ஏறக்குறைய பத்தாண்டு காலமாக ஜூனியர் விகடன் வாசகன்.வியாழன் ஆனந்தவிகடன் என்றால்
புதன் கிழமையும்,சனிக்கிழமையும் ஜூ.வி.. தவம் போல் காத்திருந்து படித்த நாட்கள்.புலனாய்வு கட்டுரைகளோடு தியாகுவின் கட்டுரை, பிரபஞ்சனின் கதை மழை, உலகசினிமா, எஸ்.ரா வின் எனது இந்தியா, மறைக்கப்பட்ட இந்தியா வை தொடர்ந்து வாசிக்க ஆர்வத்தை தூண்டியது.
இலங்கை பிரச்சனை குறித்து தொடர்ந்து மக்களிடம் சேர்த்தது, மாணவர்களை நிருபர்களாக உருவாக்கும் உன்னத முயற்சி, அரசியல் கட்டுரைகளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் எளிய நடையில் செய்தியின் பிண்ணனியை அலசுவது, வாரந்தோறும் புத்துணர்ச்சியை வெளிவருவது...மேலும்
செய்திகளை எப்படியும் மோப்பம் பிடித்துவிடும் மிஸ்டர் கழுகு, அரசியல்,சினிமா,சமூகம் என அனைத்தையும் சுவாரஸ்யமாக தரும் கழுகார் பதில்கள் ரசனை.. உதாரணத்திற்கு
கழுகார் பதில்கள்!: உண்மையான மீனவ நண்பன் யார்? - மீன்கள் மட்டுமே!""
வார்த்தை சிக்கனத்தில் கருத்துச் செறிவுடன்
இந்த வாரம் 3000 இதழாக வெளிவருவதில் வாசகனாக பெரும் மகிழ்ச்சி.ஜூ.வி ஆசிரியர் திரு. திருமாவேலன் அவர்களுக்கும் இணை ஆசிரியர் உட்பட அனைவருக்கும் நல்வாழ்த்துகள்..
"அறிவுக்கதவை சரியாகத் திறந்தால் பிறவிக் குருடனும் கண் பெறுவான்
படிப்பாலே உண்மை தெரியும்,உலகம் புரியும்...
எனும் பட்டுக்கோட்டையின் வார்த்தைகளின் வழியே ஜுனியர்விகடனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகள்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment