Tuesday, 24 January 2023

கற்கை நன்றே-7*மணி



புரிதல் என்பது ஞானத்தின் திறவுகோல்

புரிதல் என்பது தற்காலத்தில் மிக முக்கியமானது.புரிதலையும் புரிந்து கொள்ளும் உணர்வும் உடனே வருவதில்லை.அதற்கு துணிவும் மாறும் மனமும் தேவை. அதனாலேயே பலர் புரிதலை விட்டு ஓடிவிடுகின்றனர்.

ஓஷோவின் கதை ஒன்று.. ஒரு பணக்காரர் சந்தையில் ஒரு கிளி வாங்கி வந்தார்.அது அழகாய் பேசும். அவருக்கு மூன்று அறிவுரைகளை சொன்னது.ஒன்று "அபத்தம் எதையும் நம்பாதே", இரண்டு " என்ன வேண்டுமானாலும் செய் ஆனால் முடியாததை செய்யாதே", மூன்று நல்ல செயலுக்கு வருந்தாதே, கெட்டதுசெய்தால் மனம் வருந்து". இதை கேட்டவுடன் அதனை மகிழ்ச்சியுடன் பறக்கவிட்டார்.

பின்னர் அந்த கிளி மரத்தில் அமர்ந்து முட்டாளே என் வயிற்றில் வைரக்கல் இருக்கிறது என்னை பறக்கவிட்டாயே..என்று கூறியவுடன் இவருக்கு ஆசை வந்து பிடிக்க முயன்று கீழே விழுந்து கிடந்தார். அப்போது கிளி மீண்டும் வந்தது. வயிற்றில் வைரம் இருந்தால் அறுத்துவிடுமே ஆகவே "அபத்தங்களை நம்பாதே", இரண்டு..செய்ய முடியாததைசெய்து கீழே விழுந்தாய்,மூன்று என்னை பறக்கவிட்டு வருந்தினாய்..எனக் கூறி பறந்தது.

மற்றொன்று

பாரசீகத்தின் மன்னர் இளவரசனுக்கு கல்வி கற்பதற்கு ஒரு குருவை
நியமித்தார் .ஒரு நாள் அந்த குரு எந்த தவறும் செய்யாத இளவரசனை கடுமையாகத் திட்டி அவமானப்படுத்திவிட்டார் .முதுகில் ஓர் கடுமையான அடியும் விழுந்தது .

அன்றிலிருந்து இளவரசனுக்கு ஆசானின் மீது வெறுப்பு ஏற்பட்டது .அந்த அவமானம் அவர் நெஞ்சில் உறைந்து விட்டது.
இளவரசர் வளர்ந்தார் .தந்தைக்குப் பிறகு சிம்மாசனம் ஏறினார்.

குருவை வர செய்தார் .
அன்று எந்த தவறும் செய்யாமல் ஏன் என்னை அநியாயமாக அடித்தீர்கள் என்று கேட்டார்.

பாதுஷா அவர்களே ஒரு நாள் சிம்மாசனத்தில் அமர போகிறீர்கள் என்பதும் எனக்குதெரியும் .அப்போது நீங்கள் நீதி பரிபாலனமும் செய்வீர்கள் பல வழக்குகள் உங்கள் முன் வரும். ஒன்றும் தவறு செய்யாத அப்பாவிகளும் உங்கள் முன் குற்றம் சுமத்தி நிறுத்தப்படுவார்கள். தவறு செய்யாமல் ஒருவர் தண்டிக்கப்பட்டால் அது எவ்வளவு வலியைத் தரும் என்பதை உணர்ந்தால்தான் அதுபோல தவறான நீதியை வழங்க மாட்டார்கள். எனவே அநீதியின் சுவையை நீங்கள் அறியவேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு செயலை நான் செய்தேன்.

புரிந்துணர்வு லேசானது .அதை சுமக்க வேண்டியதில்லை.அது உங்கள் இரத்தமும் சதையுமாக மாறும்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment