Tuesday, 3 January 2023

மணி


பனி உறைந்த குளிர்காலத்தில் சாலையில் ஒரு முதியவர் நடந்து கொண்டிருந்தார். "உங்களுக்கு இவ்வளவு மோசமான குளிரில் எப்படி நீங்கள் அந்த இடத்தை அடைவீர்கள் என்று ஒருவர் கேட்டார்.

"என் இதயம் முன்பே அங்கு சென்று விட்டது அதனால் மீதமுள்ள நான் அதை தொடர்ந்து செல்வது சுலபமாக இருக்கிறது என்றார் அந்த முதியவர்.

 நம் ஒவ்வொருவருக்குள்ளும் தடைகளை தகர்த்துக் கொண்டு முன்னேறி வெற்றியடைவதற்குரிய வியக்கத் தகுந்த ஆற்றல் நிறைந்திருக்கிறது. அது, சிரமங்களை எதிர்கொண்டு அவற்றை தகர்க்க கூடிய ஆற்றல். அந்த அளவற்ற ஆற்றலை ஒருங்கிணைக்கும் செயலை மட்டும் நாம் செய்தால் போதுமானது

-நற்காலை

No comments:

Post a Comment