[20/07, 8:33 pm] TNPTF MANI: பயணங்கள் முடிவதில்லை
என்பது போய்
பயணங்களில் முடிவதில்லை
என்றாகிவிட்டது உடல்நிலை!
-சஞ்சீவிபாரதி
[20/07, 9:19 pm] TNPTF MANI: நடு இரவில்
ஆள் அரவமில்லா தெருவில்
வீதியோரம் சுருண்டு
படுத்து விழித்தே
இரவைக் கடக்கும்
அவனின் அரிசியில் மட்டும்
கடவுள் இன்று பெயர்எழுத
மறந்து போனார்..
-படித்தது
[20/07, 9:32 pm] TNPTF MANI: "கடந்து போகும்
ஜோடிக் கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிக் களைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே!"
-படித்தது
[21/07, 6:57 am] TNPTF MANI: இனி ஒன்றுமில்லை என அழுது தீர்க்கும் பொழுது
கடைசி நொடியில் பிறக்கும் துணிவுதான் மீண்டும் வாழ்வை
வாழச் சொல்கிறது.!
-படித்தது
[21/07, 7:12 am] TNPTF MANI: வழுக்கைத் தலைகளைப் பார்க்கும்போதெல்லாம்
நாளைய நானாகத் தெரிகிறார்கள் அவர்கள்!
ஒருவேளை அவர்களுக்கு
நேற்றைய அவர்களாகத் தெரியலாம் நான்!
-மகிழ்நன்
[21/07, 9:45 am] TNPTF MANI: கனவில் இறந்தேன்
விழிக்கவே மனமில்லை
விடிந்த பிறகும்
-கோ.வசந்தகுமாரன்
[22/07, 7:04 am] TNPTF MANI: ஓடுகிற கோழையை பார்த்தால் விரட்டுகிற கோழை வெறியனாக மாறுவான்
-ஜெயகாந்தன்
[22/07, 10:56 am] TNPTF MANI: #வரிசை
மோதி மோதி
முடிந்தவரை முன்னே
நகர்த்துகிறோம்
வரிசையை
எல்லோரையும்
உற்றுப்பார்த்து
முன் நிற்போரை
பின்பற்றி நகர்கிறோம்
எறும்பை போல
புதிய வரிசை
உருவாகாமல் முடிந்தவரை
கற்போடு காப்பாற்ற
வேண்டியுள்ளது
வரிசையை
கால் மாற்றியும்
கை கட்டியும்
சுவரையே பார்த்து
யார் நின்றாலும்
கடைசியில் நிற்பவரே
கட்டுக்குழையாமல்
பாதுகாக்கிறார் வரிசையை
ஒரு வாக்குறுதியை
காப்பது போல்
இறுதிவரை
அடைகாக்க வேண்டியுள்ளது
வரிசையை
-மணிகண்டபிரபு
[22/07, 12:01 pm] TNPTF MANI: கோவை மக்களின் குடிநீரை விழுங்கும் சூயஸ்
-சி.பத்மநாபன்
கட்டுரை சுருக்கமாக
*கோவை மாநகராட்சி நிர்வாகம் சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோக உரிமை வழங்கியுள்ளது.
#10ஆண்டு கால பட்ஜெட்
*26 ஆண்டுகளுக்கு குடிநீர் வினியோக உரிமை கொடுத்ததற்கு ரூ3150 கோடி செலவாகும்.இது மாநகராட்சியின் 10ஆண்டுகால பட்ஜெட்
*மாநகரம் முழுவதும் ஒன்றரை லட்சம் இணைப்புகளும் மீட்டர்களும் மாற்றப்போகிறார்கள்
*இதற்கு ஆகும் செலவை வீட்டு உரிமையாளர்கள் தான் கட்ட வேண்டும்.இதனால் வாடகைக்கு குடியிருப்போர் நிலை மோசமாகும்
*அனைத்துப்பொருட்களும் வேனில் வரும்.இணைப்பை கொடுப்பார்கள்.அவர்கள் நிர்ணயிப்பதே கட்டணம்.
