Thursday, 27 September 2018

மணிகண்டபிரபு

[25/07, 7:01 am] TNPTF MANI: செத்த மீன்

— கு.அழகர்சாமி

ஒரு மீன் வரைந்து ’கலர் அடி’ என்பார்
டீச்சர்.

குழந்தை
கலரடிக்கும் கட்டத்துக்கு வெளியே.

‘கட்டத்துக்குள் அடி’ என்பார்
டீச்சர்.

குழந்தை
மறுபடியும் கலரடிக்கும் கட்டத்துக்கு வெளியே
மீன் நகர்ந்திருக்கும் நீந்தியென்று.

கத்துவார் டீச்சர் இம்முறை
’கட்டத்துக்குள் அடி’  என்று.

பரிதாபமாய் டீச்சரைப் பார்த்துக் கொண்டே
கட்டத்துக்குள் கலரடிக்கும் குழந்தை
செத்த மீனின் மேல்.
[25/07, 7:03 am] TNPTF MANI: மூட நெஞ்சே
தலையிலிடி விழுந்தால் சஞ்சலப்படாதே
ஏது நிகழினும் நமக்கேன் என்றிரு
கவலைப்படுதலே கருநரகம்
கவலையற்றிருத்தலே முக்தி ”
நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்

-பாரதியார்
[25/07, 7:07 am] TNPTF MANI: எங்கு போனாலும்
எனக்கு ஓர் இடம் கிடைக்கிறது
எங்கு போனாலும்
என் இடம் பறிபோகிறது.
-பேயோன்
[25/07, 9:13 am] TNPTF MANI: வெறுத்தபின் அதற்கான நியாயங்களை சிந்தித்து சிந்தித்து உருவாக்கிக் கொள்கிறோம்
-ஜெயமோகன்
[25/07, 1:03 pm] TNPTF MANI: புல் முளைத்தபோதல்ல
சொல் முளைத்தபோதே
பூமி உயிர் பெற்றது

-அப்துல்ரகுமான்
[25/07, 1:08 pm] TNPTF MANI: குளிர் காய்வதற்காய்
சுள்ளி பொறுக்கச் சென்றாய்,
சுள்ளி பொறுக்குவதிலேயே உன் காலம் கழிந்துவிட்டதே,
எப்போது நீ குளிர் காயப் போகிறாய்?

-அப்துல்ரகுமான்
[26/07, 8:08 am] TNPTF MANI: பொறாமைப்படுபவனின்
மௌனமே
மிகவும்
சப்தமானது...

-கலீல் ஜிப்ரான்
[26/07, 7:20 pm] TNPTF MANI: பையன் கேட்டான் அப்பாவிடம். ''அப்பா, நீயும் அம்மாவும் ஹனிமூன் போனப்ப நான் உன்கூட வந்தேனா, அம்மாகூட வந்தேனா?''

                அப்பா சொன்னார். ''போகும்போது என் கூட வந்தே, வரும்போது அம்மாகூட வந்தே.''

-சுஜாதா
[27/07, 7:29 am] TNPTF MANI: என்னை வழிநடத்திய திருக்குறள்: ‘அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும், உள்ளழிக்க லாகா அரண்‘:
-முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்"
[27/07, 12:59 pm] TNPTF MANI: புரிதல் இல்லாதபோது வார்த்தைகள்
அர்த்தமற்றதாகி விடுகிறது.!!
[27/07, 1:06 pm] TNPTF MANI: கோபம் வந்தால் கொட்டி விடுங்கள்.. அடக்கி வைக்காதீர்கள்.. அந்த கோபம் சாதாரண தவறு செய்தவரிடம் வெடித்துவிடும்..!!""

-படித்தது
[27/07, 2:06 pm] TNPTF MANI: எந்த சண்டையிலும் கடைசி வார்த்தை யாருடையதோ, அவரே அதிகம் குற்றவுணர்வு சுமக்க வேண்டியதாகிறது”

-யமுனை
[27/07, 5:20 pm] மினிமீன்ச்: நான் என்னையே தேடிச் செல்கிறேன் . இத்தேடலில் தான் என்னுடைய சாராம்சம் உள்ளது. தேடலின் போதுநான் நடந்து செல்லும் பாதை கவிதையினுடையது

-பிரமிள்
[27/07, 5:21 pm] மினிமீன்ச்: வயிற்றுப் பசிதீர்க்க
வராதா என்றேங்கி
மழைக்கு அண்ணாந்த
கண்கள்
கண்டு கொண்டன -

வானம்
எல்லையில்லாதது.

-பிரமிள்.
[28/07, 6:53 am] TNPTF MANI: அடிமையிடம் நீ அடிமை எனச் சொல்
அவன் கிளர்ந்தெழுவான்
-அம்பேத்கர்
[28/07, 7:21 am] TNPTF MANI: பிறை தெரியாத ரம்ஜான்
ஆயுள் அதிகமானது..
ஆடுகளுக்கு
-மு.முருகேஷ்
[28/07, 7:26 am] TNPTF MANI: உற்சாகம் எப்போதும்
விளக்கம் சொல்வதுமில்லை
விளக்கம் கேட்பதுமில்லை..!!..

