தருணம்
தயங்கித் தயங்கி வருகிறாய்
அலுப்போடே அமர்கிறாய்
பெருமையடித்துக்கொள்வதாக நினைத்துவிடக் கூடாதென்று
உன் சாதனைகளைச் சலிப்போடு சொல்கிறாய் என்
கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்வதுபோல்
மிகைப்பரிவு காட்டுகிறாய்
எப்போதையும்விட அன்பாய் இருப்பதாய் என் வாழ்வியல் நெருக்கடிகளுக்காக நெகிழ்கிறாய் இருப்பினும்
உன்னிடம் கை நீட்டிவிடாதவாறு
எதிர்பாராது உனக்கு வந்த கஷ்டங்களை
எடுத்துரைக்கிறாய் வக்கற்ற
வாழ்வின் நிதர்சனங்களைவிட
கொடுமையானது
கையேந்திவிடுவானோ என்று
எச்சரிக்கை கொள்பவனை எதிர்கொள்வது இத்தகைய
தருணத்தை என்ன
செய்து கடப்பது என் நண்பனே.
-நீலகண்டன் முனுசாமி
No comments:
Post a Comment