#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055
புத்தகம்-23
பக்கங்கள் -169
நாள்-13
#மாதம்_ஒரு_எழுத்தாளர்
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
-பெருமாள் முருகன்
சுறுப்பானது வெள்ளாடு என்பதால் கதையின் ஓட்டத்திற்கு வெள்ளாடு சரியாய் இருக்கும் என கதாபாத்திரமாக எழுத்தாளர் ஏற்றுக்கொண்டார்.
ஊர் ஊராய் ஏழாவதாய் பிறந்த ஆட்டுக்குட்டியைத் தூக்கி கொண்டு அலைந்து கொண்டு இருந்தான் ஒருவன். வழியில் தென்பட்ட கிழவனிடம் பேச்சுவாக்கில் அந்த ஆட்டுக்குட்டியை கொடுத்துவிட்டு கிழம்பிவிட்டான் அவன்.எப்படியாவது அந்த ஆட்டுக்குட்டியை வளர்த்து விட வேண்டும் என நினைக்கிறான் கிழவன்.முகச்சுழிப்புடன் மனைவி இதை ஏற்றுக்கொண்டு.. வளர்த்து பருவமடைந்தால் விற்றுவிடலாம் என பூனாச்சி என பெயர் சூட்டுகிறாள்.
வீட்டில் ஒருவளாய் வளர்கிறாள்.
வயிற்று பசிக்கு சிரமப்படும் இருவர் கடவுள் கொடுத்த பரிசு போல் இருக்கும் வெள்ளாட்டை கஷ்டப்பட்டு வளர்க்கின்றனர். காட்டுப்பூனைக்கு தப்பியதும், காது குத்துதல் என கிராமத்து சடங்குகள் செய்கின்றனர்.
குட்டி போடுகிறது. ராஜாங்கத்துக்கு தெரிந்தால் என்ன சொல்வது என யோசிக்கிறார்கள்..அப்போது ஒரு வரி வரும்..
வாயிருப்பது மூடிக்கொள்ளதான்.கையிருப்பது கும்பிடு போடத்தான். காலிருப்பது மண்டியிடத்தான்.முதுகிருப்பது குனியத்தான்.உடலிருப்பது ஒடுங்கத்தான். ராசாங்கத்திடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று எல்லாரும் நன்றாகவே கற்றிருந்தார்கள்”
*ராசாங்கத்தின் காது செவுட்டு
காது.என்று வரும்
காது குத்தும் சடங்கு முடிந்ததும் காய்ச்சல் வலி என பூன்னாச்சி சிரமப்பட்டது.பின்னர் கிழவி தன் குழந்தையைப் போல வளர்த்து வந்தாள். வயதான காலத்தில் விலங்குகள் வாரிசாகும்.நிகழ்வை போல.
மேய்ச்சலுக்கு பூனாச்சியை ஓட்டிச்செல்லு போது அங்கு ஊத்தன் உழும்பன் எனும் செம்மறியாட்டுடன் விளையாடுவாள் பூனாச்சி. அந்த உலகம் அவளுக்கானது.
இயல்பான வாழ்க்கையில் பலி ஆடுகளாய் உள்ள நண்பனை பறிகொடுத்தல்,வனத்திற்குள் பயணம் என செல்கிறது பூனாச்சியின் வாழ்க்கை. வனத்தை பற்றிய பூனாச்சியின் எண்ணம்
"சனம் எல்லாத்தையும் அழிச்சு அழிச்சு கையில் வழிச்சு வழிச்சு வாயில் போட்டுக்குது.அப்புறம் சனத்தை தவிர வேறு எதுவும் பொழைக்க முடியாது என்கிறது.பஞ்சத்தில் மக்களுடன் வாயில்லா ஜிவன்களும் துன்புறுவது துயர்மிக்கது.இதற்கிடையில் பூவன் மேல் ஆசை கொண்டதுபோது பூனாச்சி பிரிகிறாள்.
பின் கொஞ்ச இடைவெளியில் ஏழு குட்டிகளை ஈனுகிறாள் பூனாச்சி. குட்டிகளை விற்க நினைக்ககிழவன் யோசிக்கும் போது..கிழவி அதிசயத்தை பார்க்கலாம், ரசிக்கலாம்.. கட்டிக் காப்பாற்றும் திராணி நமக்கில்லை என்கிறாள். ஒரு ஏழை குடும்பத்தின் தெய்வவாக்கு இது தான்.நம்மால் என்ன செய்ய முடியும் அழத்தான் முடியும் என்பது போல்.தன் குட்டிகளை தன் கண் முன் விற்பதை பார்த்து பூனாச்சி பொறுமுகிறாள்.
"இது பெண்ணை பற்றியதோ என எண்ணும் அளவிற்கு மனதிற்கு நெருக்கமாய் இருக்கிறது.
*பேசற வாயும் தின்னுற வாயும் ஒன்னுதான்.. எல்லாத்தையும் பேச முடியுமா? எல்லாத்தையும் தின்னுற முடியுமா?
காதலன் பூவனை பறிகொடுத்த பதைபதைப்பு நெகிழ்ச்சியானது
ஆரம்பம் முதல் இறுதி வரை பூனாச்சியே ஆக்கிரமித்திருக்கிறாள்.மனிதரை போல் பூனன், கடுவாயன், அழகுமூக்கி, உழுத்தன், ஊழையன், செம்மி, பொருமி ” என ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மை கவர்வதுடன் நில்லாமல் கண்கலங்க வைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
வெள்ளாட்டின் கிராமத்து வாழ்வியல், பட்டி, ஊனு,,புழுக்கை என ஆடு மேய்த்த வாசம் நமக்கு வருகிறது.கஷ்ட காலத்தில் பூனாச்சி யின் பிரசவ வேதனை நமக்கும் வருகிறது.ஆடு பிரசவ காலத்தில் ஆறுதல் தேடும். ஆடு தாய்மை உணர்வுகளை கடந்து நிற்கும். பஞ்ச காலத்தில் ஆடும் மனிதர்களுடன் பட்டினி கிடக்கும் என்பதை உணர முடிகிறது.
இறுதியில் கிழவி தொட்டுப் பார்க்கும் போது பூனாச்சி கற்சிலை போல் இருந்தாள் எனும் வார்த்தை நம்மை நிலைகுழைய வைக்கிறது.இந்த்ந் வாசிப்பு பயணம் இனிமையாகவும் நல்லதொரு அனுபவத்தையும் கொடுத்தது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment