Tuesday, 1 April 2025

புத்தகம் 40


#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-17
பக்கங்கள் -304
நாள்-8

அறிவுத்தேடல்
-சுப.வீரபாண்டியன்

காலையில் தினமும் கண் விழித்தால் கைதொழும் தேவதை மொபைல் போன்கள் தான். அந்த மொபைல் போனை இனிய நாளாகுவது சுபவீ அவர்களின் ஒரு நிமிட செய்தி தான்.அறிவு தேடலில் தான் கற்ற அறிவினை நாள்தோறும் பகிர்ந்து வரும் ஒரு அறிவு தேனீ அவர். அந்த வகையில் இந்த புத்தகம் தன்னுடைய உரைகளை தொகுத்து நூலாக கொண்டு வந்துள்ளார். இதில் அவர் ஆற்றிய பல உரைகளை you tube ல் கேட்டிருப்பீர்கள். ஆனால் புத்தகமாய் வாசிக்கும் போது நமக்கு தனி அனுபவமாய் அமைகிறது.

குறிப்பாக ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா என்ற உரைத் தொகுப்பு அன்றைய நாளில் மிகவும் வைரலாக பரவிய தொகுப்பாகும் இந்த புத்தகம் ஏதோ அறிவியல் சம்பந்தப்பட்டது மட்டுமல்லாமல் நமக்கு தேவையான பல விஷயங்களை அறிவியல் நோக்கில் ஹாக்கிங் என்ன சொல்ல வருகிறாரோ அவற்றை தன் பாணியில் மிக எளிதாகவும் அதே சமயத்தில் சிந்திக்கும்படியில் தக்க மேற்கோள்கள் பலவற்றைக் காட்டி சிறு கதைகளை கூறி இந்த உரை தொகுப்பு நமக்கு வித்தியாசமாய் அமைந்தது. கடவுள் உண்டா இல்லையா என்பது குறித்து பன்னெடுங்காலமாக விவாதம் நடைபெற்று வருகிறது.ஹாக்கின்ஸ் பார்வையில் எவ்வாறு உள்ளது என்பதனை தான் இந்த புத்தகம் நமக்கு சொல்லிக் கொடுக்கிறது.

ஸ்டீபன் பற்றிய வரலாறு நமக்கு சொல்லும் போது அவர் மீதான மதிப்பும் மரியாதை அதிகரிக்கிறது. ஒரு மாற்றத்திறனாளியாய் இருந்தும் கூட தன்னம்பிக்கையுடன் இந்த உலகில் தன் கருத்துக்களுடன் கம்பீரமாக வாழ்ந்து வந்துள்ளார். என நினைத்து பார்க்கும் போது பெருமை அடைய வைக்கிறது.

பெரியாரை பற்றி அனைவரும் தங்களுடைய கருத்து வேறுபாடுகளை கூறி விடுவார்கள். ஆனால் அண்ணாவை யாருக்கும் தாக்குவதற்கு அத்தனை எளிதாக மனம் வராது தாக்கப்படாத காரணத்தினாலேயே கூடுதலாக இளைஞர்கள் அறியப்படாமல் போய்விடக்கூடாது என்ற கவலையுடன் சபரி அவர்கள் அண்ணாவைப் பற்றி நமக்கு அறிமுகம் செய்கிறார். அண்ணா அவர்களின் அரசியல் வாழ்வை பற்றி தெரிந்த அளவுக்கு அவர் எழுத்தாளராக அறிவது சற்று குறைவு தான் .அவர் 13 நாடகங்களையும் 77 கவிதைகளையும் 129 ஆங்கில கட்டுரைகளையும் 113 சிறுகதைகளையும் 316 தம்பிக்கான கடிதங்களையும் 1476 தமிழ் கட்டுரைகளையும் 12775 சொற்பொழிவுகள் கட்டுரைகளாக ஆக்கப்பட்டுள்ளன என்று படிக்கும் போதே பிரமிப்பு வருகிறது. அண்ணா குறித்து அறியப்படாத பல தகவல்கள் இந்த உரையில் காண முடிகிறது.

உன் கருத்தை நான் முழுமையாக மறுக்கிறேன் ஆனால் அதனை சொல்வதற்கான உன் உரிமையை நிலை நாட்ட நான் சாகும் வரை வாதிடுவேன் என்றார் வால்டர். அவரை குறித்த கட்டுரைதான் மூன்றாவது ஆக இடம் பெற்றவை. மூடநம்பிக்கை எதிர்ப்பு மத ஆதிக்க எதிர்ப்பு கருத்துரிமை போர் ஆகிய மூன்றும் வால்டேரின் எழுத்துக்களில் மேலோங்கி இருந்தவை.

இன்னொரு தகவல் இந்த புத்தகத்தில் அறிய முடிந்தது புதிய செய்தியாக இருந்தது 18 ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் திப்பு சுல்தானுக்கு உதவியாய் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தளபதி லாலி அவர்கள் உதவி புரிந்தார். ஆனால் போரில் ஆங்கிலேயர்கள் வென்றதால் திப்பு கொல்லப்பட்டார். லாலி பின்னர் பிரான்ஸ் நாட்டுக்கு திரும்பும் போது அவருடைய சொத்துக்களை அரசு பறிமுதல் செய்து வைத்திருந்தது. அந்த அநீதியை வால்டேரினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்காக தளபதியின் பக்கம் நின்று போராடி சொத்துக்களை மீட்டுக் கொடுத்தார். இது போன்ற செய்திகள் வால்டர் மீது இருந்த மரியாதை பன்மடங்கு அதிகப்படுத்துகிறது.

லத்தீன் அமெரிக்க வரலாற்றினை பற்றி சொல்லும் போது பீரங்கி துப்பாக்கி என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் பல்வேறு நாடுகளால் அடிமைப்படுத்தப்பட்டு அடிமைகளாக வாழ்ந்தவர்கள். மீதமுள்ளவர்களையும் பல்வேறு நாட்டினர்கள் அடிமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.எனவே லத்தின அமெரிக்க மக்கள் எதிர்த்து போராடி வென்றதாக தனித்து விடப்பட்டவர்களாக ஆகிவிட்டனர். நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் தூய்மையற்ற நீரும் பல்வேறு இன்னல்களையும் அவர்கள் அனுபவித்த வண்ணம் இருந்தனர் என எவ்வாறு அந்த கண்டம் மீண்டு வந்தது என்பதை பற்றிய வரலாற்றை இதில் பதிவு செய்கிறார்.

இதை தவிர வள்ளுவத்தின் மனிதம் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது .அறிவியல் சார்ந்த மானுட வரலாறுகள் என்னென்ன, நாயக்கர்களின் காலம் எதனால் பொற்காலம், எது சுதந்திரம் ,மாமனிதர் குருசாமி, சனிப்பெயர்ச்சி உள்ளிட்ட உரைகள் படிப்பதற்கு அத்தனை அறிவுப் புதையல்களை தன்னிடத்தே ஒளித்து வைத்துள்ளன. நல்லதொரு வாசிப்பு அனுபவமாக அமைந்தது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment