Monday, 8 January 2018

படித்தது

மௌனம்
-------------------
உன் மெளனத்தின் அடுக்குகளிலிருந்த
வார்த்தைகளைப்
பிடித்துக் கொள்கிறேன்
சொற்களின் ஒலிகள்
செவிகளை வந்தடையத்
தேவையில்லை
எல்லா மௌனங்களும்
உன் வார்த்தைகளையே
பேசிக் கொண்டிருக்கின்றன

எனது மக்கள்
----------------------------
இரவு அழகானது
எனது மக்களின் முகங்களைப் போலவே
விண்மீன்கள் அழகானவை
எனது மக்களின் கண்களைப் போலவே
சூரியனும் அழகானதுதான்
எனது மக்களின் ஒளிரும் ஆன்மாவைப் போலவே.

 கனவுகள்
-------------------
கனவுகளை சட்டெனப் பற்றிக் கொள்
கனவுகள் இறந்துவிடலாம்
வாழ்வென்பது பறக்கவியலாத
இறக்கை உடைந்த ஒரு பறவையைப் போன்றது
கனவுகளை சட்டெனப் பற்றிக் கொள்
கனவுகள் தொலைந்துப் போகலாம்
வாழ்வென்பது வரண்டுபோன வயல் அதில்
பனி கெட்டியாக உறைந்து கிடக்கிறது

- லாங்ஸ்டன் ஹியூஸ்-

No comments:

Post a Comment