[10/11, 7:40 am] மணிகண்ட பிரபு: உறக்கமா சோகமா
என்று
கணிக்க முடியாத
பள்ளிக்குழந்தைகளின் முகங்களை
ஏந்திச் செல்லும்
பேருந்துகள்
வரத் துவங்கும் முன்பு
நாம் நடையை முடித்துக்கொள்ள வேண்டும்.
-போகன்
[11/11, 7:09 am] மணிகண்ட பிரபு: நம்முடைய கெட்டிக்காரத்தனத்துக்கு இடம் தருகிற எழுத்தாளர்களைத் தான் நாம் விரும்பிப் படிக்கிறோம்
-ஃபிராங் ஓ கானர்
[11/11, 7:55 am] மணிகண்ட பிரபு: நல்லவர்களை அடையாளம் காண்பது..
தூரத்தில் பார்க்கும்போது ஏற்பட்ட உணர்வை விட.. அருகில் சென்று பழகும்போது அதிக பிரமிப்பு ஏற்பட வேண்டும்
-வெ.இறையன்பு
[11/11, 8:02 am] மணிகண்ட பிரபு: அதிகார வெறியில் நிலை தடுமாறும் முன்,
ஒரு பாழடைந்த கோட்டையைப் பார்த்துவிட்டு வாருங்கள்.
-மகுடேசுவரன்
[11/11, 7:32 pm] மணிகண்ட பிரபு: கொச்சையாகவோ 'புரியாத' மாதிரியோ எழுதுவதுதான் புதுக்கவிதையின் இலக்கணம் என்று சில சமயம் நினைப்பு வந்துவிடுகிறது
-சார்வாகன்
[11/11, 7:42 pm] மணிகண்ட பிரபு: அரிவாள் மீதேறி,
ஆடு குடித்து,
சந்நதம் கொண்டு ஆடிய
சாமியாடிக்கு,
கூட்டத்தில் ஒருத்தியாய்
மனைவியை கண்டதும்.....
மலையேறியது சாமி.
-கோ வசந்தகுமாரன்
[11/11, 7:56 pm] மணிகண்ட பிரபு: மீன் என்பது
மீனுக்கு தெரியும் வரை
மணலே கடல்.
- குமரகுருபரன்
[11/11, 8:21 pm] மணிகண்ட பிரபு: அதென்ன சார் மாத்ருபூதம் ன் பேரு..
தாயுமானவர் என்பது சமஸ்கிருதத்தில் 'மாத்ருபூதம்'. திருச்சியில் பிறந்ததால் அந்தப் பெயர் வைத்துவிட்டார்கள்.
-Dr.மாத்ருபூதம்
No comments:
Post a Comment