Saturday, 10 February 2018

மணி

[10/01, 6:42 a.m.] 💥TNPTF MANI💥: காலியான கூடாரத்தின் கடைசி மனிதன்
அதிர்ந்த குரலில் அறிவித்துக்கொள்கிறான்
தானே தலைவனென்று
வழிமொழிய ஆளில்லாத அவன்
வாய்க்கு வந்ததையெல்லாம்
வாரி இறைக்கின்றான் நம்பிக்கையுடன்
அறத்தைக் கொன்றுவிட்டு
ஆளத்துடிக்கும் அவனுக்கு
வந்து வந்து குவிகின்றன வாய்ப்புகள்
எள்ளி நகையாடுகிறான் எதிரிகளை
முட்டாள்தனமான முன் அனுபவங்களை
கடைவிரிக்கின்றான் காத்திரமாக
தானே நாடென்றும்
தனக்கே நாடென்றும் சொல்லும் அவன்
விளக்கிவைத்திருக்கிறான்
வியாபார அரசியலை
உண்டியல் குலுக்கி உருவான தலைவர்கள்
ஓரத்தில் நிற்கிறார்கள்
பணம் தின்னும் கழுகாக மாறிவிட்ட
ஜனங்களைப் பார்த்தபடி.

- யுகபாரதி
ஆனந்தவிகடன் பொங்கல் சிறப்பிதழ்

நன்றி:திருமாவேலன்

[10/01, 7:11 a.m.] 💥TNPTF MANI💥: பானை= 3 நிறம்

*சிவப்பு= தானியம்/ நீர்/ தினப் பயன்பாடு
*கருப்பு= தயிர்
*வெளிச் சிவப்பு/ உள் கருப்பு= கீரை ஆய!
--
வெண் பானை= விழா/ திருமணம்!

பானைகள்:

1.அடிசில் பானை=சோறு ஆக்க
2.அடுக்குப் பானை
3.உறிப்  பானை
4.கஞ்சிப் பானை
5.கதிர்ப் பானை
6.கழுநீர்ப் பானை
7.காடிப் பானை
8.கூழ்ப் பானை
பானைகள்:

9.குண்டுப் பானை
10.சில்லுப் பானை
11.வெள்ளாவிப் பானை
12.பொங்கல் பானை

தமிழ் இலக்கியப் பானை
வெறும் "பானை" என நினைச்சிறாதீக:)

[10/01, 7:13 a.m.] 💥TNPTF MANI💥: பொம்மை வாங்க இயலாத ஒருவன் தன் குழந்தைக்குச் சொல்ல ஒரு நாய்க் கதையை உருவாக்கிக்கொண்டு நகர்கிறான் கடையைவிட்டு - முகுந்த் நாகராஜன்

[10/01, 7:15 a.m.] 💥TNPTF MANI💥: பதில் சொல்ல தவிர்ப்பவர்களை
சந்தேகிக்க வேண்டியதில்லை .....
உண்மையில் அவர்கள் பொய்
சொல்ல விரும்பாதிருக்கலாம் .....!

[10/01, 7:24 a.m.] 💥TNPTF MANI💥: உண்மையில் சீப்புக்கு தான் தலையெழுத்து என்ற வார்த்தைக்கு பொருத்தமாயிருக்கிறது
[10/01, 8:23 a.m.] செ பாலா: பேச முடியவில்லை
நினைத்த நேரத்தில் தாய்மொழியை
#வெளிநாட்டு வாழ்க்கை
[10/01, 8:26 a.m.] மினிமீன்ச்: கடவுளுக்காக
மொட்டையடித்துக் கொள்கிறான்
மனிதன்...
மனிதனுக்காக
ஒரு மயிரையும்
இழக்கத் தயாராய் இல்லை
கடவுள்.
-பாரதி ஜிப்ரான்

[10/01, 8:34 a.m.] 💥TNPTF MANI💥: பல "கட்ட" போராட்டம் இருப்பது திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது தான்
[10/01, 3:59 p.m.] 💥TNPTF MANI💥: நன்று.அவரின் மேசையில் ஒரு பொன்மொழி வைத்திருப்பார்

Go to the people
Live among them
Love them
Learn from them

இறுதி வரி நினைவில்லை.ஆனால் அதன் கருத்து அங்கிருந்து திட்டங்களை உருவாக்கு என்பது

No comments:

Post a Comment