Wednesday, 20 November 2019

20/11/19

"உனக்குள் நகர்ந்து செல்:ஆனால் பயம் உன்னை நகர்த்திச் செல்கின்ற வழியில் நகர்ந்து செல்லாதே."

*அதாவது பயம் உன்னை நகர்த்திச் செல்லும் வழியில் செல்லாதே.அன்பு உன்னை நகர்த்து செல்லும் வழியில் செல்

-ரூமி

#எழுத்துகளை விட எழுதுபவன் மேன்மையாக இருக்க வேண்டும்.
எழுத்துகள் இறந்த கருப்பு நிறங்கள்.எழுதுபவன் உயிருள்ள மனிதன்

-மாக்சிம் கார்க்கி

# சாவிலிருந்து

ஒரு தூக்குக் கயிறென
தேங்காய்ச் சில்லு தொங்கிக் கொண்டிருக்கும்
மரணத்தின் கூண்டிற்குள்
இரவெல்லாம் அல்லாடிக் கொண்டிருந்த
எலியொன்று
இப்போது திறந்து விடப்படுகிறது
ஒரு கயிற்று சாக்கிற்குள்.
உயிரைக் கையில் பிடித்தபடி
ஓடுகிறது எலி
சாவிலிருந்து
சாவுக்குள் !

– வைகறை


# பொய்யுடையொருவன் சொல்வன்மையால் மெய்யாகிறது;
மெய்யுடையொருவன் சொல்ல மாட்டாமையால் பொய்யாகிறது

-கண்ணதாசன்


#வரலாற்றிலிருந்து மனிதர்கள்
கற்றுக்கொள்வதில்லை-என்கிறார்கள்.
படித்தால்தானே-
உட்கார்ந்து

-பழமலய்


# மக்கள் எப்போதும் கூட்டத்தின் மத்தியில் இருக்கவே விரும்புவார்கள்.
அந்த கூட்டமானது அதிகாரமுள்ள மக்களை வழிபடவும்,புகழவும் தான் செய்யும்.அதிகாரத்தினால் அடிமைப்படுத்தப் படும்போது சுதந்திதம் பறி போவதை அறியமாட்டார்கள்.அது தெரிந்தாலும் அந்த சுதந்திரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது எனக் கேட்பார்கள்

-ஓஷோ

No comments:

Post a Comment