதே வேலைக்கு வருகிறாள்.மாறிக்கொண்டிருக்கும் உலகத்தில் மாறாத துயரத்தோடும்,சுமையோடும் வாழ்கிற மக்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள் என முடிகிறது.
ஒரு காட்சியில் "ஏணி என்பது பொருள்மட்டும் தானா?வாழ்க்கையில் சித்தாள் பெண்களின் வாழ்க்கை தரையிலேயே தொடங்கி தரையிலேயே முடிந்துபோகிறது.ஏணி அவளை எங்கேயும் கொண்டுசெல்லவில்லை.ஏணி ஓர் எட்டாக்கனியாகவே போய்விடுகிறது.
#ஒரு சிறுகதையின் மையம் என்பது இதுதான்.ஒரு காட்சியில் கதையின் ஆழமான ஒரு புள்ளியைத் தொடுவது.இன்று அதிகாலையில் படித்த இக்கதை நாள் முழுவதும் நெருடியதால் இப்பகிர்வு.
தோழமையுடன் மணிகண்டபிரபு
[13/07, 7:39 am] TNPTF MANI: நீச்சல் தெரிந்தும்
கிணற்றில் விழுந்தவவன்
உயிரிழப்பு
தண்ணீர் இல்லாததால்
-படித்தது
[13/07, 4:21 pm] TNPTF MANI: ஸ்டிக்கர்
எண்ணியிராமல்
இரண்டு உயிர்கள்
ஒட்டிக்கொள்வதன்
எதிர்பாராமை உண்டு
எந்தக் காதலிலும்
கிழிந்து மட்டுமே
வேறுபட முடியும் என்பதன்
பரிதாபமும்.
-வீரான்குட்டி
[13/07, 4:25 pm] TNPTF MANI: 'உன் கண்களைப் போலவே
இந்த அறையின் சுவர்களும்
தானாக வண்ணம் மாறுகின்றன'
-மனுஷ்யபுத்திரன்
[14/07, 7:26 am] TNPTF MANI: என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவதுபோல
கடையா? வீடா? கூடமா? கோயிலா?
என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்
அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்
என்ன மாதிரி உலகம் பார் இது.
-ஞானக்கூத்தன்
[14/07, 7:33 am] TNPTF MANI: நம் நேரம் "தானாகவே"
செலவாகக் கூடாது
நாம்தான் செலவிட வேண்டும்
-ஜெயமோகன்
[14/07, 8:38 pm] TNPTF MANI: நீர் கொடுப்பதோ பூமி
பேர் எடுப்பதோ வானம்
(மழை)
-காசி ஆனந்தன்
No comments:
Post a Comment