தனித்துப் பறக்கும்
பறவையை கண்டால்
தவிப்பாய் இருக்கிறது
கொடியில் உலரும்
புடைவைகளிலிருந்து உயிரை
நுகர்ந்து கொள்ளலாம்
போலிருக்கிறது
நட்சத்திரங்களுக்கிடையில் கோடு கிழித்து விளையாடும்
மனம் இன்னும் மாறாதிருக்கிறது
மொத்தத்தில் சிறிதளவேனும்
மனிதனாயிருப்பதில்
மிகுந்த சந்தோஷமிருக்கிறது
-ஜீவிதன்
No comments:
Post a Comment