Monday, 8 January 2018

ஜெமோ

பசி என்பது உண்மையில் ஒரே வித அனுபவம் அல்ல.ருசியான உணவு கிடைக்கும் என்ற உறுதி உள்ள ஒருவனுக்கு பசி என்பது ஒரு இனிய அழைப்பாக இருக்கக்கூடும்.கடுமையாக உழைத்த பிறகு பசி உடலெங்கும் ஊறிப்பரவும் ஓர் இனிய அனுபவம்.

பசித்து வெகுதூரம் நடக்கும்போது பசி தூரத்தை அளக்கும் முழக்கோல்.தனியறையில் பசித்து படுத்திருக்கையில் அது ஒரு ஓயாத சத்தம். காத்திருக்கும் போது நச்சரிப்பு.

ஆனால் பசியின் பயங்கரம் அதற்கான உணவு கிடைக்கும் என்பது எவ்விதத்திலும் நிச்சயமற்ற ஒன்றாக இருக்கும் போதுதான் தெரியவரும்.
அந்தப்பசி அணைக்கப்படாது பெருகி நம் உயிரையே காவு கேட்கும் வாய்ப்பு உள்ளது என்று அறியும்போது ,பசி என்பது பெரும் அச்சம்

-ஜெயமோகன்
(பின் தொடரும் நிழலின் குரல்)

No comments:

Post a Comment