Sunday, 16 December 2018

மணிகண்ட பிரபு

[15/12, 2:17 pm] மணிகண்ட பிரபு: அறிந்த கழிப்பறைகள்
அத்தனையிலும்
உடைந்தே கிடக்கும்
நீரள்ளும் குவளைகள்
-யுகபாரதி

[15/12, 4:19 pm] மணிகண்ட பிரபு: பேய்க்கரும்பு

உங்களுக்குத் தெரியாது!
அப்போது
பார்க்கவும்
பழகவும்
இயலாதபோது
எண்ணவும்
ஏங்கவும்
அத்தனைத் தித்திப்பாக
இருந்தாள் .

கிட்டாது
கிட்டியதொரு தனிமையில்
அவளது
காதோடு வாய் கூட்டி
கட்டிக்கரும்பே என
முணுமுணுத்தேன்.

கேட்டும்
கேளாததுபோல
முகம்திரும்பியவள்
கிறுக்கா உனக்கென
கேலியாகச் சிரித்தாள்
அவ்வளவு மதுரமான சிரிப்பை
அடுத்தும் பார்க்க வாய்க்கவில்லை.
இடையில்
எழுதவும் கசப்பாய்
ஏதேதோ நிகழ்ந்துவிட்டது .

அலட்சியமாய்
அள்ளியெடுத்து ,
எதிரெதிராக சுழலும்
இரும்புச் சக்கரங்களுக்கு
நடுவே நுழைத்து
பிழிந்து உலரச் செய்த
விதியின் கரங்களையும்
அதன் பிடியில்
சிக்கி உழன்ற
நாட்களையும் கடந்து
வெகு தொலைவு
வந்துவிட்டேன்
என்றாலும் ,

சிந்திக்கிடக்கும்
இனிப்பைச் சுற்றிலும்
மொய்த்துக் கிறங்கும்
எறும்புகளைக் காணும்தோறும்
அடிநாக்கில் திரளும் கசப்பை
ஏனோ
தவிர்க்கமுடிவதில்லை
இப்போதும்

-மோகனரங்கன்

[15/12, 8:18 pm] மணிகண்ட பிரபு: நியாயப்படுத்திக் கொள்ள பழகிவிட்ட பின்... மனசாட்சியோடு பெரிதாய் பேச்சு வார்த்தை இல்லை

-படித்தது

[15/12, 8:22 pm] மணிகண்ட பிரபு: ‘அமைதி’ தான் வலிமையான பேச்சு. மெதுவாகவும், படிப்படியாகவும் உலகம் உங்களை கவனித்துக்கொள்ளும்.

-காந்தி

[15/12, 9:35 pm] மணிகண்ட பிரபு: மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்

பொய் போலுமே பொய்போலுமே

பொய்யுடை ஒருவன் சொல்வன்மையாலே

மெய் போலுமே மெய் போலுமே''

நேர்மையான ஒருவன் உண்மையான செய்தியை மேடையிலோ, எதிரில் இருப்பவர்களிடமோ எடுத்து சொல்ல இயலாதவனாக இருப்பானேயானால் அப்போது உண்மையும் பொய்யாகும். இதற்கு மாறாக பொய்மை குணமுடைய ஒருவன், பொய்யான செய்தியை தன் ஆற்றல் மிக்க பேச்சால் எடுத்துரைப்பானேயானால் பொய்யும் மெய்யாகும். அப்பொய்மையாளனும் போற்றப்படுவான். 

[16/12, 7:46 am] மணிகண்ட பிரபு: பஸ் நிறுத்தங்களில்
காத்திருக்கும் பார்வையில்
எந்த கணம்
எவளை பேரழிகியாக்கும்
என்பது நிச்சயங்களற்றது
-பிரான்சிஸ் கிருபா

[16/12, 8:12 am] மணிகண்ட பிரபு: தேடலின் அர்த்தம்
தொலைந்ததில் அல்ல
தொலைவில்.

-கல்யாண்ஜி

[16/12, 8:18 am] மணிகண்ட பிரபு: ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்து ஒன்றாம் புலவர்

வார்த்தை பதினாயிரத்து ஒருவர்”

-ஒளவையார்

கற்றறிந்த அறிஞர்கள் கூடியிருக்கும் உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி நூறுபேரில் ஒருவருக்கே வாய்க்கும்.

[16/12, 8:32 am] மணிகண்ட பிரபு: தன்னைச் சொல்லிக்கொள்ள முடியாத இடத்தில் வெகுநேரம் நிற்பது சுலபமில்லை

-யவனிகா ஸ்ரீராம்

No comments:

Post a Comment