Monday, 22 March 2021

மனுஷ்யபுத்திரன்

தானும் ஒரு உதிரும் இலைதான் என
அறிந்துகொள்ளும் நாள்வரை
இலை நினைத்துக்கொண்டிருந்தது
தான்தான் மரமென..

அப்படியெனில்
மரம் என்பது என்ன?
அது ஆயிரம் ஆயிரம்
உதிரும் இலைகளின்
துயரக் கூட்டம்...

-மனுஷ்யபுத்திரன்

No comments:

Post a Comment