#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055
புத்தகம்-50
பக்கங்கள் -330
நாள்-28
நல்லவை நாற்பது
-இரா மோகன், நிர்மலா மோகன்
நல்ல ஆராய் காண்பதும் நன்றே நல்லார் சொல் கேட்பதும் நன்றே என்பார்கள் நல்ல விஷயங்களை நாம் தேடித்தேடி செல்லும்போது தான் நல்ல விஷயங்கள் மென்மேலும் நம்மை வந்து சேர்ந்து கொண்டே இருக்கும். இந்த நூலில் தான் வாசித்த சந்தித்த சிந்திக்க வைக்கும் கட்டுரைகள் பலவும் எழுதி உள்ளார் இரா மோகன அவர்கள். இந்தக் கட்டுரைகள் யாவும் மனிதனின் ஆளுமை வளர்வதற்காகவும், கல்வி குறித்தும், சிந்தனை குறித்தும் ,நகைச்சுவை குறித்தும் உள்ள 40 குறும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அருளாளர்கள், தமிழ் சான்றோர்கள், கவிஞர்கள், வெள்ளித்திரை வித்தகர்கள் ,தமிழ் உலா, விழுமிய பேழை என ஆறு அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒருமுறை உடல் நலக் கறைவு காரணமாக அண்ணன் சபாபதியால் சொற்பொழிவாற்றச் செல்ல முடியவில்லை. அதற்கு மாற்றாக தன் தம்பியை சென்னையில் வாழ்ந்த சோமு என்ற செல்வரின் வீட்டில் பெரிய புராணத்தில் ஒரு பாடலை மூன்று மணி நேரம் விரிவுரை ஆற்றினார். சொற்பொழிவை கேட்ட அனைவரும் மெய்மறந்து அருமை என்று பாராட்டினர் .தொடர்ந்து சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டனர். படிக்காத தன் தம்பிக்கு எவ்வாறு இவ்வாறு வியத்தகு ஆற்றல் வந்தது முருகப்பெருமான்தான் நம்முடைய தம்பியாக வந்து பிறந்துள்ளார் என்று எண்ணினார் அண்ணன். அந்தத் தம்பி தான் வள்ளலார் அவர்கள் 12 ஆம் வயதில் முறையான ஞான வாழ்க்கையை தொடங்கினார்.
ஒரு கருத்தை எடுத்துக் கொள் அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காணும் அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. உடலில் உள்ள அனைத்து பாகங்களும் அந்த ஒரு கருத்தே நிறைந்து இருக்கட்டும். அந்த நிலையில் மற்ற எல்லா கருத்துக்களையும் தவிர்த்து விடு. இதுதான் வெற்றிக்கு சிறந்த வழி என்கிறார் விவேகானந்தர் .அச்சமே மரணம் அச்சத்துக்கு அப்பால் நீ போக வேண்டும் என்பது விவேகானந்தர் வலியுறுத்திய கருத்துகளில் முக்கியமானது. இவ்வாறு இளைஞர்களுக்கு பல்வேறு ஆக்கப்பூர்வ சிந்தனைகளை அவர் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ரோமானிய பேரரசர் மார்க்ஸ் அரேசியின் ஆத்ம சிந்தனை என்ற நூலை தமிழில் ராஜாஜி அவர்கள் மொழி பெயர்த்தார்." திடீரென்று ஒருவர் நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டால் உடனே தயங்காமல் உள்ளதை உள்ளபடியே இதை நினைத்தேன். இது என் மனதில் உள்ள எண்ணம்.. என்று எளிதாக சொல்லக் கூடிய வகையில் மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறருக்கு சொல்ல தகாத எண்ணங்களை விட்டொழிக்க வேண்டும் என்பது ராஜாஜி மொழி பெயர்த்த திறனுக்கு சிறப்பாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
ஆங்கில சொற்பொழிவாளர்கள் போல தமிழில் பிறவி சொற்பொழிவாளர்களாக உணரச் செய்தவர்களை திருவிக்கவும் ஒருவர் மேடைப்பேச்சுகளையும் தந்தை என இவரை சொல்லலாம் ஒட்டுமொத்த அவையினரையும் தம் உயர்ந்த நிலைக்கு கூட்டிச் செல்லும் அளப்பரிய ஆற்றல் அவரிடம் இருந்ததாக பாராட்டுரை தெரிவித்துள்ளார். நகைச்சுவை வேறு என் நையாண்டி வேறு என்பார் கி ஆ.பெ விசுவநாதம் அவர்கள் .நகைச்சுவை அறிஞர்களை மகிழ்விக்கும் நையாண்டி மற்றவர்களை மகிழ்விக்கும் .ஒருவர் கூறியது நகைச்சுவையான நையாண்டியா என்பது அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தவர்கள் அறிஞர்களா, மற்றவர்களா என்பதை வைத்து அறிந்து கொள்ளலாம் என்று கூறுகிறார்.
சுரதா குறித்து பெருமாள் முருகன் அவர்கள் தெரிவித்த கருத்து.. "தெரியாத ஒன்றை உணர்த்த நன்கு தெரிந்த ஒன்றை சொல்லி விளக்க தோன்றியது தான் உவமை .சுரதா நன்கு தெரிந்த ஒன்றுக்கு யாருக்குமே தெரியாத ஒன்றை உவமையாக்குவார். அறிய செய்திகளை உவமையாக்கி உவமைக்கு உரிய இலக்கணத்தை மீறியவர் என்பதாலேயே அவருக்கு பட்டம் மிகவும் பொருந்துகிறது என்று கூறுகிறார்.
நேரு அவர்கள் பஞ்சசீலக் கொள்கையை நினைவூட்டுவது போல் பட்டுக்கோட்டையார் தம் திரைப்பட பாடல்களில் பெரிதும் வலியுறுத்தி பாடி இருக்கும் கொள்கைகள் ஐந்து அவை.
"அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டை தொட்டிட வேண்டும், உழைத்தால் தான் பற்றாக்குறையை ஒழிக்க முடியும், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, தனி உடைமை கொடுமைகள் தீர தொண்டு செய்திட வேண்டும், நல்லவர்கள் ஒன்றாய் இணைந்திட வேண்டும எனத் திரைப்படப் பாடல்களில நல்ல கொள்கைகளை வகுத்து பின்னால் வரும் பாடல் ஆசிரியருக்கு முன்னுதாரணமாய் விளங்கி இருப்பார் நமது பட்டுக்கோட்டையார் அவர்கள்.
இயல்பான நகைச்சுவை உணர்வினை புதுக்கவிதை ஒன்றில் பெ சிதம்பரநாதனின் மாமனாரும் சிலப்பதிகாரமும் கவிதையை சுட்டிக் காட்டுகிறார். அதில் கோவலன் கள்வன் என குற்றம் சாட்டப்பட்டு கொலை உண்டதும் பாண்டியன் மாண்டதும் கண்ணகி விண்ணுலகை சென்றதும் மாதவி மணிமேகலையுடன் துறவு பூண்டதும் என துயரம் எல்லாம் சொல்லிக் கொண்டு வந்த போது மாமனார் தன் மருமகனிடத்தில் இப்படி விளக்கினாராம். எல்லாம் எதனால் என்று மருமகன் இடத்தில் மாமனார் விளக்கினார்
"மனைவியின் நகையை பெற்றதால் தானே?" ஆயிரம் தான் இருந்தாலும் நகை மாமனார் அரும்பாடு பட்டு தேடிய செல்வத்தில் செய்து போட்டது மாமனாரின் பார்வையே தனிப்பட்டது தன் என புதுக்கவிதியில் புதிய சிந்தனையை தொட்டிருப்பார்.
கலைவாணர் என்பவர் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் கற்றுக் கொடுத்தவர் என்று எல்லாரும் சொல்கிறார்கள். அதற்கு உதாரணமாக ஒரு கருத்தினை இங்கே பதிவிடுகிறார். கலைவாணர் பெண்கள் கூட்டம் ஒன்றில் பேசும் போது நீங்கள் அனைவரும் ஒவ்வொரு பூ வைத்துள்ளீர்கள்.. அதனால் பூவையர் என்றும் சொல்வார்கள். இந்த பூக்கள் எல்லாம் இன்று வைத்தால் மாலை வாடி விடும். ஒரே ஒரு பூ வாடாமல் வளரும் அது என்னவோ? என்று கேட்டதும் அனைத்து பெண்களும் ஒரே குரலில் சிரிப்பு என்றனர். கலைவாணர் அதுதான் இல்லை. இந்த பூ எப்போதும் நிற்காமல் தடைபடாமல் வளர்ந்து கொண்டே இருக்கும் பூ சேமிப்பூ என்றார். பெண்களுக்கு இருக்க வேண்டிய முக்கிய குணங்களில் சேமிப்பும் ஒன்று என்று வலியுறுத்த இதனை கூறியிருப்பார்.
இந்நூல்களில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஒன்றரை பக்கத்துக்கு மிகாமல் இருக்கும். ஆனால் அது தலைப்பு கேற்ற செய்தியை தாங்கி இருக்கும். கேள்விப்படாத அரிய தகவல்களை தொகுத்து தந்திருப்பார் ஆசிரியர் இரா மோகனும் பேராசிரியர் நிர்மலா மோகனும்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment