ஒரு சிலர் அடிக்கடி வீட்டை சுத்தம் செய்வாங்க, பொருளை துடைச்சிக்கிட்டே இருப்பாங்க.
அது ஒரு மனநோய். பெரும்பாலும், எதாவது ஒரு பெரிய தவறு செய்தவங்க அந்த guilty conscious ல இருந்து தப்பிக்க கையை கழுவிகிட்டே இருக்கிறது... வீட்டை துடைச்சுக்கிட்டே இருக்கிறது...
இப்படி over ஆ சுத்தம் செய்யறது மூலமா தான் செய்த தவறு போய்டுச்சு நாம இப்போ சுத்தமா தான் இருக்கோம் அந்த தப்பு என்கிற அழுக்கை நாம துடைச்சுட்டோம் என்பது போன்ற உளவியல் சிக்கல்ல மாட்டிப்பாங்க. இதே தான் "அதீதமா" தன்னை பக்திமானா காட்டிக்கிறவங்க கிட்டயும் இருக்கு அப்படின்னு நினைக்கறேன்.
Shakespeare எழுதிய Macbeth கதையில் வரும் Lady Macbeth தன்னுடைய கணவனை Scotland ராஜாவை கொல்லும்படி தூண்டிவிடுவாங்க அதன் பின்னர் அந்த குற்ற உணர்வை போக்க திரும்ப திரும்ப கையை கழுவி கொண்டு இருப்பாங்க.
அதனால் இது போல ஒரு தவறு செய்து, அதன் குற்ற உணர்வு காரணமாக சுத்தமாக இருக்க விழைவதை (compulsive washer)Lady Macbeth Effect என்று சொல்கிறார்கள்.
தான் செய்தது பெரிய தவறு என்று அவர்களுக்குள் உருவாகும் ஒரு guilty conscience தான் நான் சொல்ல வருவது. அவர்கள் செய்தது சின்ன விஷயமாக கூட இருக்கலாம் அல்லது அவர்கள் தவறே இல்லாமல் கூட இருக்கலாம்.
இதுவே பலரை கொலை செய்த ஒருவனுக்கு அதை பற்றிய குற்ற உணர்வு இல்லை என்றால் அது அவனை பாதிப்பது இல்லை. இங்க keyword குற்றவுணர்வு. இந்த lucifer series நீங்க பார்த்து இருப்பீங்க அதுல நாம நரகத்திற்கு போகும்போது நாம் எதை நினைத்து குற்ற உணர்வு அடைகிறோமோ அது தான் நம்மை அங்கு வதைக்கும்.
எதோ ஒரு விஷயம் உங்களை பாதித்து இருக்கிறது அதை மடைமாற்ற ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப செய்து கொண்டு இருக்கிறீர்கள் உங்களை அறியாமலே. அது தான். Lady Macbeth Effect
நற்காலை
No comments:
Post a Comment