"ஒரு நூலைப் படித்தால்,அது இன்னொரு நூலைப் படிக்க, நூல் பிடித்தாற் போல நம்மை இழுத்துச் செல்ல வேண்டும்! அதுவே சிறந்த நூல்
-கரு.பழனியப்பன்.
#தமிழா?சமஸ்கிருதமா?
-முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர்
முனைவரும் ட்விட்டர் நண்பருமான க.ர ச அவர்கள் எழுதிய அறியப்படாத தமிழ்மொழியை கடந்த 2018ம் ஆண்டே வாங்கிவிட்டேன். அதிலிருந்து அறியாத தகவல்கள் ஆச்சர்யபடுத்தின. இந்நூல் வந்தவுடன் வாங்க வேண்டுமென ஆர்வம் ஏற்பட்டு இப்புத்தக கண்காட்சியில் வாங்கினேன்.கேள்வி பதில் போல் சுமார் 34கேள்விகளுக்கும் ஆய்வு நோக்கில் தன் பதிலை ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார் க.ர.ச.
தமிழ் மொழி வடமொழியை விட பழமையானதா எனும் கேள்விக்கு சுமார் 23 பக்கங்கள் தரவுகள், தொல்லியல், வரிவடிவ எழுத்துக்கள் என மினி m.phil தீசிஸ் போல இனி நீ கேட்ப என்பதுபோல் நம்பகத்தன்மையுடன் இக்கட்டுரை அமைந்துள்ளது.தமிழில் பிறமொழி கலப்பு திணிக்கப்பட்டதை பல சுவாரஸ்ய சொற்களை எடுத்தாள்கிறார்.உதாரணமாக விவசாயம்(சமஸ்கிருதம்) என்றால் தொழில்.. வேளாண்மை(தமிழ்) என்று பொருள் அல்ல.
விவசாயம் என எழுதி எழுதியே நிலைத்துவிட்டது என்கிறார்
ஆங்கில கலப்பு கட்டுரையில் இறுதியாக தக்காளித் தொக்கை மிக்சியில் அரைத்தேன் என எழுதாது தக்காளித் தொக்கை Mixie ல் அரைத்தேன் என எழுதினால் தமிழோடு ஆங்கிலம் கலக்காது..தமிழும் சிதையாது என தீர்வையும் எழுதியது சிறப்பு.
வடமொழிச் சொற்களை எவ்வாறு அறிவது,மொழி குறித்த இலக்கணம் குறித்த ஐயங்கள்,தமிழ்க்கடவுளான முருகன் மீது புனையப்பட்ட சமஸ்கிருத கதைகளில் நிலத்தின் கருப்பொருளிலிருந்து உதாரணங்களை தொகுத்து வழங்கியுள்ளார்.கந்து என்றால் நடுகல்.அதுவே கந்தன். சமஸ்கிருதத்தில் ஸ்கந்தன் என மாற்றிக்கொண்டனர்.முருகன் தான் சரியான பெயர்.சுப்ரமணியன் என்பது சமஸ்கிருதம்.
தமிழ் இலக்கண சிறப்பும், தமிழ் மொழியின் நெகிழ்வும் காலம் கடந்து வளர்வதற்கான காரணம் ஏன் எனத் தெரிகிறது.ஃ என்ற எழுத்தை ஏன் ஆயுத எழுத்து என்கிறோம் என்பதற்கு ஒலியை ஆய்ந்து நுணுக்கல்.அது என்று ஒலிக்கும்போது து என்ற எழுத்துக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை விட அஃது எனும் போது மென்மையாகும் நுணுக்கமே ஆய்த எழுத்து.ஆய்த எழுத்துனா கத்தியோ, துப்பாக்கியோ அல்ல.
தமிழில் எழுதும்போது செய்யும் பிழைகள் என்னென்ன,தற்போது புழக்கத்தில் உள்ள சமஸ்கிருத சொற்களுக்கு ஆதாரமான தமிழ்ச் சொல் என புத்தகம் முழுவதும் நேர்த்தியாக வரையறுத்துள்ளார்.
#ரசித்தது
*திருவள்ளுவர் 9 வடமொழி சொற்களை பயன்படுத்தியுள்ளார்.
ஆனால் ஒரு கண்டனக் குரலில்தான் பயன்படுத்தியுள்ளார்
*வேள் என்பதற்கு விழைவும்.விருப்பம் என்பது பொருள்.விரும்பிச் செய்வது வேள்வி
*முருகனுக்கு 4 ஆற்றுப்படை வீடுகள் தானாம். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர்,பழனி,குமார கோவில்(நாஞ்சில்).ஆனால் சுவாமிமலையாக மாறிவிட்டது.
*முருகனை ஆராய்ந்தால் கையில் வேல் இருக்கிறது.அது வேட்டுவ ஆயுதம்.மயில் குறிஞ்சி நிலப்பறவை. மலைமேல் பாரம் சுமக்கும் காவடி என அனைத்து மலைவாழ்வியல் கூறு.
*இலவசம் என்பதற்கு சரியான தமிழ்ச்சொல் விலையில்லா
*உயிரெழுத்துக்கு முன் ஓர் கட்டாயம். ஆனால் உயிர்மெய் எழுத்துக்கு முன் ஒரு/ஓர் வரலாம்.
மறைந்த க்ரியா ராமகிருஷ்ணனிடம் தமிழ் அகராதி பதிப்பில் உள்ளபோது கேட்டார்களாம்.அனைவரிடமும் அலைபேசி வந்த பிறகு எல்லாரும் தமிழ் சொல்லுக்கான விளக்கத்தை அலை பேசியிலேயே நொடியில் பார்த்துவிடுவார்கள். பிறகு எதற்கு என கேட்டதற்கு சொன்னாராம்.. உண்மைதான் ஆனால் அலைபேசி தேடிய சொல் ஒன்றை மட்டும் தான் தரும்.ஆனால் அகராதி புரட்டும் போது அச்சொல் தவிர்த்து ஏனைய சொற்கள் நம் கண்ணில் படும் என்றாராம்.புத்தகங்கள் இன்னும் உயிர்வாழ்வதற்கு இது கூட காரணமாய் இருக்கலாம்.
இன்றைய வாசகர்கள் புனைவிலேயே தங்கிவிடுகிறார்கள். முகநூலில் பரிந்துரைக்கும் பழைய புத்தகங்களை கண் மூடிக்கொண்டு வாங்குகிறார்கள்.சுயமான தேடலில் புத்தகம் தேர்ந்தெடுக்கும் போதுதான் தன் அறியாமையே நினைவுக்கு வரும்.பின் அந்த அறியாமையை நீக்க நல் புத்தகங்கள் படிக்க ஆர்வம் வரும்.
தொடர்ந்து பகிர்வோம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment