Saturday, 21 June 2025

82



#Reading_Marathon2025
#25RM055

#12மாதம்_ஒரு_எழுத்தாளர்

Book No:82/100+
Pages:-199

காதல் சரி என்றால் சாதி தப்பு
-பெருமாள் முருகன்

ஜாதி அனைத்து இடங்களிலும் ஒளிந்துள்ளது படித்த ஆசிரியர்களின்
ஒவ்வொருவரின் முதுக்குக்கு பின்னும் ஜாதி ஒளிந்துள்ளது. அதிகாரமும் அரசியலும் கமுக்கமாக ஒளிந்திருக்கும்.சாதிய சமூகத்தில் சகமனிதனை அந்நியப்படுத்தும் வித்தை இருக்கும். புதிதாக ஒருவரை சந்திக்க நேர்ந்தால் நம்மை அறியாமலேயே அவர் ஜாதியை மனம் ஆராய ஆரம்பிக்கிறது. ஏதாவது ஒரு வகையில் ஜாதியை உறுதிப்படுத்தியதும் இணக்கமாக பெரும்பான்மையோ சுயசாதியை சேர்ந்தவராக இருக்க வாய்ப்பு இல்லாமல் போகிறது அப்போது பொதுவெளி கொள்ளும் சிலரை மட்டும் கொண்ட தனி வலியை உருவாக்கி நிம்மதி அடைகிறது.

மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவில் தமிழ் ஆசிரியர் ஒருவர் நியமிக்க நியமனம் செய்வதை அறிந்து அறிவியல் அறிஞர்களை நியமிக்காமல் தமிழ் ஆசிரியர்களை பண்டிட்களை ஏன் நியமிக்க வேண்டும் என்ற கருதும் மனப்பான்மை குறித்த விளக்கத்துடன் முதல் கட்டுரை துவங்குகிறது. தமிழ் ஆசிரியர்கள் என்றாலே சமூகத்தில் ஏளனம் காணப்படும் சூழலை தக்க உதாரணங்களுடன் வெளிப்படுத்துகிறார். 

பள்ளிகளுக்குள்ளும் தன் ஜாதி ஆசிரியர் யார் என்பதை மாணவர்கள் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளனர். இவ்வாறு ஜாதி எவ்வாறு பள்ளிகளில் ஆக்கிரமித்துள்ளது ஒவ்வொரு இடங்களிலும் ஜாதி எவ்வாறு எல்லாம் நுழைந்துள்ளது என்பதனை கூறுகிறார்.

காதலை ஒரு மனிதனின் அடிப்படை உணர்வாகவும், சாதியை சமூக கட்டமைப்பாகவும் பார்க்கிறார். காதலில், இருவர் ஒருவருக்கொருவர் பிணைந்து, அன்பு செலுத்துகிறார்கள், ஆனால் சாதி என்பது ஒருவரை ஒருவர் பிரித்து, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது. எனவே, காதலின் அடிப்படையில் சாதி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறுகிறார்

கல்லூரியில் பணியாற்றும் முதல்வர் பொறுப்பு என்பது கல்லூரியில் மிகப்பெரிய பொறுப்பாகும். ஆனால் அப் பொறுப்புகளில் பணியமர்த்தப்படுபவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன் ஓராண்டு ஆறு மாதம் என்ற நிலையில் தான் அமர்த்தப்படுகின்றனர். அவர்களும் தங்கள் ஓய்வூதியத்தை பெரும் பொருட்டு எந்த ஒரு முன் நடவடிக்கைகள் வளர்ச்சிக்குரிய திட்டங்கள் எதனையும் செயல்படுத்தாது அவ்வாறே பணி ஓய்வு பெற்று விடுகின்றனர் என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தி இருப்பார். மேலும் தாம் முதல்வராக இருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களையும் சுவாரசியமாய் இதில் கொடுத்திருப்பார்.

உண்மையில் அதிகாரம் பயன்படுத்த வேண்டிய விதத்தில் பயன்படுத்தப்படும் போது சமூகத்தில் விரும்பத்தக்க மாற்றங்கள் நிகழும். ஆனால் அந்த அதிகாரம் மற்றவர்களை சிறுமைப்படுத்த பயன்படுத்தப்படும் போது நடப்பது  சிறந்த நிலையை அடைவதை தடுக்கும் வேகத்தடைகளாக உள்ளன. 

இதில் மாணவர்களைச் சமாளிப்பது எளிது. ஆனால் மாணவர் பிரச்சினை காளான் போல அங்கங்கே முளைத்துக் கொண்டேயிருக்கும். ‘வெட்ட வெட்டத் தழையும்’ என்பார்களே, அதுமாதிரி. ஓடும் வாய்க்காலில் ஒரு உடைப்பை அடைத்தால் பத்து உடைப்புகள் ஏற்படும். ஒவ்வொருவரின் பின்னும் சாதி அடையாளம் தெளிவாக இருக்கும். சாதி கடந்த நட்பைச் சாத்தியப்படுத்த இயலாத காலம் இது. ஒருகுழுவாக மாணவர் சேர்ந்திருந்தால் எல்லோரும் ஒரேசாதி என்று அனுமானிப்பது பெரும்பாலும் தவறாகாது. இன்னொரு குழு வேறுசாதி என்பதாலேயே இருகுழுக்களுக்கும் பகை மூண்டுவிடும். என்ற நிதர்சனத்தை முன்னோர்கள் நமக்கு தந்திருப்பார் ஆசிரியர் பெருமாள் முருகன் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment