மனிதன் இல்லாத உலகில் விலங்குகளும், தாவரங்களும் வாழ முடியும்,ஆனால்
விலங்குகளும் தாவரங்களும் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.
-சலீம் அலி
#விண்ணளந்த சிறகு
-தியோடர் பாஸ்கரன்
மைக்கேல் மதன காமராஜனில் காமேஸ்வரனில் கமல் சொல்லுவார் எனக்குத் தெரிந்ததெல்லாம் வரதுக்குட்டி சமையல்கட்டு, மளிகைக்கடைனு சொல்வது போல எனக்கு தெரிந்த பறவையெல்லாம் குருவி,மைனா,காகம்,வெள்ளைக் கலரில் எது பார்த்தாலும் கொக்கு என்றுதான்.2003ல் கோடியக்கரை சென்றபோதும் 2010ல் வேடந்தாங்கல் சென்றபோதும் புதிய பறவைகளின் பெயர்களையாவது அறிய முடிந்தது.அந்த வகையில் இந்த புத்தக கண்காட்சியில் தியோடர் பாஸ்கரனின் விண்ணளந்த சிறகுகள் படித்தது பல்வேறு பறவைகளின் வாழ்வியலையும், அழிந்து வரும் பறவையினங்களையும் அறிய முடிந்தது.
புள்ளினங்கள்,பாலூட்டிகள், தாவரங்கள்,ஆளுமைகள், கருத்தாங்கள் என சுற்றுச்சூழல் குற்த்து பலதரப்பட்ட கட்டுரைகள் எளிமையாக புரியும்படி சொன்னது பாராட்டுக்குறியது.பருந்து தெரியும் ஆனால் மான்,குரங்கு போன்ற உயிரினங்களை அழிக்கும் உலகிலேயே பெரிய இரைகொல்லி பறவை தேன்பருந்துதான் என்பது ஆச்சர்யமளித்தது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய பறவையும் இதுதான் என்பது கூடுதல் தகவல்.
காகத்தை வம்புக்கு இழுத்து ஆண் குயில் தன்னைத் துரத்திக் கொண்டு காகத்தை வர வைக்கும்போது காவல் இல்லாத பெட்டைக்குயில் தன் முட்டைகளை காகத்தின் கூட்டில் இட்டுச்செல்வது புதிய தகவலாய் இருந்தது.
பறக்கும் திறனும் வேட்டையாடும் உக்திகளுமே வல்லூறுகளின் முக்கியக்கூறு.வல்லூறுகள் புல்லட்போல 400கி.மீ பறந்து சென்று வானில் தாக்குமாம்.
இதை படித்த போது கடன் வாங்க ஆமை வேகத்தில் போ.. கடனை அடைக்க வல்லூறு வேகத்தில் போ எனப் படித்த வரி நினைவுக்கு வந்தது.
போதை மருந்துச்சந்தைக்குப் பின் பணம் புரள்வது காட்டுயிர் கள்ளச்சந்தையில் தான். மருத்துவ குணமிக்கது என யாரோ கொழுத்திப்போட பல காட்டுயிர்கள் அழிக்கப்படுகிறது பணத்திற்காகத் தான்.இதில் எறும்புதின்னி எனும் அலங்கும் ஒன்று.பிரிட்டிஷ் ஆட்சியில் செந்நாய் ஒன்றைக் கொன்று அதன் வாலை எடுத்துக் கொண்டுபோய் கொடுத்தால் 5ரூ சன்மானம் தருவார்களாம் என படித்த போது ஜெயமோகனின் ஊமை செந்நாய் கதை நினைவுக்கு வந்தது.
குரங்கினங்கள் குறித்து நண்பர் சிவ தினகரன் பகிர்ந்த செய்தி..தாய் குரங்கு குட்டியுடன் மரத்திற்கு மரம் தாவும்போது குட்டிக்குரங்கு அம்மாவை விட்டுவிட்டால் Un fit என நினைத்து ஒதுக்கிவிடுமாம்.அது போல இப்புத்தகத்தில் குரங்கினம் குறித்து பல செய்திகள் இருக்கிறது.பரிணாம வளர்ச்சியில் மனிதர்க்கு அருகில் இருப்பதால் குரங்குகளை முதனி என வகைப்படுத்தியுள்ளனராம்.
நள்ளிரவில் வருடத்தில் ஒரு மணி நேரம் மட்டும் பூக்கும் பூ அதுவும் ஜூலை மாதத்தில் மட்டும்தானாம்.அப்பூவை தேடி வரும் அதிசயப் பறவை,ஆளுமைகள் குறித்து சொல்லும்போது தொதுவர்களின் மீட்பர்,புகைப் படக்காரர்கள்,வரையாடுகளின் காவலர் டேவிடார்,காட்டுயிர் சார்ந்த புகைப்படக்கலைஞர்கள், யானைகள் குறித்த கட்டுரை, பழங்குடியினரின் கானக வாழ்க்கை என இயற்கை சார்ந்த பல கட்டுரைகள் ஆச்சர்யபட வைக்கின்றன .ஒவ்வொரு கட்டுரையிலும் பொருத்தமான புகைப்படங்கள் இருப்பது இன்னும் ஆச்சர்யமளிக்கிறது.இப்புத்தகத்தின் மூலம் நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன்.
#சுவாரஸ்யமானவை
*இரைக்கொல்லிகளின் கண்களில் படாமலிருக்க பளிச்சென்று தெரியும் நிறங்கள் இளம்பறவைகளுக்கு இருக்காது.
*ஆபத்து என்றால் காடை,கவுதாரி குஞ்சுகள் தரையிலேயே படுத்துவிடுமாம்.கண்டுபிடிக்கவே முடியாது
*கூடுகட்டும் எல்லாப் பறவைகளும் நம் ஊரை சேர்ந்தவைதாம். அயல்நாட்டுப் பறவைகள் அல்ல.
*உலகின் 332 வகை கிளிகளில் 55 ஆஸ்திரேலியாவில் உள்ளது. அதனால் கிளிகளின் தேசம் என்கிறார்களாம்
*ஆபத்து எனில் எறும்பு தின்னி கால்பந்து போல இறுக்கமாக சுருண்டுவிடும்.சிங்கமே கடிக்க முயன்று தோற்றுவிட்டதாம்.
*யானைகளை பழக்க கஜசாஸ்திரம் எனும் புத்தகம் தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ளது.
உலகில் நான்கில் மூன்று பங்கு மரங்கள் இருப்பதாக படிக்கிறோம். மரங்களுக்கு ஆதாரமான காடுகளை அழிக்கிறோம்.1263 பறவையினங்களில் 61 பறவையினங்கள் இந்தியாவில் ஓரிட வாழ்விகள் மட்டும் வாழ்கின்றனவாம்.காடுகள் அழிப்பு,காட்டுத்தீ போன்றவற்றால் அழியும் பறவைகளைவிட தட்பவெப்ப சூழ்நிலை மாறுவதாலும் பறவைகள் அழிகின்றனவாம்.மனிதனே அழிகின்றான் இதில் பறவைக்கெல்லாம் கவலைப்பட முடியுமா எனக் கேட்கலாம்.இன்று பறவை நாளை நாமாகக் கூட இருக்கலாம் என்பதே பறவைகள் உலகிற்கு விட்டுச் செல்லும் செய்தி
தொடர்ந்து பகிர்வோம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment