உங்கள் வெற்றி, அது உங்கள் பார்வையில் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், பிறருக்குப் பெரிதாகத் தெரியாது.
உதாரணமாக, நீங்கள் ₹10,000 ஊதிய உயர்வு பெற்றீர்கள் என்றால், அது உங்கள் வாழ்க்கையில் பெரிய செய்தியாக இருக்கலாம். ஆனால் பிறருக்குப் பெரிதாகக் கவலை இல்லை.
நீங்கள் அதை மிகப்பெரிய விருந்தாகக் கொண்டாடினால், வந்தவர்கள் உணவுக்காக வருவார்கள் — உங்கள் மகிழ்ச்சிக்காக அல்ல. சிலர் பொறாமையாகவும் பார்க்கலாம்.
ஆகவே, உங்கள் வெற்றிகளைப் பிறருடன் பெருமையாக பகிர்வது, அவர்கள் மனத்தில் பொறாமையை மட்டும் விதைக்கும்.
உங்கள் வெற்றிகள் சத்தமில்லாமல் இருக்க வேண்டும். நீங்கள் பேச வேண்டியதில்லை — உங்கள் வெற்றி பேச வேண்டும்.
மற்றவர்கள் தான் உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்தது என்பதை அறிய வேண்டும்.
மற்றவர்கள் தான் நீங்கள் செல்வந்தரானதை உணர வேண்டும்.
மற்றவர்கள் தான் நீங்கள் நல்ல நிலையில் வாழ்கிறீர்கள் என்பதை அறிய வேண்டும்.
நீங்கள் சொல்லி அவர்களை நினைவுபடுத்த வேண்டாம். அவர்கள் தானாகவே ஆச்சரியப்பட வேண்டும்:
“இந்த மனிதர் சத்தமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்… ஆனால் இத்தனை பெரிய வெற்றியை அடைந்திருக்கிறாரா?”
அதுவே உண்மையான வெற்றியின் அடையாளம்.
நீங்கள் இல்ல; உங்கள் வெற்றியே பேச வேண்டும்.
-நியாண்டர் செல்வன்
No comments:
Post a Comment