சாக்குருவிகளின்
இசையை கேட்பதற்காக
அவன்
இரவுகளில்
மின்விசிறிகளை நிறுத்திவிடுகின்றான்
தூரப் பிரதேசங்களில்
அவனுக்கான சவப்பெட்டிகள்
தயாராவது பற்றி
அவை அவனுக்குச் சொல்கின்றன
சவப்பெட்டிகள்?
என்ற
அவனது கேள்விக்கு
ஒரே முறையில்
ஒரே நபராக
உன்னால் இறந்துவிடமுடியும்
என நிச்சயமுண்டா
என்று கேள்வியிடுகின்றன
அவன்.மவுனமாகிறான்
பனி உரத்துப பெய்யத் துவங்குகிறது.
-போகன் சங்கர்
No comments:
Post a Comment