குழந்தைகள் உலகத்தில்
நுழைந்துகொள்வது
வேறெதைக் காட்டிலும்
அற்புதமானதாக இருக்கிறது.
வணக்கங்களோ
பாவனைகளோ பவ்யங்களோ
வேண்டியிராத
அவர்களுடனான சந்திப்புகள்
ஒரே அசௌகர்யம்
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில்
அவர்கள் வெளியேற்றி
விடுகிறார்கள் என்னை
என் அனுமதியில்லாமலேயே
-சல்மா
No comments:
Post a Comment