Friday, 4 April 2025
ஒருவர் காட்டுக்குச் சென்றால், அங்கு மரங்கள் சீராக நேர்க்கோட்டில் வளராமல், இங்குமங்கும் வளர்ந்திருப்பதாக, குற்றம் சாட்டுவதில்லை. ஒருவர், கடற்கரைக்குச் சென்றால், அங்கு அலைகள் நேர்த்தியாக எழும்புவதில்லை என்று புகார் அளிப்பதில்லை.ஒருவர் வானில் இருக்கும் மேகங்களைப் பார்த்து ஏன் மேகங்கள் ஒரே விதமாக, நேர்த்தியாக இல்லாமல் வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கறது என்று வருத்தப்படுவதில்லை.அப்படியிருக்க, நாம் ஏன் நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் எல்லா விஷயங்களிலும் மிகச் சரியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்?ஒழுங்கின்மை இயற்கையின் இயல்பு. அந்த ஒழுங்கின்மை தான் தனித்துவமுமாகிறது. - லாவோட்சு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment