“ சில படங்களில் உங்களின் நடிப்பு சற்று மிகையாக இருப்பதாகச் சிலர் குற்றம் சுமத்துகிறார்களே…இதற்கு உங்களின் விளக்கம் என்ன ?” என்று நடிகர் திலகத்திடம் கேட்டேன்.
“ வாஸ்தவம்தான், நான் மறுக்கவில்லை! எல்லாம் தெரியாமலா செய்வேன்? ‘மைக்’ இல்லாத காலத்தில் மேடையில் நாம் சத்தம் போட்டு பேசியிருக்கிறோம். அது போல கட்டபொம்மன் காலகட்டத்தில், நான் அப்படி வசனம் பேசி, ஓரளவு மிகையாக நடிக்காவிட்டால், அந்த கட்டபொம்மன் மக்கள் மனதில் பதிந்திருக்க மாட்டான். இன்று வரை அந்த கட்டபொம்மன் வசனத்தை நினைவு வைத்துப் பேசவும் மாட்டான்.
என்ன மாதிரி கேரக்டரை எனக்குக் கொடுக்கிறார்களோ…அதற்கு தக்கபடி நான் நடிக்கிறேன். உதாரணத்துக்கு, ஒரு பென்சிலை என்னிடம் தந்து கையெழுத்துப் போடச் சொன்னால், அதைக் கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி கையெழுத்து போட்டுக் காட்டுவேன். பேனாவைக் கொடுத்தால், அதற்கேற்ற மாதிரி…’பெயிண்ட்’ அடிக்கும் ‘ப்ரஷ்’ஷைக் கொடுத்தால் அதற்கேற்ற மாதிரியும் எழுதுவேன்…இப்படித்தான் எனக்குத் தரப்படும் கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப, இயக்குநரது சொல்படி எனது நடிப்பும் வேறுபடுகிறது.”
“ அவரது அற்புதமான இந்த சுயவிளக்கம் எனக்குத் திருப்தி அளித்தது. ஆனால், அவரது வாழ்வின் இறுதிப்பகுதியில் அவரை வைத்துப் படம் எடுத்தவர்கள், இயக்கியவர்கள் எல்லாம் அவரிடம் ‘பெயிண்ட்’ அடிக்கும் ‘ப்ரஷ்’ஷைக் கொடுத்துவிட்டார்கள். அது எனக்கு மிகுந்த வருத்தம் கொடுத்தது.
சராசரிக்கும் தகுதியற்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் போது, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் உப்புசப்பற்றதாக அமையும் போது, அதை ஈடுகட்ட…அப்படியான காட்சிகளைக் கரையேற்றும் முனைப்பில் அவராகவே மிகையாக நடிக்க வேண்டிய நிர்பந்தத்துக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டார் என்றே கூற வேண்டும்.”
- இயக்குநர் மகேந்திரன் (சினிமாவும் நானும் - புத்தகத்திலிருந்து...)
[05/11, 7:28 pm] மணிகண்ட பிரபு: அழுதுகொள்வது ஒன்றுதான் நமக்கு நாமே தேடிக்கொள்ளும் ஆறுதல்
[05/11, 7:41 pm] மணிகண்ட பிரபு: புராதானங்கள் செப்பனிடப்படும் போது ரகசியங்கள் திறந்து கொள்ளும்.
-நா.முத்துக்குமார்
No comments:
Post a Comment