#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055
புத்தகம்-41
பக்கங்கள் -238
நாள்-26
நம் ஆரோக்கியம் நம் கையில்
-கு.கணேசன்
இளமையின் ஆரோக்கியத்தையும் ஒருமுறை எழுந்தால் மீண்டும் பெறுவதற்கு அரிது என்பார்கள். இந்த ஆரோக்கியத்தை இளமையிலேயே நல்ல முறையில் பாதுகாத்தால் முதுமை வரை நலமாய் வாழலாம் என்று இந்த நூல் விளக்குகிறது. தனக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்லாதிருத்தல் பாவம் என்ற பைபிள் வசனத்திற்கு ஏற்ப மருத்துவர் கு. கணேசன் அவர்கள் சாதாரண மக்களும் பயன் பெறும்வகையில் தன்னுடைய மருத்துவ அறிவை மிக எளிமையாக விளக்குவதில் திறன் வாய்ந்தவர்.
இந்த நூலும் மருத்துவ அறிவை சாதாரண மக்களுக்கு புகட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
மனித உள்ளுறுப்புகளில் உள்ள பகுதிகளை பற்றிய சுவையான தகவல்களை தாங்கி 28 தலைப்புகளில் இந்நூல் விவரிக்கிறது. மனித உறுப்புகளில் ஒவ்வொன்றும் முக்கியமானது அதில் முதன்மையானது இதயம் என்பார்கள். ஒரு வருடத்தில் 31 லட்சத்தி 59 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பம்பு செய்கிறது. எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் இதயத்தை தான் தற்காலத்தில் நோய்கள் அதிகம் தாக்குகின்றன. அவை வராமல் தடுப்பதற்கு அதனைப் பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியமாகும். அந்த வகையில் ரத்தக்குழாய் அடைப்பு நெஞ்சு வலிக்கு மார்பு வலிக்கு உண்டான வித்தியாசம் உடனடி மாரடைப்புக்கான காரணங்கள் என ஒவ்வொன்றாக இப்பகுதி அலசுகிறது.
சமீப காலங்களில் நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் அவருக்கு இறப்பு ஏற்பட்டதாக சொல்வதை நாம் கேள்விப்படுகிறோம். அந்த நுரையீரல் தொற்று எவ்வாறு ஏற்படுகிறது? நுரையீரல் நோய்க்கான மூல காரணங்கள் என்னென்ன? அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் உணவு பழக்கங்கள் பற்றி இப்பகுதி சொல்கிறது.
இரைப்பையில் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் பென்சின் என்சைமுகம் அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது இரைப்பையிலும் முன் சிறு குடலிலும் உள்ள நியூக்கஸ் படலம் அலட்சியுற்று வீங்கி சிதைவடையும். இதை இரைப்பை அழற்சி என்கிறோம். பசி குறைவு, குமட்டால், புளித்த ஏப்பம், வாந்தி முதலியன இதன் அறிகுறிகளாக உள்ளன. இதை கவனிக்க தவறினால் இரைப்பை புண்ணாக மாறிவிடும் என்கிறார். அடுத்ததாக அல்சர் என்னும் பகுதியும் இதில் விவரித்திருக்கிறார்.
கண் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் கண்ணில் ஈரப்பசை இருக்க வேண்டும். இதற்கு தான் இமைகள் அடிக்கடி மோடி திறக்கின்றோம். பொதுவாக ஒரு நிமிடத்தில் 12 முறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணியாற்றுகிறவர்கள் ஐந்து முறை தான் சிமிட்டுகிறார்கள். இதனால் கண்கள் வறண்டு விடுகின்றன சோர்வடைகின்றன. எரிச்சல், உறுத்தல் தலைவலி போன்ற தொல்லைகள் வருகின்றன. இதற்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ரோம் என்று பெயர். இதனை தவிர்க்க 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடி தள்ளி இருக்கின்ற பொருளை 20 வினாடிகளுக்கு பார்க்க வேண்டும் அல்லது அடிக்கடி இமைகளை இமைப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை தருகிறார்.
ஜலதோஷம் என்பது வைரஸ் தாக்குதலால் நடைபெறுகிறது. இதனை குணப்படுத்த நேரடி மருந்து இல்லை. இது தானாகவே குணமடைந்து விடும். இதனால் தான் ஜலதோஷம் என்பது 'மருந்து சாப்பிட்டால் ஏழு நாட்களிலும் மருந்து சாப்பிடாவிட்டால் ஒரு வாரத்திலும் குணமாகும்' என்று சொல்வார்கள். இதற்கு அடுத்த கட்ட விளைவுகளை தலைவலி காய்ச்சல் போன்றவற்றை மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும். பாக்டீரியா தொற்று காரணமாக ஜலதோஷம் ஏற்படுமானால் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் மூக்கு சளி ஒழுகும். இதற்கு ஆன்டிபயாட்டிக் சிகிச்சை உதவும் என்கிறார்.
காதுக்குள் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே நாம் பட்ஸ் வச்சு தான் முயல்கிறோம். இவ்வாறு பட்ஸ் எடுத்து குறும்பியை அகற்ற முயற்சித்தால் குறும்பி மேலும் உள்ளே தள்ளிவடும். தவிர வெளியே வராது. ஆகவே பட்ஸ் மற்றும் இதர சாவிகளை காதுனுள் நுழைக்க வேண்டாம் என்கிறார். பூச்சி எறும்பு ஏதேனும் காதினுள் சென்று விட்டால் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சில சொட்டுக்கள் விட்டால் பூச்சி இறந்து விடும் பிறகு சில சொட்டுக்கள் தண்ணீர் விட்டு தலையை சாய்த்தால் பூச்சி வெளியில் வந்து விடும் என்கிறார். காய்ச்சி என்னை கண்டிப்பாக காதலர் ஊற்றக்கூடாது என எச்சரிக்கிறார்.
பொதுவாக பெண்களுக்கு முடி வளர்வது மூன்று பருவங்களில் நடைபெறுகிறது .அனாஜன் என்பது ஒரு முடியானது தினசரியாக அரை மில்லி மீட்டர் நீளத்துக்கு வளர்கிறது .இந்த வளர்ச்சி மூணு முதல் ஏழு வருடங்கள் வரை நீடிக்கும். இதை தீர்மானிப்பது பரம்பரையில் வரும் மரபு அணுக்கள் .அடுத்தது கேட்டாஜன் என்ற பருவம். இதில் முடி இரண்டு வாரங்களுக்கு உதிர ஆரம்பிக்கும். மூன்றாவது பருவம் டீலாஜன் இது முடி ஓய்வெடுக்கும் பருவம். உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும். தலையில் இருக்கும் முடியின் ஆயுட்காலம் 94 வாரம். வயதானவர்களுக்கு 17 வாரங்களுக்கு கூட குறைந்துவிடும் என்கிறார். தினசரியாக சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. பெண்கள் தலை சீவும்போது 20 முடிகள் வரை கழிந்தால் கவலைப்பட வேண்டாம். இதற்கு மேல் முடி உதிர்வது இருந்தால் அதை கவனிக்க வேண்டும் என்கிறார். பொதுவாக முடி உதிர்வது ஊட்டச்சத்து குறைபாடு முக்கிய காரணமாக இருக்கிறது.
மூட்டு தேய்மானத்தை அறிவதைப் பற்றி சொல்லும்போது சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு எழுந்து நில்லுங்கள் மூட்டு பிடிப்பது போல் இருக்கிறதா? கொஞ்ச தூரம் நடந்து செல்லுங்கள் அந்த பிடிப்பு விட்டது போல இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு மூட்டு தேய்மானம் ஆரம்பமானது. மூட்டு தேய்மானம் வயதினை போல் அதை தடுக்க முடியாது. ஆனால் தள்ளிப் போடலாம். உடலுக்கு ஏற்ற எடையை பராமரிப்பது மிக முக்கிய பங்கு வைக்கிறது. புரதச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவதால் எலும்புகளை பலப்படுத்தலாம் என ஆலோசனை சொல்கிறார்.
ஒரு சாமானிய மக்கள் அன்றாடம் கடந்து செல்லும் விஷயங்களை அதற்கான மருத்துவ காரணங்களை கூறி எவ்வாறு சரி செய்யலாம் என்பதை இயல்பாக நமக்கு சொல்லித் தருகிறார். ஒவ்வொரு உறுப்புகளை பற்றியும் அறிய முடிகிறது. அதன் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள முடிகிறது. புதிதாக ஒரு விஷயம் தெரிந்து கொள்ளும்போது அந்த புத்தகத்தின் மேல் ஒரு மதிப்பு வருகிறது நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தருகிறது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment