மனக்குவியமும் கவனமும்
அது ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கான நேர்காணல் கடைசி சுற்றுக்கு மூன்று பேர் மட்டும் தேர்வாகியிருந்தனர். ஒவ்வொருக்கும் மூன்று கணினி கொடுக்கப்பட்டது. திரையில் முதலாமவருக்கு காபி கொட்டையின் விலை நொடிக்கு நொடி மாறி வரும்
அதனை கண்காணித்து குறிக்க வேண்டும். இரண்டாமவருக்கு சர்க்கரையின் விலை உலகச் சந்தையில் மாறி வருவதை காட்டுவார்கள். மூன்றாமவருக்கு கச்சா எண்ணையின் விலை ஓடிக்கொண்டிருக்கும்.
அதன் கீழேயே ஒவ்வொருவருக்கும் சிரியா மீது ரஷ்யா போர் தொடுக்கிறது. தொழிலாளர்களின் போராட்டம் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவை சரி கட்ட நாடுகளின் கூட்டமைப்பு அறிக்கை நாளை வெளியாகிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செய்தி அதன் கீழ் வந்து கொண்டிருக்கும். சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு காத்திருந்தனர். தங்களுக்குள் பேசிக் கொண்டனர் இதனை அதிகாரிகள் அங்கிருந்து சிசிடிவியில் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அன்று இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. காபி விலையை கவனித்தவர் தேர்ச்சி பெறவில்லை. சர்க்கரையை கவனித்தவர் அடுத்த கட்ட நிலைக்குத் தேறுகிறார். கச்சா எண்ணை விலையை கவனித்தவருக்கு வேறு வேலை தருவதாக கூறுகிறார்கள்.
ஒவ்வொருவரின் திரையில் ஒளிரும் செய்திக்கான காரணம் பிறரின் திரையில் வரும்.இதனை கலந்து ஆலோசித்திருந்தாலே விடை கிடைத்திருக்கும்.
ஒரு வேலையை செய் என்று ஆணை வரும் போது மூளை இரு வேலைகளை செய்கிறது. தனக்கு பிடிக்காத தேவையில்லாதது என கருதுவதை கவனத்தில் இருந்து விலக்கி வைக்கிறது. உணர்ச்சியுடன் கூடிய நிலையில் இதனை கவனி என்று அட்ரினலின், நார்
எபினெஃப்ரின் போன்ற ஹார்மோன்களை தூண்டிக்கொண்டு, பதற்றத்துடன் தனக்கு இட்ட வேலையை கவனிக்க எத்தனிக்கிறது. காபி விலையை பார்ப்பவர், கீழே ஓடிய கச்சா எண்ணெய் பற்றிய செய்தியை கவனிப்பதில்லை. அவர் கண்ணில் படுகிறது ஆனால் கவனத்தில் செல்வதில்லை. அதிகப்படியான தகவல்களை மூளை சேமிப்பதில்லை
பிஜி தொழிலாளர்களின் போராட்டம் என்பதை பார்த்த இளைஞன் அதனை தெரிவித்து இருந்தால் சர்க்கரை விலையை கவனித்தவன் உள்வாங்கி இருக்க முடியும். கச்சா எண்ணெய் கதையும் அப்படித்தான். ஒருவருக்கொருவர் தொடர்பான செய்திகள் இன்னொருவருக்கு வந்து கொண்டிருந்தன. ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட செய்திகளை மட்டுமே அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மனக்குவியத்திலிருந்து கவனம் வேறுபட்டது.குவியம் என்பது,கவனம் போன்ற பல கட்டங்களை கொண்டது.
தேவைகளை அறிந்து நிற்பவர்களால் மட்டுமே தகவல்களை அலசித் தேக்கி, பிறருக்கு அளித்து முன்னேற முடியும்.
அனைவராலும் சிதறியோடும் சிந்தனைகளை செய்ய முடியும் ஆனால் குவியத்தின் மூலம் வரும் செறிவான தெளிவான சிந்தனைகளைக் கொண்டுவர உணர்வும் பயிற்சியும் தேவை. இந்த சிந்தனை மட்டுமே நாம் விரும்பும் திசையில் வெற்றிகரமாக பயணிக்க வைக்கும்.
எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரியின் நூலிலிருந்து
நற்காலை
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment