பெரிய உலகத்துக்குள்
அத்தனைச் சிறிய
திருகாணி
தொலைகிறது.
இத்தனைப் பெரிய
உலகத்துக்குள்
அத்தனைச் சிறிய
திருகாணி
திரும்பக் கிடைக்கிறது.
.
.
தொலைந்த திருகாணியை
கண்டடைந்த கணத்தில்
அத்தனைப் பெரிதாய்
தன்னியல்பின் உருவுக்கு
சட்டென விரிந்துவிடுகிறது.
பூமி.
-ஜெயாபுதீன்.
No comments:
Post a Comment