Thursday, 9 February 2017

தமிழச்சி

தமிழச்சி தங்கப்பாண்டியன்

எப்பொழுதும் போலவே
இந்தக் கோடையிலும்
எனக்காகக் காத்திருக்கும்
எல்லாமும் இருக்கின்றன
என் பிறந்த ஊரில்...
ஒரு மாலை நேரத்து மாரடைப்பில்
பாராமல் எனைப் பிரிந்த
என் அப்பாவைத் தவிர...

- 'எஞ்சோட்டுப் பெண்' தொகுப்பிலிருந்து

No comments:

Post a Comment