ஒரு ஜென் விளக்கம் கவிதையைப் பாதி திறந்த கதவு என்கிறது. உண்மைதான். மூடியிருந்தாலோ, முழுக்கத் திறந்திருந்தாலோ பார்த்துவிட்டோ அல்லது பார்க்காமலோ நாம் கடந்துவிடலாம். ஆனால் பாதி திறந்த கதவு மீதியைப் பற்றிய தீராத யூகத்தில் நம்மை நிறுத்திவிடுகிறது.
கவிதையில் இயங்கும் சொற்கள் தமக்கென்று
தனித்த ஒளியும் நிழலும் கொண்டிருப்பவை.ஒரு தேர்ந்த புகைப்பட நிபுணன் வெளிச்சத்தை கையாளுவதைப் போலவே கவிஞனும் சொற்களைப் பயன்படுத்துகிறான்.ஒரு நல்ல கவிதையில் பிரகாசமாகத் தெரியம் அர்த்தத்திற்கு அடியில் அறுதியிட்டுக் கூறமுடியாத உணர்வுகளின் நிழல்கள் தேங்கியிருப்பதைக் காணலாம்
-மோகனரங்கன்
No comments:
Post a Comment