*குழாய் பழுது ஏற்பட்டால் சூயஸ் நிறுவனமே பழுது பார்க்கும்.
#சூயஸ் நிறுவனம்
*1822ம் ஆண்டு முதல்.உலகம் முழுக்க 15கோடி வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்கிறது
*150 ஆண்டுக்கு மேலான நிறுவனம், 11கோடி வாடிக்கையாளர்,உலகில் 7000நகரங்களுக்கு நீர் விநியோகம் செய்கிறது
*சூயஸ் நிறுவன பங்களிப்போடு தனியார் மயமாக்கப்பட்ட தண்ணீர் விநியோகம் பாரீஸ் உட்பட பல நகரங்களில் இருந்து அகற்றி மீண்டும் மாநகராட்சியே பராமரிக்கிறது.குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டதே காரணம்
*உருகுவேயில் பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்தி 65% மக்கள் பரிந்துரைப்படி இயற்கை வளங்களை பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
*தென் ஆப்பிரிக்காவில் குடிநீர் கட்டணம் செலுத்தாததால் 2003-04 ம் ஆண்டில் ஒரு கோடி மக்களின் குடிநீர் இணைப்பை துண்டித்தது
இந்த திட்டத்திற்கு எதிராக அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது
[22/07, 7:19 pm] TNPTF MANI: தோற்றம்
வாழ்க்கை சிக்கலானது
அல்லது சிக்கலானது போல் தோன்றுவது,
சுலபமானது
அல்லது சுலபமானது போல் தோன்றுவது
#கல்யாண்ஜி
[23/07, 6:49 am] TNPTF MANI: கிழிசல்கள்
ஆரியப்பட்டா வானத்தை கிழித்தது
அணுகுண்டு பூமியைக் கிழித்தது
அரைக்கைச் சட்டைகள்
கிழிந்தது மட்டுமே
மனதில் நிற்கிறது
பிள்ளை வேண்டாமென்று
கருப்பையைக் கிழித்தார்கள்
உணவும் எதற்கென்று இனி
இரைப்பையையும் கிழிப்பார்கள்
எல்லாம் கிழிந்த
எங்கள் தேசத்தில்
வாய் கிழிவது மட்டும்
வகை வகையாயிருக்கும்
-கந்தர்வன்
[23/07, 6:50 am] TNPTF MANI: வாழ்க்கை என்பது பல்மருத்துவர் முன்பு அமர்ந்து இருப்பதுபோன்றது.
மோசமானது இனி தான் வரப்போகிறது என எண்ணியிருப்பாய்.ஆனால்அது முன்பேமுடிந்திருக்கும்
-பிஸ்மார்க்
[23/07, 7:01 am] TNPTF MANI: இளையராஜா
-படித்ததில் பிடித்தது
1.ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத்
தேவைப்பட்டதில்லை. தென்றல் வந்து தீண்டும்போது... என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான்.
2. இளையராஜா வெறும் அரைநாளில் மொத்த ரீரிகார்டிங்கையும் செய்துமுடித்த படம் ''நூறுவாது நாள்"
3. சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டது
4. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.
5. அமிர்தவர்ஷினி என்ற மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகத்தை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் "தூங்காத விழிகள்
ரெண்டு" பாடலை அமைத்து மழையையும் வரவழைத்தவர் இசைஞானி
6. பாடலின் மெட்டும் அதற்கான 100% orchestration ஐயும் ஒருவரே செய்யும்போது கிடைக்கும் அத்தனை முழுமை! அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு, அதுவும் மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக்
காட்டுகிறது
7. இசைஞானி தான் முதல்மிறையாக ரீதிகௌளை என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார் ."கவிக்குயில்" என்னும் படத்தில் "சின்ன
கண்ணன் அழைக்கிறான்" என்ற பாடல்தான் அது.
8. Counterpoint என்ற யுக்தியை சர்வதேச இசையின் நுட்பங்களை இசைஞானி சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற "என் கண்மணி" என்ற பாடலில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.
