Saturday, 10 February 2018

உஷாராணி

# பரிதாபம் எரிச்சலூட்டுகிறது
கருணை காயப்படுத்துகிறது
சமம் ஒன்றே சமாதானப்படுத்துகிறது
      -மாற்று திறனாளி .

# வியர்வை வற்றி போகும் வரை உழைப்பேன்
வயிறு ஒட்டிக்கொள்ளும் வரை பசி தாங்குவேன்
விழி பிதுங்கும் வரை கண் விழிப்பேன்
இரத்தம் சுண்டும் வரை சம்பாதிப்பேன்
எலும்பு தேயும் வரை எழுந்திருப்பேன்
பாடையில் போகும் வரை பாடாய் படுவேன்
குரங்கைப் போல் குட்டிக்கர்ணமும் அடிப்பேன்-என்
குழந்தையின் கபடமில்லா சிரிப்பிற்காக.....

# காலண்டரில் போட்டிருக்கும் ராசிப்பலன் படி அன்று நடக்காது என்று தெரிந்தும் பார்க்க மறப்பதில்லை தினமும்....
      -குரங்கு மனம்.

No comments:

Post a Comment