ஒரு ஊர்ல ஒருத்தர் மெயின் ரோட்ல சின்ன கடை நடத்தி வந்தாரு.
ஒரு நாள் திடீர்னு எதிர்பக்கம் பெரிய கடை முளைச்சது.
அந்த புதுக் கடை ஓனர் " நெய் 1 கிலோ 300 ரூபாய்"னு போர்டு வெச்சாரு.
இந்த ஆளு பார்த்தான். " நெய் 1 கிலோ
280 ரூபாய்""னு போர்டு வெச்சான்.
இதை பார்த்த பெரிய கடை ஓனர்
"நெய் 1 கிலோ 260 ரூபாய்"னு "னு போர்டு வெச்சாரு.
இவன் விடுவானா? " நெய் 1 கிலோ 240 ரூபாய்" என்னு போர்டு வெச்சான்.
அவர் 200 ரூபாய் என்று போர்டு வைத்தார்.
இவனுங்க ரெண்டு பேரு போட்டியையும் பார்த்த ரொம்ப பெரியவர் ஒருத்தரு சின்ன கடை ஓனர்கிட்ட வந்து
"இதோ பாருப்பா.... நான் சொல்றேன் கேளு. உன்னாலலாம் பெரிய கடை கூட போட்டி போட முடியாது. அவனால நஷ்டத்தை தாங்கிக்க முடியும். உன்னால முடியாது. அதனால இந்த போட்டியை நிப்பாட்டிக்கோன்னு அட்வைஸ் பண்ணாரு.
இந்த ஆளு அவரை உச்சியிலிருந்து பாதம் வரை உத்து பார்த்துட்டு
எல்லாம் சரிங்க. நான்தான் நெய் விக்கறதே இல்லியே. அந்த பெரிய கடை எவ்வளவுதான் விலை குறைக்கிறான்னு
பார்ப்போம்னு சும்மா போட்டி போட்டேன்.
அவன் விலையை குறைக்கும் போதெல்லாம் என் பொண்டாட்டி இன்னும் ஊர் மக்கள் அங்க போய்
கம்மி விலையில நெய்
வாங்கட்டும்னு நான் செய்தேன்.
அப்போ டமால்னு ஒரு சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தா அந்த பெரியவர் மயக்கம் போட்டு விழுந்து கிடந்தாரு!!!
No comments:
Post a Comment