9. இந்தியத் திரை இசையில் காயத்ரி என்ற படத்தில்தான் முதன் முதலாக இசைஞானி "எலெக்ட்ரிக் பியானோ" உபயோகபடுத்தினார்.
10. இசைஞானி செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.
11. உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத விஷயம்., ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து,
பாடல் வரிகள் எழுதப்பட்டு, படமாக்கப்பட்டு, அந்த சவுண்ட் ட்ராக்கை அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி வியப்பின் உச்சிக்கு நம்மை அழைத்து சென்றவர் இசைஞானி ( ஹேராம் )
12. முன்பெல்லாம் பின்னணி இசைச்சேர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டு காண்பித்ததும் இயக்குனரோ மற்றவர்களோ இசையமைப்பாளரிடம் வந்து அமர்ந்து அந்த படத்தில் வந்ததுபோல போடுங்கள், இந்த படத்தில் வந்தது போல போடுங்கள் என்றெல்லாம் சொல்லிப் பின் இசைச்சேர்ப்பு முடிந்து, அது சரியில்லாமல் மறுபடி இசையமைப்பாளரே வேறு மாதிரி இசை சேர்ப்பார். ஆனால் இளையராஜாவிடம் அப்படி இல்லை. ஒரு ரீல்
திரையில் பார்த்தால் போதும் உடனே இசைக்குறிப்புகளை எழுத ஆரம்பித்து விடுவார். அதை வாசித்தாலே போதும். இப்படி வேண்டாம்,
வேறுமாதிரி போடுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பே இருக்காது.
13. இந்தியாவில் அல்ல ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி இசை அமைத்தவர் இசைஞானி, சிம்போனி கம்போஸ் பண்ண குறைஞ்சது
ஆறு மாசமாவது ஆகும். வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை மிரள செய்தவர் இசைஞானி.
14. விசிலில் டியூன் அமைத்து அதை ஒலினாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை வைத்து பாடிய பாடல் "காதலின் தீபம் ஒன்று".
15. படத்தின் கதையை கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம், "கரகாட்டக்காரன்".
16. வசனமே இல்லாத காட்சியில் கூட, அந்த காட்சியை இசையால், மௌனத்தால் செழுமைபடுத்தி பார்வையாளர்களுக்கு கொண்டு போய்
சேர்க்க முடியும் என்பது ராஜாவிற்கு நன்றாக தெரியும். அதில் ராஜா கிரேட். இரண்டு பேர் மௌனமாக இருக்கும் காட்சியாக இருந்தால் கூட, அவர்களின் மன உணர்வுகளை கூட புரியாதவர்களுக்கும் புரிய வைத்துவிடுவார் ராஜா. அந்த அற்புதமான ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு. இந்திய சினிமாவில் பின்னணி இசையில் நம்பர் ஒன் ஜீனியஸ் இளையராஜா.
17. ராஜா சார் ரீ-ரெக்கார்டிங் பண்றதுக்கு முன்னாடி ஒரு முறைக்கு இரண்டு முறை படத்தை பார்ப்பார், மூன்றாவது முறை படம் திரையில் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பிச்சிடுவார், அவர் ஆரம்பிச்சு முடிக்கும்போது படம் கரெக்டா முடியும். அந்த அளவுக்கு எந்த இசையமைபாளராலும் நோட்ஸ் எழுத முடியாது.
18. இந்தியாவிலேயே பின்னணி இசை கேசட்டாக வந்து ஹிட்டான ஒரே படம் ‘பிள்ளை நிலா’
19. பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர் இசைஞானி
20. இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான விருதை வாங்கியவர் இசைஞானி ( பழசிராஜா )
[23/07, 7:05 am] TNPTF MANI: உண்மை என்பது வேறொன்றும் இல்லை.நம்பும்படியான ஆதாரங்களோடு சொல்லப்படும் பொய்தான்
-தாகூர்
[23/07, 6:01 pm] TNPTF MANI: காட்சியளிப்பது மட்டுமே தன் கடமையென
உணர்ந்தார், துயர்குழப்பமிக்க
இவ்வுலகில் தன் கடமை என்னவென்ற
வெகுயோசனைக்குப்
பின்,கடவுள்"
-தேவதேவன்
[23/07, 7:07 pm] TNPTF MANI: யார் யாரோ வந்து
ஆறுதல் போல்
ஏதேதோ சொல்ல
இப்போது என்னிடம்
இன்னும் பெரிதுபடுத்தப்பட்ட துயரமும்
அவர்களிடம்
எனக்கு ஆறுதல் சொன்ன பெருமையும்
எஞ்சி இருந்தது
-படித்தது
[23/07, 7:10 pm] TNPTF MANI: ஒரு சிறுமிக்குப் பாதுகாப்பில்லை என்பதைவிட
17பேர்களில் ஒருவனுக்குக்கூட மனச்சான்று இல்லையே என்பதுதான் தேசிய சோகம்.
