Monday, 8 January 2018

சிற்பி

மனம் ஒரு பாத்திரம்

மனம் ஒரு பாத்திரம்
ஆனால் விசித்திர பாத்திரம்

ஆசைகளை அதில் போட்டால்
அடிப்புறம் கழன்று கொள்ளும்
ஒரு நாளும் நிறையாது

துயரங்களைப் போட்டால்
பாத்திரம் தாங்காமல்
உடைந்து போகும்

காதலைப் போட்டால்
பாத்திரம் சிறகு முளைத்துப்
பறக்கத் தொடங்கும்

பொறாமையைப் போட்டால்
பாத்திரம் ஆத்திரமாகி
மேல் மூடி காணாமல் போகும்

...
அது நிறைவாய் இருக்க...
காலியாய் வைத்திடு

-சிற்பி

No comments:

Post a Comment