மனம் ஒரு பாத்திரம்
மனம் ஒரு பாத்திரம்
ஆனால் விசித்திர பாத்திரம்
ஆசைகளை அதில் போட்டால்
அடிப்புறம் கழன்று கொள்ளும்
ஒரு நாளும் நிறையாது
துயரங்களைப் போட்டால்
பாத்திரம் தாங்காமல்
உடைந்து போகும்
காதலைப் போட்டால்
பாத்திரம் சிறகு முளைத்துப்
பறக்கத் தொடங்கும்
பொறாமையைப் போட்டால்
பாத்திரம் ஆத்திரமாகி
மேல் மூடி காணாமல் போகும்
...
அது நிறைவாய் இருக்க...
காலியாய் வைத்திடு
-சிற்பி
No comments:
Post a Comment