-வைரமுத்து
[23/07, 7:54 pm] TNPTF MANI: வேறு வேறாக எதையுமே அடையமுடியாது போல. முதலில் அடைந்ததையே மீண்டும் மீண்டும் அடைகிறோம். அல்லது, இப்போது அடைந்ததன் ஒத்திகைகளையே ஏற்கனவே அடைந்து வந்திருக்கிறோம். அப்படித்தானா..
-வண்ணதாசன்
[24/07, 6:52 am] TNPTF MANI: ஒரு மனிதனைச் சொற்களால் தொடுகிற அனுபவம் உன்னதமானது.சொல் வெளிச்சம் தரக்கூடியது. பேச்சின் நடுவில் இருந்து ஒரு வாக்கியம்,ஒரு சொல் ஒருவரின் மனதில் சென்று சேகரமாகிவிட்டால் போதும்,அது முத்தைப் போல விளைந்து ஒளி வீசத்துவங்கும்.பேச்சின் வலிமை அப்படியானது
-எஸ்.ரா
[24/07, 6:56 am] TNPTF MANI: கண் ஒரு சாதாரண உறுப்பு ஆனால் பார்வையோ
ஒரு மிகப்பெரிய கலை
-கலீல் ஜிப்ரான்
[24/07, 7:01 am] TNPTF MANI: உண்மைதான் மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கிறது. நகைச்சுவைதான் மிகப்பெரிய உண்மையாகவும் இருக்கிறது
-அசோகமித்திரன்
[24/07, 12:57 pm] TNPTF MANI: மறக்க முடியாதது நினைவு
நினைக்க மறந்தது மறதி
[24/07, 6:22 pm] TNPTF MANI: எல்லோர் மனதிலும்
அசைந்து கொண்டிருகுகிறது
துக்கம் விசாரிக்கும் போது
அணிந்து கொள்ள
துயரம் தீட்டப்பட்ட
ஒரு முகமூடி
-கோ.வசந்தகுமாரன்
[24/07, 6:29 pm] TNPTF MANI: எறும்பு
கடிக்காத போது
ஏன் கொன்றாய்?
உன்
வேலியற்ற உடம்பில்
விளையாட்டாய் ஊறினால்
உயிப்பலி கேட்குதா….விரல்?
மீறிக் கடித்தாலும்
சாவு உனக்கிலையெனத் தெரிந்தும்
ஊறும் எறும்பை
நசுக்குவதேன் சகிக்காமல்?
சாகும் எறும்பின்
சத்தமற்ற முடிவு
நசுக்கும் மனத்தைக்
குற்றமில்லை என்கிறதா?
உலகத்தில்
நசுக்க மிகச் சுலபம்
எறும்பு தானென்றாலும்
சுலபமாய் இருப்பதால்
கொலையா செய்வது?
-வைதீஸ்வரன்
[24/07, 6:37 pm] TNPTF MANI: யாரும்
கவனிக்கும் முன்
உதிர்ந்து விழும்
புன்னகைக்கு..
உன் நினைவுகளுண்டு...
-நாடோடி
[24/07, 7:41 pm] TNPTF MANI: அன்பெனப்படுவது யாதெனில் புறக்கணிப்பிற்கெனவே காத்திருப்பது
-இந்திரா
No comments:
Post a Comment