[27/12/2017, 5:53 p.m.] 💥TNPTF MANI💥: தள்ளுபடியில்
எனக்கும் கிடைத்திருக்கிறது
ஒரு விலை குறைந்த வாழ்க்கை
-p
[27/12/2017, 5:55 p.m.] 💥TNPTF MANI💥: கடவுளிடம் வரம் கேட்பதை விட
வாய்ப்பு கேட்டால் நிச்சயம் தருவாரு
*மணி
[27/12/2017, 5:57 p.m.] 💥TNPTF MANI💥: தெய்வத்தால் ஆகாதெனினும்
பிரசாதங்களால் ஒன்றுபடுகிறது
மத ஒற்றுமை
*மணி
[27/12/2017, 6:21 p.m.] 💥TNPTF MANI💥: கட்டி முடிக்காத
வீட்டில் குடியேறியது
"சிலந்தி"!
[27/12/2017, 8:11 p.m.] VIJAI TNPTF: பெறுத்தாட்ட ஒரு கையுமில்லை
பாலூட்ட ஒரு மார்பும் இல்லை
அடைகாக்க ஒரு கூடும் இல்லை
முளைவிடுகிறது
விதை.
_இன்குலாப்.
காந்தள் நாட்கள்
[27/12/2017, 8:23 p.m.] VIJAI TNPTF: இன்றின் கடைசி நொடியிலும்
உலராது இருக்கிறது
ஒரு கண்ணீர்த்துளி
அதனுள் புகையும்
ஒரு தீப்பொறி.
_இன்குலாப்.
காந்தள் நாட்கள்.
[27/12/2017, 8:54 p.m.] 💥TNPTF MANI💥: உலகம்
அணைக்க ஒரு
அன்பில்லா மனைவி
வளர்க்க இரு
நோயுற்ற சேய்கள்
வசிக்கச் சற்றும்
வசதியில்லா வீடு
உண்ண என்றும்
உருசியில்லா உணவு
பிழைக்க ஒரு
பிடிப்பில்லாத் தொழில்
எல்லாமாகியும்
ஏனோ உலகம்
கசக்கவில்லை
-சண்முக சுப்பையா
[27/12/2017, 8:55 p.m.] 💥TNPTF MANI💥: சில நேரங்களில்
சில நெட்வொர்க்குகள்
[27/12/2017, 9:01 p.m.] VIJAI TNPTF: பறவை ஒன்றை வரையத்துவங்கினேன்.
வரைந்து முடித்ததும்
அது பறந்து விட்டது.
மீண்டும் ஒரு பறவையை
வரைந்தேன்
அதுவும் பறந்து விட்டது.
நான் வரைந்து கொண்டேயிருந்தேன்
அவைகள் பறந்து கொண்டேயிருந்தன
கடைசியாக மரம் ஒன்றை
வரைந்து முடித்தேன்
பறந்து போன அத்தனை
பறவைகளும் வந்து
அமர்ந்து கொண்டன.
_தென்பாண்டியன்.
[27/12/2017, 9:05 p.m.] VIJAI TNPTF: மெய்மை கொண்ட நூல்களை அன்போடு
வேதமென்று போற்றுவாய்
_பாரதி
[27/12/2017, 9:13 p.m.] VIJAI TNPTF: விசம் போல
என்னுள் இறங்கி
பரவிக்கொண்டிருக்கிறாய்
நீ
வா..மரணம் நோக்கி
பயணிப்போம்....
எல்லாம் கடந்து..
_பாரதிவாசன்.
இடைவெளி நிரப்பும் வானம்.
[27/12/2017, 10:35 p.m.] 💥TNPTF MANI💥: எளிமையானது உன் அன்பு
நடு ஆற்றில் அள்ளிய நீர் போல.
~ சுகுமாரன்
[27/12/2017, 10:35 p.m.] 💥TNPTF MANI💥: சாக்லெட்டே சாக்லெட்டே
குழந்தைகளுக்குப் பிரியமான சாக்லெட்டே..
சிகரெட்டே சிகரெட்டே
நேரம்கெட்டநேரத்தில் தீர்ந்து போகும் சிகரெட்டே..
#விக்ரமாதித்யன்
[27/12/2017, 10:36 p.m.] 💥TNPTF MANI💥: சுவரைப் பார்த்தபடி
அழுதுகொண்டிருந்தாள்
கொஞ்சம் சுவரில் சாய்ந்துகொண்டு
அழலாமே
என்றன சுவர்கள்
கருணையுடன்
- மனுஷ்ய புத்திரன்
[27/12/2017, 10:41 p.m.] 💥TNPTF MANI💥: எல்லா கொலுசுகளும்
ஒருபோலவே ஒலிக்கின்றன
நீதானெனப் பறைசாற்றுவது
உன் நடையின் ஓசை!
-யாத்திரி
[28/12/2017, 7:38 a.m.] 💥TNPTF MANI💥: கண்ணில் தெரிபவை யாவும் காட்சிகள்
மனதில் பதிபவை மட்டுமே பார்வைகள்
-p
[28/12/2017, 7:40 a.m.] 💥TNPTF MANI💥: நான் விழித்தபோது விழித்துக் கொண்டிருந்த அலாரத்தை உறங்க வைத்தேன்
[28/12/2017, 7:43 a.m.] 💥TNPTF MANI💥: சிலரை மதிப்பது மரியாதைக்காக
சிலரை மதிக்காமல் இருப்பது சுய மரியாதைக்காக..!"
-படித்தது
No comments:
Post a Comment