Saturday, 18 February 2017

தாமரை

வலசையிலிருந்து

2 கிராம் பைத்தியம்
நாலு சிட்டிகை தற்கொலை
நன்றாக நறுக்கிய காமம்
உதிரம் வடியும் யோனி
அரை கப் கண்ணீர்
தோல் சீவிய துரோகம்
தூவலாக சாத்தான்
உப்பளவு கடவுள்
கறிவேப்பிலையாய் அறம்
கதறக் கதற மழை
தனியா போல் இறக்கை பிய்த்த பட்டாம்பூச்சி
நுரைக்க நுரைக்க கொதிக்கும் தனிமை
மூன்று விசில் விட்டு மூடி திறந்தால்
கவிதை தயார்

நன்றி
நேச மித்ரன்

No comments:

Post a Comment