Friday, 13 January 2023

ஜெயாபுதீன்


பெரிய உலகத்துக்குள் 
அத்தனைச் சிறிய 
திருகாணி
தொலைகிறது.

இத்தனைப் பெரிய 
உலகத்துக்குள் 
அத்தனைச் சிறிய 
திருகாணி
திரும்பக் கிடைக்கிறது.
.
.
தொலைந்த திருகாணியை
கண்டடைந்த கணத்தில்
அத்தனைப் பெரிதாய்
தன்னியல்பின் உருவுக்கு
சட்டென விரிந்துவிடுகிறது.
பூமி.

-ஜெயாபுதீன்.

No comments:

Post a Comment