-கலீல் ஜிப்ரான்
[28/07, 8:02 am] TNPTF MANI: நமக்கு எது வசதி என்பதில்
எது சரி என்பதை மறந்து விடுகிறோம்.

-படித்தது
[28/07, 9:13 am] TNPTF MANI: காலை எழுந்தவுடன்
படிப்பென்றான்
பாரதி..
படிப்பவனுக்கு மட்டும்தான்
காலையே எழுகிறது
-தமிழன்பன்
[28/07, 11:26 am] TNPTF MANI: குற்ற உணர்வு என்பது
ஆரோக்கியமானது...
அது, நியாயவாதிகளுக்கு மட்டுமே தோன்றும் என்பதால்...

-படித்தது
[28/07, 11:29 am] TNPTF MANI: தேநீர் அருந்தியவன்
மழையை ரசிக்கிறான்
மழையில் நனைந்தவன்
தேநீரை ரசிக்கிறான்

-மணி
[28/07, 5:27 pm] TNPTF MANI: பயத்திலிருந்து எது விடுவிக்கிறதோ அதுதான் தெய்வம்
-சரவணன் சந்திரன்
[28/07, 11:13 pm] TNPTF MANI: பகலைக் கடப்பதற்கு ஆசைகள் போதும்.
இரவைக் கடப்பதற்குத்தான் துயரில் ஆழவேண்டும்!
-மகுடேசுவரன்
[29/07, 7:11 am] TNPTF MANI: நீங்கள் மானுட மோதலை எளிமையாக்கி விட்டீர்கள். மானுட போராட்டம் அகிம்சைக்கும் வன்முறைக்கும், வாய்மைக்கும் பொய்மைக்கும், நியாயத்துக்கும், அநியாயத்துக்கும் இடையேயான ஒன்றாக நீங்கள் எளிமைப்படுத்தி விட்டீர்கள். ஆனால், வாழ்க்கையில் ஒரு நியாயமும், இன்னொரு நியாயமும் தானே மோதிக்கொள்கின்றன. ஒரு உண்மையும், இன்னொரு உண்மையும் தானே போரிடுகின்றன."

- காந்தியிடம் மேனாள் குடியரசு தலைவர் கே.ஆர். நாராயணன் எழுப்பிய கேள்வி.
[29/07, 7:16 am] TNPTF MANI: அக்காலத்தில் பாடல்கள் ஏடுகளில் எழுதியிருக்கும்.அதில் சில செல்லறித்தும்,அழிந்தும் போயிருக்கும்.இதனை ஒட்டிக்கொடுப்பதற்கென்றே புலவர்கள் இருந்தார்கள்.
சொந்தமாய் பாடவராது.
ஆனால் ஊகித்து பாடி ஒட்டிக்கொடுப்பதால் அவர்களுக்கு ஒட்டக்கூத்தர்கள் என பெயர்
-அ.முத்துலிங்கம்
[29/07, 7:21 am] TNPTF MANI: எதுவாக என்றாலும்
"இரு" க்க ஆசைப்படு
"ஆக" ஆசைப்படாதே

-ஓஷோ
[29/07, 8:04 am] TNPTF MANI: யானைகள் எவ்வளவு பெரியவை
அவை மிக அதிகமாக உண்கின்றன
அவை நம் வயல்களுக்குள் புகுந்து
சூறையாடுகின்றன
நமக்கு யானைகளைக் கண்டால்
அச்சமாக இருக்கிறது
ஆனால் நாம் யானைகளை வெறுப்பதில்லை.

எலிகள் எவ்வளவு சிறியவை
அவை குறைவாக உண்கின்றன
அவை நம் இருப்பிடங்களுக்குள் புகுந்து
நம் தானியங்களை, பழங்களைக் கொறிக்கின்றன
எலிகளிடம் நமக்கு பயமில்லை
ஆனால் நாம் எலிகளை
மனதார வெறுக்கிறோம்.

யானைகள் வெளிப்படையாக நடந்துகொள்கின்றன
அவற்றால் தம்மை ஒளித்துக்கொள்ள முடியாது
அவை நம்மை நேரடியாகத் தாக்குகின்றன
நம்மால் அவற்றைச் சகிக்க முடியும்.

எலிகள் நம்மை ஏமாற்றுகின்றன
நம்மை முட்டாளாக்குகின்றன
நாம் தூங்குவதற்காகக் காத்திருக்கின்றன
நம்மைப்போலவே அவை
சாதுர்யமாக நடந்துகொள்கின்றன
அது நம்மைப் பாதுகாப்பற்றவர்களாக்குகிறது
நம்மால் எலிகளை சகித்துக் கொள்ள முடியாது.

முக்கியமாக
யானைகளைக் கொல்வதுபோல
அவ்வளவு சுலபமாக
நம்மால் எலிகளைக் கொல்ல முடியாது.

- மனுஷ்ய புத்திரன்
நூறு பெளர்ணமிகளின் வெளிச்சம்/ உயிர்மை
[29/07, 8:21 am] TNPTF MANI: சுயநலம் நமக்கு இருந்தால் பிடிக்கிறது,அடுத்தவருக்கு இருந்தால் பிடிப்பதில்லை

No comments:

Post a Comment