தமிழ் எழுத்தாளன்
மொழி தன் இயல்பான இயக்கத்தின் மூலம் சென்றடைய முடியாத தளங்களுக்கு மொழியை சிறப்பு அழுத்தம் தருவதன் மூலம் கொண்டு செல்ல முயலும் கலையே கவிதை. மொழிக்குள் செயல்படும் இன்னொரு தனி மொழியை கவிதை உருவாக்குகிறது.
- சுந்தர ராமசாமி
‘
சொற்களின் இருப்பு அதன் சகஜமான தளத்தில் இருந்து விடுபட்டு வேறொரு அமைவில் தங்களைப் பொருத்திக் கொள்ளும் போதே கவிதையின் ரகசியக் கதவு திறக்கிறது.
- க.மோகனரங்கன்
‘
கவிதைக்கு வடிவத்தை விட, சொல்லாமல் விட்ட வரிகளைப் பற்றி சிந்திக்க வைப்பது என்பது முக்கியம். மேலும், தேவைப்பட்ட அளவுக்கு மிகச் சிக்கனமாக கோடி காட்டிவிட்டு கவிதானுபவத்தை வாசகனுக்கு விட்டுவிடும் கவிதைகள் சிறப்பானவை. அதில் ஒரு படிமத்தையும் தன்னுடைய ஞாபகங்களையும் ஒத்துப் பார்க்கும் ஆனந்தம் நல்ல கவிதைகளுக்கு நிச்சயம் உண்டு.
- ஞானி
‘
வார்த்தைகளைச் சிக்கனமாகக் கையாள்வதில் உள்ள பொறுப்புணர்ச்சி, அனுபவ உணர்வுகளைச் சார்பின்றிப் பதிவு செய்யும் நேர்மை, வசீகரப்படுத்தும் வியாபாரத் தந்திரங்களின் புறக்கணிப்பு, கவிதைக் கலையைக் கையாளும் செய்நேர்த்தி, வாழ்க்கையின் புகைமூட்டத்தில் அதன் இயல்பான ஒளியைத் தேடும் போக்கு இவையே ஒருவரைக் கவிஞராக்குகின்றன.
- ராஜமார்த்தாண்டன்
‘
கவிதை வேண்டுமானால், சொற்களைக் கூராக்கு. இசையை ஒதுக்கிவிடு. உருவகங்களை உயிராக்கு. சிந்தனைகளை நேராக்கு.
- க.நா.சு
No comments:
Post a Comment