Thursday, 9 February 2017

பாலைநிலவன்

நன்றி: சூர்யா

இல்லத்திற்குத் துறவி வந்திருந்தார்

வாழ்வின் புதிர்பற்றிக் கேட்டேன்

பவ்யமான நகைப்போடு

நாயின் மண்டையோட்டை

அறையில் வைத்துவிட்டுப் போய்விட்டார்

அதை சாம்பல் கிண்ணமாக்கியபின் சொல்கிறேன்

வாழ்வு நாயின் மண்டையோடாக இருக்கிறது

நிரப்புவதுதான்

வேட்கையாயிருக்கிறது.
-பாலைநிலவன்

No comments:

Post a Comment